இப்படி குளித்தால் போதும் பொடுகு போய் விடும். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா. ஆமாங்க பொடுகு மறைய நீங்கள் இப்படி குளித்தால் மட்டும் போதும். அது எப்படின்னு பாக்கலாம் வாங்க.

- Advertisement -

தலையில் பொடுகு சேர பல காரணங்கள் இருந்தாலும், குறிப்பிட்டு சில காரணங்கள் என்று பார்த்தால் நம் தலை, முடி ஸ்டாப் அனைத்தையும் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய கால சூழல் அப்படி உள்ளது எங்கு பார்த்தாலும் தூசு, அழுக்கு போன்றவை அதிகரித்து விட்டபடியால் நாம் தான் நம்மை முடிந்த வரையிலும் சுத்தமாக பார்த்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடுகு தொல்லையை சரி செய்ய எந்த பொருளையும் தேய்க்காமல் நம் குளிக்கும் முறையை சற்று மாற்றும் பொழுது பொடுகிலிருந்து பெருமளவு விடுபடலாம். அது என்ன என்பதை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொடுகு வர முக்கியமான இந்த காரணங்களை முதலில் நாம் தவிர்க்க வேண்டும். தலையில் அதிகப்படியாக எண்ணெய் வைத்து விட்டு அப்படியே வெளியில் செல்ல கூடாது. அப்படி செல்வதால் தலையில் தூசுகள் அழுக்கு பட்டு அப்படியே நம் தலைமுடியில் தங்கி விடும். அடுத்து சரியான உணவு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது தான் பொடுகு வர மிக முக்கிய காரணம். பொடுகு வந்தவுடன் முதல் பிரச்சனையாக முடி உதிர்வு தொடங்கி விடும் எத்தனை பெரிய அடர்த்தியான முடியாக இருந்தாலும் பொடுகு வந்தவுடன் முடிகள் அனைத்தும் கொட்ட ஆரம்பித்து விடும்.

- Advertisement -

இப்படி வந்த பொடுகை சரி செய்ய பல வகையில் வீட்டு குறிப்புகள், ஷாம்புகள், கமிஷனர், என்று என்னென்னவோ செய்து சரி செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த பொடுகை சுத்தம் செய்ய நாம் குளிக்கும் போது கொஞ்சம் சுரண்டி குளித்தாலே பொடுகு போய்விடும் என்கிறார்கள்.

சுரண்டி குளிப்பது என்றால் உடனே நீங்கள் இரண்டு கைகளையும் வைத்து தலையை போட்டு பிராண்டி விடாதீர்கள், இதற்கு நீங்கள் ஆண்கள் பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி தான் குளிக்க வேண்டும்.

- Advertisement -

முதலில் தலைக்கு குளிக்க ஷாம்பு, சீயக்காய்ஏதோ ஒன்றை தேய்த்து விட்ட பிறகு அதற்கு ஷவரை திறந்து கொள்ளுங்கள். இப்போது இந்த சீப்பை கையில் எடுத்து தலையில் லேசாக வைத்து தேய்க்க வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்க கூடாது. லேசாக தலையில் தண்ணீர் ஊற்றி விட்டு இதை தேய்க்கும் போது தண்ணீர் தலையில் ஊறி ஸ்கால்பில் இருக்கும் பொடுகுகள் லேசாக வெளியில் வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் இந்த சீப்பை வைத்து நாம் தேய்க்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக பொடுகுவந்து விடும். இது ஒரே நாளில் வந்து விடாது நீங்கள் தலைக்கு குளிக்கும் போதெல்லாம் இது போல செய்து வந்தால் பொடுகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்.

இதையும் படிக்கலாமே: ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு இருந்தா போதும் ரெண்டே நாளில் கண்ணுக்கே கீழே அசிங்கமாக இருக்கும் கருவளையத்தை காணாமல் விரட்டி அடித்து விடலாமே!

இந்த குறிப்பு கொஞ்சம் வித்தியாசமாகவும், புதுமையாகவும் தான் இருக்கிறது எதையுமே தேய்க்க வேண்டாம், எதையும் வாங்க வேண்டாம் இதை மட்டும் வைத்து சுரண்டினாலே வந்துவிடும் என்பது ஒன்னும் நாம் செய்ய அத்தனை சிரமம் ஒன்றும் இல்லை இதை கொஞ்சம் முயற்சி உங்கள் தலையில் உள்ள பொடுகுகளை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து பொடுகற்ற அழகிய தலை முடியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -