வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்து வெளிவர ஒரே 1 வெள்ளைப் பூண்டு இருந்தால் போதும். சகல சந்தோஷங்களும் நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

sleep-garlic
- Advertisement -

சகல விதமான சந்தோஷமும் மன நிம்மதியும் இருந்தால் தான் இரவு நேரத்தில் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒரு மனிதனுக்கு நல்ல தூக்கம் வரவில்லையா. அவனுக்கு வாழ்க்கையில் ஏதோ ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கிறது. வெளியில் சொல்ல முடியாத பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறான் என்று தான் அர்த்தம். எல்லா விஷயங்களையும் குப்பை தொட்டி போல மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருக்கக் கூடாது. மனம் கசந்து போய்விட்டால் வாழ்க்கையும் கசக்கத்தான் செய்யும். எப்போதும் புதியதாக பூத்த ரோஜா போல மனதை வைத்துக் கொள்ளுங்கள். எல்லாம் கடந்து போகும் என்ற வார்த்தையை நினைவில் கொண்டு, வாழத் தொடங்கினால் கஷ்டம் என்பதே இருக்காது.

எல்லாம் சொல்லுவது ஈஸிதான். ஆனால் நடைமுறை வாழ்க்கை என்று வரும்போதுதான் தெரியும். ஒவ்வொரு நாளையும் கடப்பது எவ்வளவு கஷ்டம் என்பது. இப்படி நீங்கள் நினைப்பது நன்றாகவே புரிகிறது. பூமியில் பிறந்த எந்த உயிருக்கு தான் கஷ்டம் இல்லை. எல்லா உயிருக்கும் அவரவருக்கு தகுந்த மாதிரி ஒரு கஷ்டத்தை அந்த ஆண்டவன் கொடுத்து தான் இருக்கின்றான். ஆக கஷ்டத்தை தள்ளி வைத்துவிட்டு கொஞ்சம் இந்த பரிகாரத்தை பாருங்கள். மன நிம்மதியை பெற இது உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு வழியை காண்பிக்கும்.

- Advertisement -

கண்ணுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தியை கொண்ட இந்த பூண்டுக்கு, நம் கஷ்டத்தை துடைக்கும் சக்தியும் உண்டு. தினமும் சமையலுக்காக பூண்டு தோலை உறிப்பீர்கள் அல்லவா. பூண்டு தோலை தூக்கி போடாதீங்க. ஒரு சிறிய துணிப்பையில் போட்டு சேகரித்து வாருங்கள். ஒரு கைப்பிடி அளவு பூண்டு தோல் சேர்த்து விட்டால் போதும். ஒரு வெள்ளைத் துணியில் அந்த பூண்டு தோலை வைத்து, 2 பூண்டு பல், (முழுதாக இருக்கக்கூடிய பூண்டு பல்) அந்த பூண்டு தோலுடன் வைத்து முடிச்சு போட்டு தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள்.

48 நாட்களுக்கு இந்த முடிச்சை விடாமல் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் தூங்கி எந்திரிக்கும் போது உங்களுடைய உடம்பில் ஏற்படும் மாற்றத்தை. மனக்கவலை நீங்கும். வாழ்வில் சந்தோஷம் இருக்கும். சொல்ல முடியாத துயரங்கள் துன்பங்கள் எல்லாம் ஏதோ தொலைந்தது போல ஒரு உணர்வு ஏற்படும்.

- Advertisement -

பிறகு வாழ்க்கையில் கஷ்டமே வராதா என்று கேட்காதீங்க. உங்களுடைய மன குழப்பத்திற்கு ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் போதும். தெளிவாக நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு சாதகமான நன்மையை தான் கொடுக்கும். இதனால் வரை குழம்பிபோய் இருந்த உங்களுடைய மூளையை தெளிவுபடுத்தக்கூடிய வேலையை இந்த பூண்டின் வாசம் செய்யும். அவ்வளவு தான். நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க.

இந்த முடிச்சை தலைக்கு வைத்து தூங்கிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய நடவடிக்கையில் உங்களுக்குள் மாற்றம் தெரியும். 48 நாட்கள் கழித்து மீண்டும் பழைய பூண்டு தோல், பூண்டு எல்லாவற்றையும் தூக்கி கால்படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய பூண்டு தோல் புதிய பூண்டை வைத்து தொடர்ந்து இந்த முடிச்சை தலைக்கு வைத்து தூங்கினாலும் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -