பெண்களுக்கு பூஜை செய்யும் நாட்களில், மாதவிலக்கு ஏற்பட்டு பூஜை தடைபட காரணமும், அந்த தோஷத்தை நிவர்த்தி செய்யும் பரிகாரமும்!

pray
- Advertisement -

நிறைய பேருடைய வீடுகளில் பெண்களுக்கு வீட்டில் விசேஷ நாட்கள் வரும் போது, சுப காரியங்கள் நடைபெறும் போது, பூஜை புனஸ்காரங்கள் சமயத்தில், மாதவிடாய் ஏற்பட்டு, அந்த பூஜையில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். நம்முடைய முன்னோர்கள், அதாவது நம் பாட்டிமார்கள் இருக்கும் வீடுகள் என்றால், இதற்கு என்ன காரணம்  என்பதை, அவர்கள் கட்டாயம் இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுத்து இருப்பார்கள். ஏனென்றால் நம்முடைய அம்மாக்களுக்கும், பாட்டிகளுக்கும் இதற்கு என்ன காரணம் என்பது கட்டாயம் தெரிந்திருக்கும்.

poojai

சரி, விசேஷ நாட்களில் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம், என்பதைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே, கொடுக்கப்பட்டுள்ள பதிவு தான் இது. நம்முடைய வீட்டை கூட்டி சுத்தம் செய்யும்போது பெண்கள் அந்தக் குப்பையை உடனே வாரி குப்பை கூடையில் அல்லது வெளியிலோ கொட்டிவிட வேண்டும். அதை விட்டுவிட்டு, கூட்டிய குப்பைகளை மூலையில் எப்போதுமே ஒதுக்கி வைக்கக் கூடாது.

- Advertisement -

சில பெண்கள் கொஞ்சம் பெரிய அளவிலான குப்பையை மட்டும் கைகளால் வாரி போட்டுவிட்டு, கையில் எடுக்க முடியாத தூசு தும்பு இருக்கும். அதை துடைப்பத்தால் அப்படியே மூலையில் ஒதுக்கி விடுவார்கள். அதுவும் மிகப்பெரிய தப்பு தான். அப்படி ஒதுக்கி வைக்கும் பட்சத்தில், நாமும் விசேஷ நாட்களில் ஒத்திவைக்கப்படுவதாக நம்முடைய சாஸ்திரம் சொல்கின்றது.

broom

இதில் எல்லாம் எங்களுக்கு நம்பிக்கையே கிடையாது! மாதவிலக்கு என்பது இயற்கையான ஒன்று என்று, நினைப்பவர்களுக்கு இந்த சாஸ்திரம் சொல்லப்படவில்லை. சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், இனி உங்களுடைய வீட்டில் இந்த தவறு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இது அல்லாமல் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதாவது தோஷம் இருந்தால் கூட, விசேஷ நாட்களில் மாதவிலக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்களையும் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

எப்படிப்பட்ட தோஷத்தையும் நிவர்த்தி செய்யும் சக்தி அருகம்புல்லுக்கு உள்ளது. இந்த அருகம்புல்லோடு கொஞ்சம் வேப்பிலையையும் சேர்த்து கொள்ளலாம். அந்த அருகம்புல்லையும்,  வேப்பிலையையும் முந்தைய நாள் இரவே கொண்டுவந்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அந்த அறுகம்புல் வாடமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மறுநாள் காலை, நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில், சிறிது அருகம்புல், ஒரு கொத்து வேப்பிலையை உருவி போட்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு தலை ஸ்நானம் செய்து விட வேண்டும்.

Arugampul juice benfits Tamil

இதே போல் தொடர்ந்து 11 நாட்கள் காலை தலை ஸ்னானம் செய்து வரும் பட்சத்தில், உங்களுக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, விசேஷ நாட்களில் மாதவிடாய் நாட்கள் வருவது குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை மாதவிடாய் நாட்களில் கட்டாயம் செய்யக் கூடாது. இப்படிப்பட்ட சாஸ்திர முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள், நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில் நிச்சயம் பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டின் இந்த திசையில் இதை மட்டும் வைத்தால் செல்வ வளம் பெருகுமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -