பொடுகு தொல்லை நீங்க பூந்திக்கொட்டை

hair boontu kottai
- Advertisement -

இன்றைய கால தலைமுறையினருக்கு தலைமுடியை பராமரிப்பது என்பதே பெரும் பிரச்சனை. முடி நன்றாக வளர வேண்டும் அதில் பொடுகு இருக்கக் கூடாது முடிவெட்டு வரக் கூடாது இப்படி பார்த்து பார்த்து பராமரிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனாலே பலரும் முடி வளர்த்துக் கொள்ள விரும்பாமல் கத்தரித்துக் கொள்கிறார்கள்.

முடி வளர்ப்பதே பெரிய பிரச்சனை என்றால் அந்த முடியில் பொடுகு தொல்லை வந்து விட்டால் போதும். இத்தனை நாள் பாடுபட்டு வளர்த்த முடி அனைத்தும் வீணாகி உதிர்ந்து விடும். அது மட்டும் இன்றி முடி வெடித்து முடியின் வளர்ச்சியும் தடுபடும். இதனால் முக அழகும் கூட பாதிக்கப்படும். இத்தனை பெரிய தொல்லை தரக் கூடிய பொடுகு பிரச்சனை எளிதில் நீக்க அருமையான ஒரு வழியை தான் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பொடுகு தொல்லை நீங்க

பொடுகு தொல்லை பல்வேறு காரணங்களால் வந்தாலும், அதிகமான உடல் சூட்டினால் தான் இது வரும். ஆகையால் உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், தலை முடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் மிகவும் அவசியம்.

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் முதலில் தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு நன்றாக பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பேஸ்ட் போல குழைத்து முடியின் வேர்கால்களில் நன்றாக தேய்த்து விடுங்கள். இது குறைந்தது ஒரு மணி நேரம் உங்கள் முடிவில் இருக்க வேண்டும். அதன் பிறகு வெறும் தண்ணீர் ஊற்றி அலசுங்கள். இதனால் மண்டையில் உள்ள அழுக்கு நீங்கி விடும்.

- Advertisement -

இந்த முறையை நீங்கள் பொடுகுக்கான இந்த பேக்கை போடுவதற்கு முதல் நாளே செய்து விட வேண்டும். அடுத்த நாள் பூந்திக்கொட்டை பவுடர் போட வேண்டும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பூந்திக் கொட்டையாகவும் கிடைக்கும் இதை வாங்கி அரைத்து வைத்துக் கொள்ளலாம். இந்த பூந்திக்கொட்டை பவுடரை பேஸ்ட் போல குழைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலை குளித்து பாருங்கள் பொடுகு தொல்லை சுத்தமாக நீங்கி விடும்.

அதே போல் நாட்டு மருந்து கடைகளில் உசிலம்பொடி என்று கேட்டுப்பாருங்கள் தருவார்கள். இந்த பொடியையும் இந்த பூந்திக்கொட்டை பொடியை போல பேஸ்ட்டாக குழைத்து முடிகளில் தேய்த்து குளித்து வாருங்கள். பொடுகு தொல்லை முற்றிலுமாக நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஷாம்பு போட்டு குளிப்பதை விட பிரஷ்ஷாக உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே: பட்டுப் போன்ற மென்மையான கூந்தலை பெற

இந்த பூந்திக்கொட்டை உசிலம் பொடிகளில் ஏதேனும் ஒன்றை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தாலே போதும் பொடுகு தொல்லை முற்றிலுமாக தீர்ந்து விடும். இத்துடன் முடி உதிர்வை தடுத்து நல்ல முடி வளர்ச்சியும் கொடுக்கும். இந்த முறையை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது போல செய்து பார்த்து பலன் அடையுங்கள்.

- Advertisement -