நிலைவாசல் படியில் இந்த இரண்டு பொருளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்தால் வீட்டிற்குள் கண் திருஷ்டி அண்டாது. குறிப்பா பக்கத்து வீட்டுக்காரங்களோட குறுகுறு பார்வை நம் மீது விழாது.

vasal1
- Advertisement -

அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்கள் நண்பர்களாகத்தான் இருப்பார்கள் என்று சொல்லுவார்கள். ஆனால், சில பேர் பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருக்காங்க. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எதிர் வீட்டில் இருப்பவர்கள் என்று நம் வீட்டை நோட்டம் பார்ப்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள். இவங்க வீட்டில் என்ன நடக்குது. இவங்க எப்படி சாப்பிடுறாங்க. இவங்க எப்படி வாழ்கிறார்கள். இவங்க எப்படி துணிமணி உடுத்துறாங்க. இவங்களால் மட்டும் எப்படி இதெல்லாம் செய்ய முடியுது, என்று நோட்டம் விட்டுக் கொண்டே இருப்பார்கள்.

நம் வீட்டை நோட்டம் பார்க்கவும் இப்படிப்பட்டவர்கள் வீட்டிற்குள் வருவார்கள். இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர்கள் நம் வீட்டிற்குள் வந்து சென்றால் முடிந்தது. நல்லா இருக்கும் நம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் வந்துவிடும்.

- Advertisement -

அடுத்தவர்களை குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். இது பெரும்பாலும் நிறைய பேர் வீடுகளில் நடக்கக்கூடிய விஷயம்தான். சிலருடைய மனசு நன்றாகவே இருந்தாலும், கண் நல்லா இருக்காது. சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தை பார்த்து விட்டு சென்றால், உடனே சண்டை வந்துவிடும். இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து நம் குடும்பத்தை காப்பாற்றுவது எப்படி.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு. சின்ன வெங்காயம், வரமிளகாய். சின்ன வெங்காயமா என்று நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆமாங்க சின்ன வெங்காயத்திற்கு கண் திருஷ்டியை, கெட்ட சக்தியை ஒழித்துக் கட்டக்கூடிய சக்தி அதிகம் இருக்கிறது.

- Advertisement -

ஒருவர் ரொம்பவும் சோர்வாக இருக்கிறார். 12 மணி உச்சி நேரத்தில் வெளியில் சென்று வந்தவன் உடனடியாக காய்ச்சலில் படுத்து விட்டான். எதையோ பார்த்து பயந்து இருக்கிறான் போல என்று சொல்லுவோம் அல்லவா. அந்த சூழ்நிலையில் 7 சின்ன வெங்காயத்தை கையில் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட நபரின் தலையை 3 முறை சுற்றி உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை, ஏற இறங்க அப்படியே மூன்று முறை அந்த வெங்காயத்தை ஏற்றி இறக்கி, வெங்காயத்தைக் கொண்டு போய் கால் படாத இடத்தில் வீட்டை விட்டு தூரமாக போட்டு விட்டால், அந்த குறிப்பிட்ட நபரை பிடித்த கெட்ட சக்தி விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

கண் திருஷ்டி நீங்க நிலை வாசலில் கட்ட வேண்டிய பொருள்:
சரி இப்போது கண் திருஷ்டி விலக தேவையான பரிகாரத்திற்கு வருவோம். ஒரு ஊசி நூல் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஊசி நூலில் முதலில் ஒரு சின்ன வெங்காயம், அடுத்து ஒரு வர மிளகாய் இப்படியாக கோர்க்க வேண்டும். ஒரு சின்ன வெங்காயம், ஒரு வரமிளகாய் என்று மாற்றி மாற்றி இப்படி ஏழு சின்ன வெங்காயம் ஏழு வளமிளகாய்களை, கோர்த்து இதை நிலை வாசலில் கட்டி வைத்தால் வீட்டிற்குள் கண் திருஷ்டி நுழையாது. பொறாமை குணத்தோடு வீட்டிற்குள் வருபவர்களுடைய கண் பார்வையையும் இந்த இரண்டு பொருட்கள் பொசுக்கி விடும்.

- Advertisement -

இந்த பொருட்களை ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு நிலை வாசலில் கட்டலாம். அப்படி இல்லை என்றால் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கட்டலாம். அதுவும் இல்லை என்றால் அமாவாசை மாலை 6:00 மணிக்கு மேல் இந்த இரண்டு பொருட்களை கோர்த்து நிலை வாசலில் கட்டி விடுங்கள். மாதத்திற்கு ஒரு முறை இந்த பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் தூர தூக்கி போட்டு விடுங்கள் அவ்வளவுதாங்க. அதோடு விட்டு விடக்கூடாது. மீண்டும் புதியதாக சின்ன வெங்காயத்தையும் வரமிளகாயும் கோர்த்து நிலை வாசலில் மாட்டி வைக்க வேண்டும். (7 சின்ன வெங்காயம், 7 வரமிளகாய்.)

இதையும் படிக்கலாமே: இந்த தெய்வங்கள் உங்கள் கனவில் வரக் கூடாது. ஒரு வேளை வந்து விட்டால் உடனே மறக்காமல் இதை மட்டும் செய்தால் போதும். கனவில் வரக் கூடாத தெய்வங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இதை பார்த்தாலே கெட்ட எண்ணத்தோடு வீட்டிற்குள் வருபவர்கள் வராமல் கூட இருந்து விடுவார்கள். வாசல் வரை வந்தவர்கள் கூட அப்படியே திரும்பி ஓடிவிடுவார்கள். நல்லது, விடுங்க. நல்ல எண்ணம் கொண்டவர்கள் மட்டும் நம் வீட்டிற்குள் வந்தால் போதும். நம்பிக்கை உள்ளவர்கள் மேலே சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -