பூர்வீக சொத்து கிடைக்க முருகன் வழிபாடு.

poorvika soththu
- Advertisement -

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து சொத்தை சேர்ப்பார். அந்த சொத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் தன்னுடைய பிற்கால சங்கதியினரும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்வார்கள். அப்படி செய்யும்பொழுது தனக்குப் பின்னால் வரக்கூடிய சந்ததிகள் அந்த சொத்தை பிரிப்பதில் பிரச்சனைகளை உண்டு பண்ணி சமூகமாக பிரிக்காமல் பிறருக்கு தரவேண்டிய பங்கை தானே அனுபவிக்க வேண்டும் அல்லது அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் செயல்படுவார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பூர்வீக சொத்தை பெறுவதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

அண்ணன் தம்பியாக பிறந்து வாழ்ந்த இருவர் பங்காளி என்று ஆன பிறகு தன்னுடைய சொத்தை மற்றொருவருக்கு விட்டுக் கொடுக்காமல் மற்றவரின் சொத்தையும் அபகரிக்கும் நோக்கத்தில் நடந்து கொள்வார்கள். இதற்காக பலரும் கோர்ட்டு படி ஏறி பல வருடங்களாக கேஸ் நடத்தி வருவார்கள். இருந்தும் அதில் நியாயமான தீர்ப்பு கிடைக்காமல் பலரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்து இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நியாயமாக கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு முதலில் திருச்செந்தூர் முருகனின் படம் தேவைப்படும். திருச்செந்தூர் முருகனின் படத்தை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் முருகப்பெருமானின் புகைப்படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும்.

செவ்வரளி மலர்களை வைத்து 108 முறை ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்யலாம். அல்லது ஓம் முருகா போற்றி என்று எளிமையாக தங்களுக்கு தெரிந்த மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். முக்கியமான குறிப்பு இவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது செவ்வரளி மலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த மலர்களையும் பயன்படுத்தக் கூடாது. செவ்வரளி மலர்கள் கிடைக்காத பட்சத்தில் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய வேறு மலர்களை உபயோகப்படுத்தலாம்.

- Advertisement -

இவ்வாறு 27 செவ்வாய்க்கிழமை அர்ச்சனை செய்த பிறகு ஒருமுறை நேரடியாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று ஒருநாள் இரவு தங்கி முருகனை வழிபட்டு வர வேண்டும். இப்படி செய்து வருவதன் மூலம் பூர்வீக சொத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நியாயமாக கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: நகையை அடமானம் வைப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த எளிமையான முருகன் வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்து நியாயமாக கிடைக்க வேண்டிய பூர்வீக சொத்தை பெற்று மகிழ்வோம்.

- Advertisement -