நாளை 15/5/2022 வைகாசி முதல் பவுர்ணமியில் கல் உப்பை இப்படி செய்தால் கழுத்தை நெரிக்கும் கடனும் விரைவிலேயே காணாமல் கரைந்து போகும்!

salt-cash-chandran
- Advertisement -

கழுத்தை நெரிக்கும் அளவிற்கு கடன் பிரச்சனை இருப்பவர்கள் பௌர்ணமி நாட்களில் உப்பு பரிகாரம் செய்து வந்தால் எத்தகைய கடன் தொல்லைகள் இருந்தாலும் அதில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட முடியும் என்பது ஆன்மீக கருத்தாகும். கல் உப்பு மகாலக்ஷ்மியின் அம்சம் ஆகும் எனவே கல் உப்பு பரிகாரம் செய்வது ரொம்பவே சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. உப்பு தீபம் ஏற்றி வழிபடுவது அல்லது உப்பு பரிகாரம் செய்வது போன்ற விஷயங்களை இந்த பௌர்ணமி நாட்களில் செய்வது தான் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில் நாளை வைகாசி முதல் பவுர்ணமியில் கல் உப்பை இப்படி செய்து மழை அளவு இருக்கும் கடனும் பனி அளவாக மாற செய்து விடுங்கள். கடன் தொல்லை தீர பௌர்ணமியில் உப்பு பரிகாரம் எப்படி செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எவ்வளவு கடன் தொல்லைகள் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவதற்கு வைகாசி பவுர்ணமியில் கல் உப்பை இப்படி செய்யுங்கள். கையில் ஒரு பிடி கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமிக்கு ஏலக்காய் மாலை அல்லது கிராம்பு மாலை சாற்றி, மல்லிகை பூ அல்லது தாமரை மலரால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்பு மகாலட்சுமிக்கு முன்பு ஒரு பெரிய அகல் ஒன்றில் கல் உப்பை நிரப்பி, அதன் மீது சிறிய அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சுத்தமான பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

தீபம் எப்பொழுதும் முழுவதுமாக எரிந்து சாம்பலாக கூடாது. அதற்கு முன்பே புஷ்பத்தால் தீபத்தை குளிர செய்துவிட்டு பின்னர் அடியில் இருக்கும் கல் உப்பை ஓடும் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். இவ்வாறு உப்பு தீபம் ஏற்றினால் மனதில் வேண்டிய வேண்டுதல் அப்படியே நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உண்டு. குறிப்பாக எவ்வளவு கடன் பிரச்சினைகள் இருந்தாலும், மகாலட்சுமிக்கு உப்பு தீபம் பௌர்ணமி நாட்களில் 9 முறை தொடர்ந்து ஏற்றி வர அது விரைவாக கரைந்து காற்றில் காணாமலேயே போகும்.

அது போல சந்திர தரிசனம் செய்து உப்பு பரிகாரத்தை செய்வதும் விசேஷமானது. சந்திர பகவானுக்கு உரிய பவுர்ணமி நாளில் சந்திர தரிசனம் செய்யலாம். அது போல சந்திரனுக்கு முன்பு கையில் ஒரு கைப்பிடி கல் உப்பை வைத்து கொண்டு இந்த பரிகாரத்தை துவங்க வேண்டும். சூரியன் மறைந்த பின்பு நிலவு தோன்ற ஆரம்பித்ததிலிருந்து எப்போது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை தாராளமாக செய்து கொள்ளலாம்.

- Advertisement -

கல் உப்பு தீபம் ஏற்றிய பின்பு மாலையில் சந்திர தரிசனத்தை பெற்றுக் கொண்டு கையில் இருக்கும் கல் உப்பை நெஞ்சுக்கு நேரே கொண்டு வந்து மனதார சந்திர பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எப்பொழுதும் எந்த விதமான கடன் பிரச்சினைகள் இருந்தாலும் பவுர்ணமி நாளில் கடன் தொகையில் இருந்து ஒரு சிறு தொகையை கொடுத்து வந்தால் விரைவாக கடன் அடையும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

அந்த வகையில் சந்திர பகவானுக்கு முன்பு கைகளில் உப்பை வைத்துக் கொண்டு வேண்டிக் கொண்டு பின்னர் கையில் வைத்திருக்கும் உப்பை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும். நீர் நிலைகளில் கரைக்க முடியவில்லை என்றாலும், ஒரு மக்கில் தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் யாருடைய கால்களிலும் படாதபடி எங்காவது ஓரமாக ஊற்றி விடுங்கள். கையில் உப்பை வைத்து கொண்டு இது போல பரிகாரம் செய்தால் நமக்கு தீராத கடனும் தீரும் என்பது நியதி.

- Advertisement -