கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று இந்த வேரை மட்டும் வீட்டில் வைத்து விடுங்கள். எண்ணிலடங்கா அதிர்ஷ்டம் உங்களைப் பின் தொடர்ந்து வந்துவிடும்

nayuruvi
- Advertisement -

கார்த்திகை மாதம் விளக்கேற்றி சிவபெருமானையும், கந்தனையும் போற்றி வணங்குவது விசேஷமான பூஜையாகும். கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி மற்றும் கிருத்திகை பூஜைகளும் மிகவும் விசேஷ பலனைக் கொடுக்கின்றன. அவ்வாறு கார்த்திகை மாதம் வரக்கூடிய பௌவுர்ணமி நாளில் இந்த செடியின் வேரை வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். அப்படி பேரதிர்ஷ்டம் கொடுத்து உங்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய அந்தச் செடியின் வேரை பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam8

கார்த்திகை மாதம் ஏகாதேசியை அடுத்து வரக் கூடிய வாதசி நாளில் தான் விஷ்ணு பெருமாள் துளசி மாதாவை மணந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. எனவே வாதசி நாட்களில் துளசியைப் பறித்துபெருமாளளின் பாதத்தில் வைத்து பூஜை செய்வது மிகவும் விசேஷ பலனைக் கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெருமாள் வாசம் செய்வது நெல்லி மரம். மகாலட்சுமி வாசம் செய்வது துளசிச்செடி. உங்கள் இல்லங்களில் இவை இரண்டு மரங்களும் இருந்ததென்றால் அந்த மரங்களுக்கு மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூஜை செய்வது தன லாபத்தை கொடுக்கிறது.

- Advertisement -

கார்த்திகை மாதத்தில் தானங்கள் செய்வதன் மூலம் நமது பாவங்களை தீர்க்க முடியும். வெண்கலப் பாத்திரங்கள் தானியங்களை தானமாக கொடுப்பதன் மூலம் புண்ணியங்களை பெறமுடியும் மகாவிஷ்ணுவின் அம்சமான தானமாக கொடுப்பதன் மூலம் திருமணத் தடை நீங்கும் அரசாங்க உயர் பதவிகள் கிடைக்கும்.

dhanam

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று முருகப்பெருமானை வணங்கி வந்தால் சௌபாக்கியம் கிடைக்கிறது. கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று தான் முருகப்பெருமான் அம்பாளும் பூமிக்கு இறங்கி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதாக புராணங்களில் கூறப்படுகிறது எனவே அன்றைய தினம் பௌர்ணமி நிலவைப் பார்த்து பூஜை செய்வது மிகுந்த பலனைக் கொடுக்கிறது. கார்த்திகை மாதம் ராமாயணம் வசிப்பது நற்பலனை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆறுமுகப் பெருமானின் வரலாற்றுக் கதைகளை கூறுவதும், கேட்பதும் நமது இல்லத்தில் நேர் மறை சக்திகளை ஈர்க்கிறது.

- Advertisement -

கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று விசேஷமாக ஒரு பொருளை வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தன லாபத்தையும், அதிர்ஷ்டத்தையும் அடைய முடிகிறது. அப்படி அனைவருக்கும் சுலபமாக கிடைக்கக்கூடிய பார்க்கும் இடங்களில் எல்லாம் வளர்ந்து இருக்கக்கூடிய நாயுருவிச் செடியின் வேரை வீட்டிற்கு எடுத்து வந்து உங்கள் வீட்டின் தொட்டியில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பண நெருக்கடி, கடன் பிரச்சனை போன்றவற்றிலிருந்து விடுபட முடியும்.

nayuruvi

பௌர்ணமி அன்று வைக்கப்படும் இந்த செடி எப்படி வளர ஆரம்பிக்கிறதோ அது போன்றே நமது வாழ்க்கை தரமும் உயர ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து வில்வ இலைகள் வைத்து ஆராதனை செய்வதன் மூலம் சிவபெருமானின் அருள் கிடைத்து நமது வாழ்க்கை வளமும் நலமும் பெற்று சிறப்புடன் அமையும்.

- Advertisement -