நீங்கள் செய்த பூஜை முழுமையாக பலன் தராமல் போக, பூஜையின் முடிவில் செய்யக்கூடிய இந்த ஒரு தவறு தான் காரணம்.

poojai-room
- Advertisement -

சில பேருக்கு செய்த பூஜையின் பலன் உடனடியாக கிடைத்துவிடும். சில பேருக்கு என்னதான் பூஜை புனஸ்காரங்கள் செய்து சாமியை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் அதில் பலன் கிடைப்பதற்கு கொஞ்சம் நாட்கள் எடுக்கும். இதனால் சாமி மேல் இருக்கக்கூடிய நம்பிக்கை கூட சிலருக்கு இழந்து விடும். என்னடா இது இத்தனை முறை சாமி கும்பிடுகிறோம். நம்முடைய கஷ்டம் மட்டும் தீர மாட்டேங்குது. சாமி இருப்பது உண்மையா பொய்யா என்ற சந்தேகத்துக்கு கூட போய்விடுவார்கள். அப்படி கிடையாது. அவரவர் கர்ம வினைக்கு ஏற்றபடி தான், பூஜை செய்தாலும் கூட நம்முடைய கஷ்டங்கள் தீரும். பூஜை செய்து விட்டால் நாம் செய்த பாவம் எல்லாம் இல்லாமல் போய்விடுமா.

சரி இது புரிந்தது. அவரவர் செய்த கர்ம வினைக்கு ஏற்ப தான் பூஜைக்கு பலன் கிடைக்கும் என்பது. அப்படி அந்த பலனை விரைவாக நாம் அடைய வேண்டும் என்றால் பூஜை செய்து முடித்த பின்பு நாம் என்ன செய்ய வேண்டும். எல்லா பூஜைக்கு முடிவிலும் ஒரு தர்ம காரியத்தை செய்ய வேண்டும். பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து ஹோமம் நடத்திவிட்டு, சமைத்து நம் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் வயிறு ரொம்ப சாப்பிடக்கூடாது. உங்களால் முடிந்த தான தர்ம காரியத்தை அன்று நீங்கள் செய்ய வேண்டும். பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து சாமிக்கு ஹோமம் நடத்திய கையால், ஒரு நூறு ரூபாய்க்காவது அடுத்தவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க வேண்டும்.

- Advertisement -

நீங்கள் செய்த பூஜையின் பலன் இரண்டு மடங்கு அல்ல, 200 மடங்கு அதிகமாக உங்களை வந்து சேரும். ரொம்பவும் கஷ்டப்படுறவங்க யாராவது இருக்காங்க. அப்படின்னா அவங்களுக்கு சாப்பிட சாப்பாடு வாங்கிக் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் யாராவது ரொம்பவும் கஷ்டப்படக்கூடிய பெண்களுக்கு வஸ்திரங்கள் தானமாக கொடுக்கலாம். குறிப்பாக வீட்டில் சுப காரியங்கள் நடக்க நிறைய தடை உள்ளது. வீட்டில் இருக்கும் பெண் குழந்தை, ஆண் குழந்தைக்கு எவ்வளவு தேடியும் வரன் கிடைக்கவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. பெரிய பெரிய பூஜை, பெரிய பெரிய பரிகாரங்களை செய்கிறீர்கள் என்றால் கூடவே இப்படிப்பட்ட தானங்களை செய்யலாம்.

வயதான ஏழை சுமங்கலி பெண்ணுக்கு சிவப்பு நிறத்தில் வஸ்திரம், மஞ்சள் நிறத்தில் வஸ்திரம், மஞ்சள், குங்குமம், உலர் திராட்சை, பேரிச்சம்பழம், கல்கண்டு, வெற்றிலை பாக்கு வளையல் இவைகளை வைத்து தானம் கொடுப்பது மேலும் மேலும் சிறப்பு. (வஸ்திரம் என்றால் ஜாக்கெட் பிட், புடவை இப்படி எடுத்துக் கொடுக்கலாம்.)

- Advertisement -

நிறைய பேருக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வருகிறது. சுமங்கலி பெண்கள் கைம்பெண்கள் என்று எதற்காக பிரிக்கிறீர்கள் என்ற கேள்வியும் சில பேர் மனதில் எழுகிறது. சாஸ்திரம் சொல்லி வைத்திருக்கிறது. காரியங்கள் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் ஒரு சுமங்கலி பெண்ணுக்கு தானம் கொடுப்பது சிறப்பு என்பது. அதைத்தான் நாம் பின்பற்றி வருகின்றோம். ஆனால் அதற்காக ஐம்பெண்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது என்று எந்த இடத்திலும் நமக்கு சொல்லி வைக்கவில்லை.

இப்படிப்பட்ட மங்களப் பொருட்களை எல்லாம் அவர்கள் பயன்படுத்த முடியாது. நீங்கள் இப்படி தானம் கொடுக்கும் போது கைம்பெண்ணாக இருப்பவர்கள் வந்து கேட்டாலும் இந்த பொருட்களை நீங்கள் கொடுக்கலாம். அதை வாங்கி, அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு தான் கொண்டு போய் கொடுப்பார்கள். ஆகவே கைம்பெண்களுடைய மனதையும் புண்படுத்தும் படி நாம் என்றுமே நடந்து கொள்ளக் கூடாது. தேவையென்றால் கைம்பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களை வாங்கி நீங்கள் அவர்களுக்கு தானம் கொடுப்பதும் உங்களுக்கு சிறப்பான பலனை தான் கொடுக்கும். என்றுமே அது அமங்கலத்தை கொண்டு வந்து நம் வீட்டிற்கு சேர்க்காது.

யாருடைய மனதும் புண்படாதபடி நாம் செய்யக்கூடிய தானம் தான் நமக்கு பலனை கொடுக்குமே தவிர, அடுத்தவர்கள் மனதை புண்படுத்திவிட்டு நாம் புண்ணியம் தேடிக்கொள்ள என்றுமே முடியாது. மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்கள் மனதை புண்படுத்தாதீர்கள். நீங்கள் செய்யக்கூடிய நல்லதுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் தர்ம காரியங்களை செய்து கொண்டே வாருங்கள். நீங்கள் பூஜை செய்தாலும் சரி பூஜை செய்ய வில்லை என்றாலும் சரி, ஓமம் நடத்தினாலும் சரி ஹோமம் நடத்தவில்லை என்றாலும், கோவிலுக்கு சென்றாலும் செல்லவில்லை என்றாலும் சரி, உங்களைச் சேர வேண்டிய நல்லது எந்த தடையும் இல்லாமல் வந்து சேரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -