½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு இருந்தா போதும் ரெண்டே நாளில் கண்ணுக்கே கீழே அசிங்கமாக இருக்கும் கருவளையத்தை காணாமல் விரட்டி அடித்து விடலாமே!

urad-dal-dark-circle
- Advertisement -

ஒருவர் நம் முகத்தை பார்க்கும் பொழுது முதலில் கண்களைத் தான் பார்த்து பேசுவார்கள். இந்த கண்கள் பளிச்சென இருந்தால், நம்ம மீதான மதிப்பும் அதிகரிக்கும். கண்கள் சோர்ந்து போய் இருந்தால், நம்மிடம் பேசுபவர்களுக்கும் அதன் உற்சாகம் குறைய ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு கண்களுக்கும், மனதிற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. இத்தகைய கண்களுக்கு கீழே அசிங்கமாக கருவளையம் இருந்தால் அதை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ரொம்பவே சுலபமாக கண் கருவளையத்தை முற்றிலுமாக விரட்டி அடிக்கக்கூடிய இந்த ஒரு ப்யூடி டிப்ஸ் உங்களுக்கு தெரியுமா? தெரியாவிட்டால் தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீண்ட நேரம் உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் நீண்ட நேரம் கணினி மற்றும் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் அல்லது சரியான ஊட்டச்சத்து கிடைக்காதவர்களுக்கு வரக்கூடிய இந்த கருவளையம் அவ்வளவு எளிதாக நீங்குவது கிடையாது. கருவளையம் என்பது ஒரே நாளிலும் நமக்கு வந்து விடுவது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாக வரக்கூடிய இந்த கண்ணுக்கு தெரியாத கருவளையம் ஆனது நாளடைவில் மெல்ல மெல்ல நம் கண்களுக்கு புலப்படும் படியாக மாறுகிறது.

- Advertisement -

ஆரம்பத்திலேயே இதனை சரி செய்து விட்டால் ரொம்ப சுலபமாக இருந்திருக்கும். ஆனால் நாட்பட நாட்பட கருவளையம் ஆனது நீங்காமல் அப்படியே ஒட்டிக் கொண்டு விடும். இது பார்ப்பதற்கு நாம் ஏதோ நோய்வாய் பட்டார் போல மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும். நம் முகத்தை நம் கண்ணாடியில் பார்க்கும் பொழுதே நமக்கு அப்படித்தான் தோன்றும். கருவளையத்தை முற்றிலுமாக போக்கி விட்டால் நம்முடைய உடல் மட்டுமல்லாமல், மனமும் திடம் பெரும். அந்த அளவிற்கு பிரச்சனையாக இருக்கக்கூடிய இந்த கருவளையத்தை எப்படி சுலபமாக விரட்டி அடிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்வோம்.

முதலில் இரண்டு வெள்ளரிக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பேஸ்ட் போல ஒருமுறை ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள உளுத்தம் பருப்பை சேர்த்து 20 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். 20 நிமிடம் கழித்து நன்கு உளுத்தம் பருப்பு ஊறியதும் மீண்டும் மிக்ஸியை இயக்கி ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள். நைசாக பேஸ்ட் போல உங்களுக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை நீங்கள் உங்களுடைய கண்களை சுற்றிலும் தடவி நன்கு உலர விட வேண்டும். குறைந்தது அரை மணி நேரம் உலர விடுங்கள். இதை கண்களுக்கு கீழே மட்டும் அல்ல, முகம், கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளிலும் நீங்கள் தாராளமாக தடவிக் கொள்ளலாம். உளுந்து மற்றும் வெள்ளரிக்காயின் சத்துக்கள் அபரிமிதமானவை. இது நம்முடைய தோல்களுக்கு அடியில் சென்று இறந்த செல்களை நீக்கி, அழுக்குகளை சுத்தம் செய்து, புதிய செல்கள் உருவாகவும், முகத்தை இருக செய்து நம்முடைய சருமத்தை பளபளப்பாக பராமரிக்கவும் உதவும்.

இதையும் படிக்கலாமே:
கிடுகிடுன்னு முடி வளர்ந்து கெண்டைக்காலை தொடும். தொடர்ந்து 5 முறை இந்த ஹேர் பேக்கை போட்டு பாருங்க.

நன்கு உலர்ந்ததும் நீங்கள் சுத்தமான ஈரத் துணியை வைத்து துடைத்து எடுங்கள். முகத்தை கழுவ வேண்டாம். இது போல தொடர்ந்து ரெண்டு நாட்களுக்கு செய்து வர நீங்களே ஆச்சரியப்படும் வகையில் உங்களுடைய கருவளையம் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். சாதாரண கண் கருவளையம் இருந்தால் இரண்டு நாட்களில் மறைந்து விடும். ரொம்பவும் அடர்த்தியாக உங்களுடைய கருவளையம் இருந்தால் இதை தொடர்ந்து தடவுங்கள், விரைவிலேயே கருவளையத்தை விரட்டி விடுங்கள்.

- Advertisement -