பௌர்ணமி அன்று பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

amman6
- Advertisement -

வீட்டில் மகாலட்சுமியின் சொரூபமாக இருக்கும் பெண்கள் இந்த வழிபாட்டை செய்தால், அவர்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை தீர்க்க முடியும் என்பது நம்பிக்கை. உங்கள் வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்த, உங்கள் கணவரின் வருவாயே பெருக்க, தேவைப்பட்டால் பெண்களாகிய நீங்களே சம்பாதிக்கவும் இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ளலாம்.

பேராசைப்படாமல் தேவைக்கு ஏற்ப வரங்களை கேளுங்கள். நிச்சயம் நீங்கள் கேட்ட வரம் உடனே கிடைக்கும். பௌர்ணமி அன்று பெண்கள் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த வழிபாடு என்ன. இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பணத் தேவையை பூர்த்தி செய்யும் பௌர்ணமி வழிபாடு

வீட்டில் இருக்கும் பெண்கள் பௌர்ணமி தோறும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எந்த அம்பாளாக இருந்தாலும் சரி, அந்த அம்மனை வழிபாடு செய்யலாம். எல்லாம் அம்மனுக்கும் சக்தி ஒன்று தான்.

ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெறும். அந்த பூஜைக்கு சென்று அந்த கோவிலில் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். பௌர்ணமி நேரத்தில் பூஜையில் கலந்து கொண்டு, அந்த சன்னிதியில் சிறிது நேரம் அமர்ந்து அந்த அம்பாளை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய எந்த தேவை பூர்த்தியாக பணம் வேண்டும் என்பதை தெளிவாக அம்பாள் இடம் சொல்லி வரங்களை கேளுங்கள். கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமா. பையனுக்கு படிப்பு செலவுக்கு பணம் தேவையா. வீடு கட்ட பணம் தேவையா. கடன் தொல்லை தீர பணம் தேவையா. எந்த தேவைக்கு பணம் வேண்டும் என்றாலும் சக்தி தேவியை மனம் உருகி கேட்கலாம்.

பௌர்ணமி நேரத்தில் அம்பாள் சன்னிதியில் அம்பாலை வேண்டி நீங்கள் கேட்கும் வரங்கள் உடனே கிடைக்கும். அதிலும் குறிப்பாக இந்த வழிபாட்டை பெண்கள் செய்யும் போது அதற்கு பலன் நூற்றுக்கு நூறு சதவீதம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த பொருட்களை அம்பாளுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

வாசனை நிறைந்த மல்லி பூ, சிவப்பு நிற அரளிப்பூ, செம்பருத்தி பூ, இதெல்லாம் அம்பாளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தாமரை பூ கிடைத்தாலும் எடுத்துச் செல்லலாம். சாதாரண சாமந்திப்பூ தான் கிடைக்கிறது என்றாலும், வாங்கிச் செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிரிகளை அடக்கும் சாம்பல் தயார் செய்யும் முறை

உங்களால் முடிந்த இனிப்பு பலகாரம் ஏதோ ஒன்று குறைந்த அளவில் வீட்டிலிருந்து தயார் செய்து, அம்பாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு, அங்கு வரும் பக்தர்களுக்கு குழந்தைகளுக்கு உங்கள் கையால் நாலு பேருக்கு அந்த பிரசாதத்தை கொடுக்க போதும். உங்களுடைய கர்ம வினைகள் குறையும். நிச்சயம் பணக்கஷ்டம் தீரும். நல்லது நடக்கும். தொடர்ந்து பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளும் பெண்கள் வீட்டில் பணக்கஷ்டம் இருக்காது என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -