எல்லோர் வீட்டு பணப்பெட்டியிலும் இந்த ஒரு பொருள் இருந்தால் பண கஷ்டமே இருக்காது. உங்கள் பொருளாதாரத்தை அப்படியே மேலே தூக்கி நிறுத்தக்கூடிய அந்த ஒரு பொருள் என்ன?

gajalakshmi-bero
- Advertisement -

பணப்பெட்டியிலும் பீரோவிலும் கட்டு கட்டாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் கடவுள் கோடி கோடியாக பணத்தை கொட்டிக் கொடுக்கவில்லை. எல்லோருக்கும் கடவுள் சொந்த வீட்டை கொடுக்கவில்லை, எல்லோருக்கும் தங்கம் வைரம் வைடூரியம் என விலை உயர்ந்த மதிப்பு மிக்க பொருட்களை கொட்டிக் கொடுக்கவில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையை அந்த இறைவன் நிர்ணயித்து இருக்கின்றான். எல்லாமே அவரவருடைய தலையெழுத்து அவர் அவருடைய கர்மா. இது எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு காரணமும் நிச்சயமாக இருக்கும் அது அந்த கடவுளுக்கு தெரியும். இருந்தாலும் பொருளாதாரத்தில் கீழே இருப்பவனுக்கு தன்னைவிட, பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவனை பார்க்கும் போது ஒரு ஆசை வரத்தான் செய்யும்.

இருக்கும் நிலைமையிலிருந்து நம்முடைய பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு நாம் சில முயற்சிகள் எடுக்கலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது. ஆனால் அந்த முயற்சிகளில் பிழை இருக்கக் கூடாது. சீக்கிரம் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்று குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க கூடவே கூடாது. நமக்கு வரக்கூடிய வருமானம் அது பக்கம் வந்து கொண்டே இருக்கட்டும். வேறு என்ன செய்தால் நம் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்று நேர்வழியில் சிந்தித்து செயல்படுங்கள். மேலே மேலே அதிகமாக சம்பாதிப்பதற்கு உண்டான முயற்சிகளை விடாமல் செய்து கொண்டே இருங்கள். நிச்சயமாக ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்கள் பணக்கார கனவு நினைவாகும். பணம் சம்பாதித்தால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வரும் தடையை விளக்க ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரம் தான் இது.

- Advertisement -

எல்லார் வீட்டு பணப்பெட்டியிலும் வைக்க வேண்டிய ஒரு பொருள்:
இந்த உலகத்தில் + – என்று இரண்டு விதமான விஷயங்கள் உள்ளது. பாசிட்டிவ் நெகட்டிவ். இதில் நெகட்டிவை எல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டு உங்களுக்கு பாசிட்டிவ் மட்டும் கொடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய ஒரு பொருளைப் பற்றித்தான் இன்று பார்க்க போகின்றோம். அந்த பொருள் தான் ஜாதிக்காய். ஜாதிக்காய்க்கு நெகட்டிவ் எனர்ஜியை அழிக்கக்கூடிய சக்தி உண்டு. நீங்கள் இந்த ஜாதிக்காயை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடம் பாசிட்டிவ் எனர்ஜி நிரம்பி வழியும். அந்த பாசிட்டிவ் எனர்ஜி உங்களுக்கு தேவையான தன்மை நன்மைகளை வாரி வழங்கும்.

பணம் வைக்கும் பெட்டியில் ஒரு ஜாதிக்காயை போட்டு வைத்தால், அந்த இடத்தில் பணம் சேரும். ஒரு ஜாதிக்காயை எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, இன்றைய தினம் நல்ல நாளாக அமைய வேண்டும், நான் போகும் வேலை எனக்கு சாதகமாக அமைய வேண்டும் குறிப்பிட்ட இந்த விஷயத்தில் நான் ஜெயிக்க வேண்டும், என்ற வேண்டுதலை வைத்து பாருங்கள். அன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக நகர்ந்து செல்லும். நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும்.

- Advertisement -

சமையலறையில் ஒரு ஜாதிக்காயை வைத்து விடுங்கள். உங்கள் சமையல் ருசிக்கும். சமைக்கும் பொருட்கள் வீணாகாமல் இருக்கும். வரவேற்புறையில் ஒரு ஜாதிக்காயை வைத்தால் வரவேற்பறையில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும். நிலை வாசல் படியில் ஒரு ஜாதிக்காயை துணியில் கட்டி தொங்க விட்டால், வீட்டிற்குள் நெகட்டிவ் எனர்ஜி வரவே வராது. இப்படி ஜாதிக்காரவிற்கு பல வகையான மகத்துவங்கள் இருக்கிறது. ஒரே ஒரு ஜாதிக்காய் தான் ஆனால் செய்யக்கூடிய வேலைகள் நிறைய. இப்படி மூன்று மாதத்திற்கு ஒருமுறை நீங்கள் வைத்த ஜாதிக்காய்களை எடுத்து கால் படாத இடத்தில் செடி கொடிகளுக்கு கீழே போட்டு வைத்து மீண்டும் புதிய ஜாதிக்காய் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்குள் வரவழைத்து கோடீஸ்வர யோகத்தை பெற இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால் போதும். ஆண்டியையும் அரசனாகும் அற்புதம் மந்திரம்.

நகை வைக்கும் பெட்டி சொத்து பத்திரம் வைக்கக்கூடிய இடம் என்று எல்லா இடத்திலும் இந்த ஜாதிக்காய் ஒன்று இருக்கட்டும் பிறகு உங்களுக்கு எல்லாம் நல்லதாக நடப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். நம்பிக்கை உள்ளவர் மேல் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -