செய்யும் பூஜைக்கு எந்த பலனும் இல்லையா? பூஜை அறையில் இந்த மாற்றங்களை எல்லாம் செய்து பாருங்கள். உங்கள் வேண்டுதல்கள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேற துவங்கும்.

poojai arai tips Tamil
- Advertisement -

நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்காக நாம் பல பரிகாரங்களையும், பூஜை முறைகளையும் மேற்கொள்கின்றோம். அந்த பூஜைகளும், பரிகாரங்களும் வெற்றி அடையும் பொழுது நம்முடைய பிரச்சினைகள் தீறுகின்றன. ஆனால் என்னதான் பரிகாரம் செய்தாலும், பூஜைகள் செய்தாலும் நம்முடைய பிரச்சனைகள் தீரவே இல்லை என்பவர்களும், நாம் செய்யும் பூஜைக்குரிய பலன் எதுவும் கிடைக்கவில்லை என்பவர்களும் பலர் இருக்கின்றனர். அதற்க்கு மிக முக்கிய காரணம் நமது பூஜை அறையாக கூட இருக்கலாம். நாம் பூஜை அறையை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், என்னவெல்லாம் செய்தால் நமது வேண்டுதல் நிறைவேறு என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

பூஜை அறையில் பல தெய்வங்களை வைத்தாலும் நமது பிராத்தனைக்கு ஏற்ற தெய்வங்களை வைப்பது வாசம். நமக்கு தனவசியம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால் ஏழுமலையான் புகைப்படத்தை மாட்டலாம். மேலும் நல்ல மனை வசியம் ஏற்பட வேண்டும் அல்லது வீடுகள் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானின் புகைப்படத்தை வைக்கலாம். வியாபாரம் வெற்றி பெறுவதற்கு மகாலட்சுமியின் புகைப்படத்தை வைக்கலாம்.

- Advertisement -

பொதுவாக நல்ல பலனை தரக்கூடியதாக விளங்குவது வெள்ளருக்கு பிள்ளையார். இந்த வெள்ளருக்கு பிள்ளையாரை நம் வீட்டு பூஜை அறையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ வைத்து வணங்குவதன் மூலம் நமக்கு நல்ல பலன்கள் ஏற்படும். நாம் செய்யும் பூஜை வெற்றியடைய வேண்டும் என்றால் நம் பூஜையில் பஞ்சபூதங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். அதாவது பஞ்ச பாத்திரத்தில் நீர் இருக்க வேண்டும். கண்டிப்பான முறையில் பூஜை செய்யும் பொழுது தூபம் போட வேண்டும்.

அடுத்தபடியாக மணி அடித்து பூஜை செய்ய வேண்டும். பூஜை முடியும் பொழுது தீப ஆராதனை கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். மேலும் பஞ்சமுக விளக்கேற்றி வைத்து பூஜை செய்வது மிகவும் அவசியம். இந்த செயல்களை நாம் பூஜை செய்யும் பொழுது மேற்கொண்டால் நம்முடைய பூஜையின் பலன் கண்டிப்பாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் பழைய பூக்களை சேகரித்து வைப்பது மிகவும் தவறான செயலாக கருதப்படுகிறது. அதனால் எதிர்மறை ஆற்றல்களே உருவாகும். நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் முழுமையாக வெற்றி பெற வேண்டும் எனில், அந்த பரிகாரத்தை கோசாலையில் செய்யலாம் அல்லது ஹோமம் செய்தும் செய்யலாம் அல்லது கடற்கரையில் செய்யலாம் அல்லது மலை மீது செய்யலாம். இவ்வாறு இயற்கையோடு ஒன்றிணைந்து நாம் பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது நம்முடைய பரிகாரம் வெற்றியடைகிறது.

நம் வீட்டு பூஜை அறையில் தினமும் வில்வம் மற்றும் துளசியை வைத்து வர அதனால் பல சிறப்புகள் ஏற்படுகின்றது. மேலும் ஏதாவது ஒரு கடவுளின் திருவுருவப்படத்திற்கு வெட்டிவேர் மாலை அணிவிப்பதன் மூலம் பூஜை அறையில் எப்பொழுதும் நீங்காமல் மணம் வீசிக்கொண்டு இருக்கும். அதே போல பூஜை அறைக்கு பின்புறம் நிச்சயமாக கழிவறை இருக்க கூடாது. அப்படி இருப்பின் அந்த பூஜை அறையில் தெய்வங்கள் தாங்காது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறுக செய்யவேண்டியவை

மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு நாம் பூஜை செய்யும் பொழுது செய்ய வேண்டியதையும், பூஜை அறையில் என்ன செய்யக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் பூஜையில் வெற்றி பெறுவோம், முழு பலனையும் அடைவோம்.

- Advertisement -