பூஜையில் இந்த 3 பொருட்களை வைக்காமல் பூஜை செய்தால் பலன் குறையுமாம் தெரியுமா? இதெல்லாம் வைத்து தான் பூஜை செய்கிறோமா?

pooja-room-karkandu
- Advertisement -

இந்து சமுதாயத்தைப் பொறுத்தவரை காலை, மாலை இரு வேளையும் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட்டால் சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். விளக்கேற்றாத இல்லங்களில் ஐஸ்வரியம் சேராது. துரதிர்ஷ்டங்கள் துரத்தும். கஷ்டம் மேல் கஷ்டம் வரும் என சொல்லப்படுவது உண்டு. நம்மால் தினமும் விளக்கேற்றி வழிபட முடியாவிட்டாலும் கூட, வாரம் தோறும் தவறாமல் விளக்கேற்றி வழிபட்டு வருகிறோம். இப்படி விளக்கேற்றி வழிபடும் பொழுது பூஜையில் இருக்கக் கூடிய முக்கியமான இந்த 3 பொருட்கள் இல்லை என்றால் வேண்டுதல் பலன் தராது என்று நம்பப்படுகிறது. அப்படியான முக்கியம் வாய்ந்த பொருட்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பூஜை செய்யும் பொழுது பூஜை அறையில் பஞ்சபூதங்களும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பஞ்சபூதங்களும் ஒன்றிணையும் இடத்தில் தான் இறை சக்தி உருவாகிறது. இந்த பஞ்சபூதங்களில் ஒன்று இல்லை என்றாலும் இறை சக்தி அங்கு உருவாகாது. அந்த வகையில் பஞ்சபூதங்களில் இருக்கக்கூடிய நான்கு பூதங்களும் பூஜை அறையில் எப்படியும் இருக்கிறது.

- Advertisement -

நிலம், காற்று, ஆகாயம் ஆகிய மூன்றும் பொதுவானது. இதில் நெருப்பு மற்றும் நீரை நாம் தான் பூஜை அறைக்கு கொண்டு வர வேண்டும். விளக்கு ஏற்றுவதன் மூலமும், கற்பூர ஆரத்தி காண்பிப்பதன் மூலமும் நெருப்பைக் கொண்டு வருகிறோம். ஆனால் நீர் இல்லாமல் பூஜை செய்யக் கூடாது என்பது தான் இதன் முக்கிய தாத்பரியம் ஆகும். எனவே கலசம் ஒன்றில் நீரை வைத்து பின்னர் தான் பூஜையை துவங்க வேண்டும்.

இரண்டாவதாக தாம்பூலம் என்பது மங்களகரமான ஒரு முக்கிய பொருள் ஆகும். முந்தைய காலங்களில் எல்லாம் வெற்றிலை போடுபவர்கள் ஏராளம் உண்டு. நம் வீட்டிலேயே பாட்டி, தாத்தா என்று யாராவது வெற்றிலை போட்டுக் கொண்டிருப்பார்கள். இதனால் வெற்றிலை, பாக்கு வைத்து பூஜையை செய்வது உண்டு ஆனால் வெற்றிலையின் பயன்பாடு குறைவதால் இன்று அவற்றை தவிர்த்து வருகிறோம்.

- Advertisement -

தாம்பூலம் இல்லாமல் பூஜையை செய்தால் பலன் குறையும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை வைத்து பின்னர் பூஜையை தொடங்கினால், வேண்டியது அப்படியே நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வாங்கிய வெற்றிலை வீணாகிறது என்று கவலைப்பட வேண்டாம். வெற்றிலை போடுபவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு கொடுங்கள். இல்லையேல் உங்கள் வீட்டு செடிகளுக்கு அதை உரமாக போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தெருக் கோடியில் இருப்பவர்களும் கோடீஸ்வராக மாறக் கூடிய யோகத்தை பெற இந்த மூன்று விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தாலே போதும். சுக்கிர பகவானும், குபேரரும் செல்வதிபதியாக கடைபிடித்த சூட்சும வழி.

மூன்றாவதாக பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பொருள் கற்கண்டு ஆகும். இனிப்பான பொருட்களை வைத்து வேண்டுதல் வைக்கும் பொழுது அந்த வேண்டுதல்களும் இனிப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. அதனால் தான் சர்க்கரைப் பொங்கல் பெரும்பாலும் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. சர்க்கரை பொங்கல் செய்ய முடியாத பட்சத்தில் கற்கண்டு வைக்கலாம். அதிலும் டைமண்ட் கற்கண்டு வைத்தால் இன்னும் நல்லது என்று கூறப்படுகிறது. இனிப்பான இந்த கற்கண்டு, மங்களகரமான தாம்பூலம் மற்றும் கலச நீர் ஆகியவை இல்லாமல் பூஜையை துவங்காதீர்கள்.

- Advertisement -