உங்கள் வேண்டுதல் நிறைவேற எந்தெந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா

oil
- Advertisement -

காலம் காலமாக நம் முன்னோர்களின் வழக்கப்படி வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்வதை நாமும் பின்பற்றி வருகிறோம். ஆனால் இந்த விளக்கினை எதற்காக ஏற்றுகிறோம் அதில் சேர்க்கக்கூடிய எண்னணெய்க்கு என்னென்ன பலன்கள் இருக்கின்றது என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் விளக்கு ஏற்றுவதனால் நன்மை உண்டாகும் என்பது மட்டும் அனைவரும் அறிந்த ஒன்றே. விளக்கை ஏற்றி கடவுளை ஆராதனை செய்வது என்பது மிகவும் மகத்துவமான விஷயமாகும். ஆனால் பலருக்கும் பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும். அந்த வேண்டுதல்கள் நிறைவேற குறிப்பிட்ட எண்ணெயில் தீபம் ஏற்றினால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். அவ்வாறு எந்த எண்ணையை பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vilakku-poojai

முதலில் விளக்கு ஏற்றுவதற்கு என்று தகுந்த திசையை தேர்ந்தெடுக்க வேண்டும் அவ்வாறு எந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -

நமக்கு இருக்கும் துன்பங்கள் அனைத்தும் தீர கிழக்கு திசை நோக்கி தீபமேற்றி கடவுளை வணங்க வேண்டும். உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லை நீங்கவும், தோஷங்கள் நீங்கவும் மேற்கு திசையில் தீபம் ஏற்றி கடவுளை தொழ வேண்டும். ஆனால் தெற்கு திசையில் மட்டும் எப்பொழுதும் தீபம் ஏற்றக்கூடாது. அது எதிர்மறை திசையாகும் அவ்வாறு செய்து விட்டால் தீராத துன்பம் ஏற்படும், மரணபயம் உண்டாகும்.

cash

அவ்வாறு விளக்கில் ஒவ்வொரு எண்ணமும் ஒரு விதமான பலன்களை கொடுக்கும் சிறப்பு வாய்ந்தவைகளாக அவ்வாறு நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் கடன் தொல்லைகள் நீங்கும் வருமானம் அதிகரிக்கும். தீராத துன்பங்களும் தீரும்.

- Advertisement -

நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால் நோய்கள் குணமாகும். அதேபோல் நவகிரகங்களில் அருள் கிடைக்கவும் நவகிரக தோஷம் நீங்கவும் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி கடவுளை வணங்க வேண்டும்.

navagragha-mandhiram

மனதில் உள்ள குழப்பங்களும் பிரச்சனைகளும் அதில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதனால் உங்கள் எண்ணங்களில் தெளிவு உண்டாகும், பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

குலதெய்வத்தின் அருள் கிடைக்கவும், வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ந்த நிலைக்குச் செல்லவும் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி கடவுளை மனதார வணங்க வேண்டும்.

kuladheivam

வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றுவதால் கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். அவர்களிடையே பிரச்சனை இருந்தாலும் அவை உடனே தீர்ந்துவிடும். அவ்வாறு இலுப்ப எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றினால் உடல் உபாதைகளில் இருந்து விடுபட முடியும், உடல் சோர்வும் அகலும்.

வேப்ப எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் இவை இரண்டையும் சேர்த்து தீபம் ஏற்றுவதால் சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில் நிரம்பி வழியும். வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் செல்வ வளங்கள் சேரும்.

gold-pot

நெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தையும் சேர்த்து தீபம் ஏற்றுவதால் கிரக தோஷங்கள் தீர்ந்து அம்மனின் அருள் கிடைக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு விதமான அற்புத சக்திகள் இருக்கின்றன. இதனை அறிந்து இவ்வாறு தீபம் ஏற்றி நீங்களும் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ள மனதார இறைவனை வேண்டி இத்துடன் இப்பதிவை நிறைவு செய்கிறோம்.

- Advertisement -