வரவே வராது என்று நீங்கள் நினைத்திருந்த பணம் கூட இந்த மூட்டையை வீட்டில் கட்டுவதன் மூலம் உங்களை தேடி வந்துவிடும்.

lakshmi money mootai
- Advertisement -

பணம் என்ற ஒன்று நம்மிடம் அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, அதனால் நமக்கு பிரச்சனை என்பது ஏற்படும். ஆம் நம்முடைய தேவைக்கு ஏற்ற அளவைவிட குறைவாக இருந்தால் நாம் பிறரிடம் இருந்து கடன் வாங்குவோம். அதே போல் நம் தேவைக்கு மீறி அதிகமாக இருக்கும் பொழுது பிறருக்கு நாம் கடன் கொடுப்போம். இதை உதவி நோக்கத்தில் செய்தாலும் சரி வருமான நோக்கத்தில் செய்தாலும் சரி எப்படி செய்தாலும் அதனால் நமக்கு பிரச்சனை என்பது வரத்தான் செய்யும். நம்முடைய பணம் நம்மிடமே இருக்கும் வரை அதனால் நமக்கு எந்த பிரச்சினையும் வராது. அதை தவிர்த்து விட்டு பிறரிடம் நாம் கொடுத்தோம் என்றால் அது திரும்ப வருமோ வராதோ என்ற பயத்துடன் இருக்க வேண்டியதாக இருக்கும். அப்படி வரவே வராது என்று நாம் கொடுத்த கடன் கூட நம்மை தேடி வருவதற்குரிய எளிய பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் அன்பை முறிக்கும் என்று கூறுவார்கள். நம் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று யாரிடமிருந்தாவது நம்முடைய தேவைக்காக பணத்தை வாங்கினாலும், அவர்களின் தேவைக்காக பணத்தை கொடுத்தாலும் அதனால் அந்த உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படும் என்பது உண்மை. நண்பர்கள், உறவினர்கள் என்று எண்ணி அவர்களிடம் நம்மால் கடிந்து எதையும் கேட்க முடியாமல் இருப்போம். சிலரோ நம்மிடமிருந்து பணத்தை வாங்கி விட்டு எங்கே சென்றார்கள் என்று கூட தெரியாத அளவிற்கு போய்விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த எளிய பரிகாரத்தை நாம் செய்தோம் என்றால் அவர்களே நம்மை தேடி வந்து நம் பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு நமக்கு மூன்று பொருட்கள் தேவைப்படும். முதலில் உப்பு, உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. உப்பை நாம் முறையாக பயன்படுத்தினோம் என்றால் நமக்கு பணவரவு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இரண்டாவது ஆக நாம் எடுத்துக் கொள்ளப் போகும் பொருள் வெந்தயம். வெந்தயம் என்பது செவ்வாய்க்குரிய பொருளாக கருதப்படுகிறது. செவ்வாய் என்றாலே அவர்தான் கடனுக்குரிய கிரகமாக கருதப்படுகிறார்.

மூன்றாவதாக நாம் எடுக்கக்கூடிய பொருள் கருப்பு எள். கருப்பு எள் என்பது சனீஸ்வர பகவானுக்குரிய பொருளாக கருதப்படுகிறது. எந்த ஒரு ஜாதகத்தில் செவ்வாயும், சனியும் சரியாக இல்லையோ அந்த ஜாதகத்தில் தான் இந்த கடன் பிரச்சனை என்பதே ஏற்படும். அதனால் அவர்களுக்கு உரிய பொருட்களை வைத்து நாம் பரிகாரம் செய்தோம் என்றால் அந்த கடன் பிரச்சினையில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும்.

- Advertisement -

இப்பொழுது இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை நிறம் என்பது சுக்கிரனின் அம்சத்தை குறிக்கக்கூடியது. சுக்கிரன் நமக்கு பணவரவை தரக்கூடிய கிரகமாக திகழ்கிறார் என்பதால் அவருக்குரிய நிறமான வெள்ளை நிற துணியில் நாம் பொடி செய்து வைத்திருக்கும் பொருட்களை அனைத்தையும் வைத்து ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த மூட்டையை நம் வீட்டின் தென்மேற்கு மூலையில் மேலே ஒரு ஆணியை அடித்து கட்டி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்மிடம் இருந்து வாங்கிய பணத்தை அவர்களே திரும்பக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: புத்தி கூர்மை பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி, அதிக மதிப்பெண்கள் பெற சரஸ்வதி தேவியை இந்த முறையில் வழிபட்டாலே போதும். சகல கலைகளையும் கற்று தேர்ச்சி பெறும் அறிவை அருள்வாள் கலைவாணி.

இந்த எளிய பரிகாரத்தை இல்லத்தில் செய்து வரவேண்டிய தொகை அனைத்தையும் பெற்று நிம்மதியுடன் வாழுங்கள்.

- Advertisement -