சம்பளம் பணத்தை சிறிது நேரம் இதில் வைத்த பிறகு எடுத்து பயன்படுத்தினால் ஒரு ரூபாய் கூட நிச்சயமாக வீண்விரயம் ஆகாமல் பணம் பல மடங்கு பெருகும்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் புலம்பும் ஒரே வார்த்தை எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்பது தான். நம்முடைய வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்ந்து வந்தாலும் கூட திடீரென ஏற்படும் குடும்ப செலவுகளும், மருத்துவ செலவுகளையும் சமாளிக்க முடியாமல் பணம் விரயமாகி விடும். அடுத்து செலவுகளை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் பல குடும்பங்கள் என்று சிக்கலில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலை மாற முதலில் நம்முடைய வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

சம்பாதிக்கும் பணம் நல்ல முறையில் செலவழிந்தாலே அது நமக்கு நல்ல சேமிப்பிற்கான வழியை தான் தேடி கொடுக்கும். அப்படி நாம் வாங்கும் பணம் செலவழியாமல் பல மடங்கு பெருக ஒரு அருமையான பரிகாரத்தை பற்றி தான் இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சம்பள பணம் விரையம் ஆகாமல் பெருக பரிகாரம்
முன் காலத்தில் எல்லாம் நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் அடிக்கடி சொல்வது தான். சம்பளம் வாங்கியவுடன் நேராக வீட்டிற்கு கொண்டு வந்து சாமி படத்திற்கு முன்பாக வைத்து விளக்கு ஏற்றி வணங்கிய பின்பு வேறு எதற்காக இருந்தாலும் செலவு செய்ய வேண்டும். இது பணம் நம்மிடம் தங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய முதல் முயற்சி என்றே சொல்லலாம்.

பணம் என்பது மகாலட்சுமி தாயாரை குறிக்கும். நம்மிடம் பணம் வருகிறது என்றால் மகாலட்சுமி தாயார் நம் கையில் வருகிறார் என்று அர்த்தம். இதை நாம் வீட்டிற்கு கொண்டு வராமல் வரும் வழியிலே செலவு செய்து விட்டால் பின்பு எப்படி நம் வீட்டிற்கு சுபிட்சம் இருக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் அப்படி ஒரு முறையை பயன்படுத்தி வந்தார்கள். இன்று பலரும் அதை செய்வதில்லை பணம் அக்கவுண்டில் கிரெடிட் ஆனவுடன் அப்படியே பல்வேறு செலவுகளுக்கு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அப்படி அல்லாது வந்த பணத்தில் சிறிய பங்கையாவது எடுத்து பூஜையறையில் வைத்து விளக்கேற்றிய பின்பு மற்ற செலவுகளை செய்வது தான் சிறந்தது.

- Advertisement -

இப்படி பூஜை அறையில் வைத்து வணங்கும் முன்பு ஒரு நல்ல வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பச்சை கற்பூரம் ஒரு கைப்பிடி துவரை பருப்பு வைத்து அதை அதை பூஜை அறையில் வைத்து அதன் மேல் நீங்கள் வாங்கிய சம்பளப் பணத்தை வைத்து விளக்கேற்றி வணங்கிய பிறகு பணத்தை வேறு எந்த காரியத்திற்கும் செலவழித்தால் நீங்கள் செலவழிக்கும் பணத்தில் ஒரு ரூபாய் கூட வீண் விரயம் ஆகாது. இந்த வெற்றிலை துவரை, பச்சை கற்பூரத்தை ஒரு பேப்பரில் சுருட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் கூட வைத்துக் கொள்ளலாம் தவறில்லை.

இந்த துவரைக்கு வீண் விரயங்களை தடுக்கக்கூடிய சக்தி இருப்பதுடன், பணத்தை பெருக்கக்கூடிய சக்தியும் உண்டு. ஆகையால் தான் எந்த ஒரு விசேஷத்திலும் துவரைக்கு முன் உரிமை கொடுத்து சமையலில் சேர்க்கப்படுகிறது. அன்னபூரணி தாயார் வைத்து வணங்குபவர்கள் அதில் போட்டு வைக்கும் அரிசிக்கு பதில் துவரை போட்டு வைத்தாலும் குடும்பம் மிகவும் சுபிட்சமாக இருக்கும்.

இதையும் படிக்காலமே: குழந்தைகள் படிப்பில் கவனம் சிதறாமல் படித்து நல்ல மதிப்பெண்களை பெற்று வாழ்வில் முன்னேற 5 வாரம் இதை தொடர்ந்து செய்தால் உங்கள் பிள்ளைகள் தான் படிப்பில் முதலிடத்தில் இருப்பார்கள்.

பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை வீண் செலவு செய்யாமல் நாம் சேமித்து வைப்பது. வீண்விரயம் என்பது நம்மையும் மீறி சூழ்நிலையால் ஏற்படுவது வீண் செலவுகள் நாமே தேவையில்லாத பொருட்களை வாங்கி சுமையை அதிகரித்து கொள்வது நம்மால் ஏற்படும் வீண் விரையங்களை தடுத்து இது போன்ற பரிகாரங்களை செய்து சூழ்நிலையால் ஏற்படும் விரையங்களையும் தடுத்து பணத்தை நல்ல முறையில் சேமித்து, நல்லதொரு வாழ்க்கையை வாழ முயல்வது தான் என்றும் சிறந்தது என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -