தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்யும் பொழுது, தேங்காய் தண்ணீரை என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இப்படி மட்டும் செய்யாதீர்கள்!

pooja-coconut-thengai
- Advertisement -

குறிப்பிட்ட தெய்வங்களுக்கு தேங்காயை உடைத்து வைத்து பூஜை செய்வது முறையானதாக இருந்து வருகிறது. குறிப்பாக விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரனுக்கு தேங்காய் உடைப்பதை மிகவும் விசேஷமாக பக்தர்கள் கடைபிடித்து வரும் ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படி தேங்காய்க்கும், ஆன்மீகத்திற்கும் நிறையவே சம்பந்தம் உண்டு. தேங்காயை சாமிக்காக நீங்கள் உடைக்கும் பொழுது அதில் இருக்கும் தேங்காய் தண்ணீரை முறையாக என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் தேங்காய் உடைக்கும் பொழுது சரிசமமாக உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஒன்று பெரிதாகவும், இன்னொன்று சிறிதாகவும் உடைக்கக் கூடாது. நாம் வேண்டும் வேண்டுதல் பலிக்க வேண்டும் என்பதன் ஒரு சகுனமாக தேங்காய் உடைப்பது உண்டு. தேங்காய் அழுகிப் போகாமல் நல்ல தேங்காயாக இருந்தால், வேண்டிய வேண்டுதல் அப்படியே நிறைவேறும் என்பது ஐதீகம்.

- Advertisement -

தேங்காயில் பூ இருந்தால் நல்ல சகுனம் என்றும், தேங்காயில் அழுகல் இருந்தால் அபசகுணம் என்றும் சகுன சாஸ்திரங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. இப்படி பூஜைக்காக உடைக்கப்படும் தேங்காயில் இவ்வளவு விஷயங்கள் இருக்கும் பொழுது நாம் அந்த தேங்காய் உடைக்கும் பொழுது தேங்காய் தண்ணீரை கீழே ஊற்றுவது சரியா? தேங்காய் உடைக்கும் பொழுது முழுமையாக அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க பட வேண்டும்.

வீட்டில் பூஜை செய்கிறீர்கள் என்றால் நீங்கள் தேங்காய் உடைக்கும் போது தேங்காயின் முக்கண்களுக்கு நேரே இருக்கும் நரம்பில் ஒரு அடி அடித்தால் சரி பாதியாக உடைந்துவிடும். அது உடையும் பொழுது ஒரு மூடியில் அதன் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை ஒரு தம்ளரில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜைக்கு தேங்காய் வைத்து அதன் பிரசாதமாக இந்த தண்ணீரையும் எந்த தெய்வத்திற்கு படைக்கிறீர்களோ, அந்த தெய்வத்துக்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காண்பித்த பிறகு தண்ணீரை மூன்று முறை சுற்றி பூமியில் ஊற்றுவது வேண்டும். அப்படி ஆவாஹனம் செய்யும் பொழுது நீங்கள் இந்த தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். மீதம் இருக்கும் தண்ணீரை பூஜை முடித்த பிறகு தீர்த்தமாக அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் வேண்டிய பூஜை முழுமையாக நிறைவு பெறுகிறது.

தேங்காய் உடைப்பவர்கள் மட்டும் தேங்காய் தண்ணீரை முழுவதுமாக குடிப்பதோ, அந்த தண்ணீரை வீணடிப்பதோ கண்டிப்பாக கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் வேண்டிய வேண்டுதல் பலிக்க அந்த தெய்வத்திற்கு முறையாக பிரசாதமாக படைத்து, தீர்த்தமாக அனைவரும் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். தேங்காய் சரி பாதியாக இல்லாமல் உடைத்தால் நீங்கள் வேண்டிய வேண்டுதலில் குறை இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம்.

இளநீரை போலவே, தேங்காய் தண்ணீரும் உடலுக்கு நிறையவே நன்மைகளை செய்யும். உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை, தலைவலி, உடல் எடை அதிகரிப்பு, தைராய்டு, பசி, தாகம் அத்தனையும் தீர்க்கும் வல்லமை இதற்கு உண்டு. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை நீக்கி, சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை ஒழித்து கட்டும் சக்தியும் இதற்கு உண்டு. எனவே தேங்காய் தண்ணீரை பூஜைக்கு பயன்படுத்தும் பொழுதும், மற்ற நேரங்களிலும் வீணடிப்பதை இனி தவிர்க்கலாமே!

- Advertisement -