வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் குன்றின்மணி தீபம்.

sucess vilakku
- Advertisement -

அனைவரின் இல்லங்களிலும் தீபம் ஏற்றும் முறை என்பது கண்டிப்பாக இருக்கும். சிலர் காலையில் மட்டும் ஏற்றுவார்கள். சிலர் காலையிலும், மாலையிலும் ஏற்றுவார்கள். சிலர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஏற்றுவார்கள். சிலரோ வெள்ளிக்கிழமையில் மட்டும் ஏற்றுவார்கள். இவ்வாறு ஏதாவது ஒரு வகையில் நம் வீட்டில் நாம் தீபத்தை ஏற்றி வழிபடுகிறோம்.

அவ்வாறு நாம் ஏற்றக்கூடிய தீபத்தில் இந்த ஒரு பொருளை மட்டும் நாம் சேர்த்தால் போதும் நம்முடைய பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். அந்த தீபத்தை நம் வீட்டில் எப்படி ஏற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏராளம். அவை அனைத்தையும் கடந்து வெற்றி பெறுவது மிகப்பெரிய சாகசமாக இருக்கும்.

- Advertisement -

ஒரே ஒரு மாத்திரை அனைத்து வகையான நோய்களையும் தீர்க்க வல்லதாக இருக்க வேண்டும் என்று கருதுவது போல் ஒரே ஒரு தீபம் நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு உதவுகிறது என்றால் நம்மால் நம்ப முடியுமா? பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தீபத்தில் இந்த பொருளை சேர்த்தால் போதும். அது என்ன அந்த பொருள்? அதுதான் குன்றின்மணி.

வீட்டில் குன்றின்மணி தீபம் ஏற்றுவது எப்படி

பல நிறங்களில் குன்றின்மணி கிடைக்கின்றது. ஒவ்வொரு நிறத்திற்குரிய குன்றின்மணிக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இன்று நாம் பார்க்க போகும் குன்றின்மணி தான் பிள்ளையார் கண்ணாக கருதப்படும் சிவப்பு மற்றும் கருப்பு நிற குன்றின்மணி. இந்த குன்றின்மணி யார் வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் தீய சக்திகள் எதுவும் அணுகாது என்று கூறப்படுகிறது. மேலும் செல்வ செழிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

நாம் வீட்டில் ஏற்றும் விளக்கில் அது எந்த விளக்காக இருந்தாலும் எண்ணெய் ஊற்றி திரி போடும் பொழுது ஐந்து குன்றின்மணியை அதில் சேர்த்து தீபம் ஏற்ற வேண்டும். வாரத்தில் ஒரு நாள் நாம் விளக்கை சுத்தம் செய்வோம். அப்பொழுது அந்த குன்றின்மணியை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். மறுபடியும் புதிதாக வேற 5 குன்றின்மணியை அதில் சேர்த்து விளக்கு ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தீராத ஆசைகள் தீர, வேண்டுதல்கள் நிறைவேற 7 நாட்கள் விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள் நினைத்தது நடந்தே தீரும்!

இந்த தீபத்தை நாம் நம் வீட்டில் ஏற்றுவதால், நாம் நினைத்த காரியம் அனைத்தும் நடைபெறும். தொழில் சிறப்பாக நடைபெறும். மேலும் குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். தீய சக்திகள் நம்மை நெருங்கவே நெருங்காது. எதிரிகளின் தொல்லை விலகும். தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். இவ்வளவு அற்புதமான பலன்களை தரக்கூடிய இந்த தீபத்தை நாமும் நம் வீட்டில் ஏற்றி நன்மைகள் அனைத்தையும் பெறுவோம்.

- Advertisement -