தீராத ஆசைகள் தீர, வேண்டுதல்கள் நிறைவேற 7 நாட்கள் விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள் நினைத்தது நடந்தே தீரும்!

vinayagar-vilakku-tamil
- Advertisement -

கலியுகத்தில் கண்கண்ட சக்தி வாய்ந்த கடவுளாக விளங்குபவர் விநாயகர் பெருமான் ஆவார். இவருடைய பக்தர்கள் யாவருக்கும் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். ஆசைகள் நிறைவேறவும், வேண்டுதல் பலிக்கவும் 7 நாட்கள் விநாயகருக்கு விரதம் இருந்து இப்படி வழிபட்டால் நினைத்தது நடந்தே தீரும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்படியான ஒரு எளிய விநாயகர் வழிபாடு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

விநாயகர் வழிபாட்டில் மிகவும் முக்கியமானது விளக்கு ஏற்றுதல். எல்லா விதமான கடவுள்களுக்கும் விளக்கு ஏற்றி வழிபடுதல் என்பது தான் முதன்மையானது. விளக்கு ஏற்றி மனதார பிரார்த்தித்துக் கொள்ளும் எந்த விதமான பிரார்த்தனையும் நியாயமானதாக இருந்தால் நிச்சயம் அந்த கடவுள் ஏற்றுக் கொள்வார் என்பது நியதி! 7 நாட்கள் தொடர்ந்து மனக்கட்டுப்பாடோடு சைவ உணவுகளை மட்டும் எடுத்து அசைவம் தவிர்த்து காலை ஒருவேளை உபவாசம் இருந்து முழு மனதார இறைவனை நினைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

கோவிலுக்கு சென்றும் அல்லது விநாயகர் சிலை வீட்டில் இருந்தாலும் இதை நீங்கள் செய்யலாம். விநாயகர் சிலைக்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய கைகளால் அருகம்புல் மாலையை விநாயகர் சிலைக்கு சாற்றி வழிபட வேண்டும். கோவிலுக்கு சென்று வழிபடும் பொழுது அர்ச்சகர் இடம் கொடுத்து விடுங்கள். நீங்கள் வீட்டில் செய்யும் போது உங்களுடைய கைகளால் மாலையை சாற்றுங்கள்.

பின்னர் சுத்தமான அகல் விளக்கு ஒன்றை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றக்கூடிய திரியை இரண்டாக சேர்த்து திரிக்க வேண்டும். ஒரு திரி பஞ்சு திரியாகவும், இரண்டாவது திரி வெட்டிவேராகவும் இருக்க வேண்டும். வெட்டிவேரையும், பஞ்சையும் திரித்து போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வெட்டிவேர் நாட்டு மருந்து கடைகளில் அல்லது பூஜை பொருட்கள் விற்பனையாகங்களில் குறைந்த விலையில் கிடைக்கப் பெறுகிறது.

- Advertisement -

இந்த வெட்டிவேரில் ஏராளமான மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன. மேலும் வெட்டிவேர் விநாயகப் பெருமானுக்கு உகந்த ஒரு மூலிகை வேராகவும் இருந்து வருகிறது. இந்த வெட்டிவேரினால் தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நினைத்தது தடைப்படாமல் நடக்கும் என்பது ஐதீகம்! வெட்டிவேர் போட்டு தீபம் ஏற்றிவிட்டு மனதார வழிபட வேண்டும். விநாயகருக்கு நைவேத்தியம் படைக்க மோதகம், சுண்டல் கூட நீங்கள் விருப்பப்பட்டால் தயார் செய்து கொள்ளலாம் அல்லது உங்களால் முடிந்த கலவை சாதங்களை தயார் செய்து படைக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
இந்த பையில் நீங்கள் ஒரு ரூபாய் பணத்தை வைத்தாலும் கூட அது பல லட்சங்களாக மாறும் அதிசயம் நடக்கும். பணம் நகை என எதை வைத்தாலும் அதை பல மடங்காக பெருக்கி தரும்.

காலை ஒரு வேளை சாப்பிடாமல் இருந்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கைகள், ஆசைகள் அனைத்தையும் விநாயகப் பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். பின்னர் பூஜையை நிறைவு செய்துவிட்டு மதிய உணவை நீங்கள் சீக்கிரமே எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான், இது போல தொடர்ந்து ஏழு நாட்களும் புதிதாக அருகம்புல் மாலை சாற்றி, வெட்டிவேர் கொண்டு தீபம் ஏற்றி மனதார பிரார்த்தித்து வந்தால் எண்ணியது எண்ணியபடி தடைபடாமல் ஈடேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -