குடும்பத்தில் கொட்டி கிடக்கும் பிரச்சனையை சரி செய்யும் கொட்டைப்பாக்கு.

pillaiyar3
- Advertisement -

குடும்பத்தில் பிரச்சினைகளுக்கா பஞ்சம். அதிலும் விடை தெரியாமல் தேங்கி நிற்கும் பிரச்சனைகள் ஏராளம். பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் அதை நாம் அப்படியே விட்டு வைத்திருப்போம். உங்களுடைய குடும்பத்திலும் இப்படி விடை தெரியாமல் இருக்கும் ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா. அதற்கு தீர்வு காண முடியாமல் தவித்து வருகிறீர்களா. இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரம் உங்களுக்காக மட்டுமே.

விடை தெரியாத குழப்பங்களா. குடும்பத்தில் அப்படி என்ன பிரச்சனை வரப்போகிறது. நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் கணவன் மனைவி பிரச்சினை. சில குடும்பங்களில் பிள்ளைகளால் பிரச்சனை இருக்கும். சில குடும்பங்களில் நாத்தனார் மாமியார் இந்த உறவுகளில் பிரச்சனை இருக்கும். சில குடும்பங்களில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.

- Advertisement -

சில குடும்பங்களில் சொத்து பத்து கோர்ட் கேஸ் வழக்குகள் என்று பிரச்சனைகள் இருக்கும். இப்படி நிறைய பிரச்சனைகள் விடை தெரியாமல் அப்படியே பாதியிலேயே நின்று கொண்டிருக்கும். சில குடும்பங்களில் சுப காரிய தடை இருக்கும். அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தான் இந்த பரிகாரம். சரி இந்த பரிகாரத்தை எப்படி செய்வது.

விடை தெரியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண விநாயகர் பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஏழு கொட்டை பாக்குகள் தேவை. மஞ்சள் நிற துணி தேவை. கொட்டை பாக்குகள் என்றால் கலிபாக்கு என்று சொல்லுவார்கள் அல்லவா, சாமி கும்பிடும் போது வெற்றிலைக்கு மேலே வைப்போமே அதை எடுத்துக் கொள்ளுங்கள். திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம்.

- Advertisement -

மஞ்சள் துணியில் ஏழு கொட்டை பாக்குகளை வைத்துவிட்டு குலதெய்வத்தை நினைத்து, முடிச்சு போட்டு விடுங்கள். இதை விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். ஒரு பேப்பரில் உங்களுடைய பிரச்சனைகளை எழுதுங்கள். ஒரே ஒரு பிரச்சனை, உங்களுடைய வீட்டில் தீர்க்க முடியாத பிரச்சனை இருக்கும்.

அந்த பிரச்சனையை எழுதி அந்த கொட்டை பாக்கு, முடிச்சுக்கு அடியில் வைத்து விடுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் காலை 6:00 மணிக்கு எழுந்து பிள்ளையாருக்கு வீட்டிலேயே விளக்கு ஏற்றி, மனம் உருகி வேண்டுதல் வைத்து குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்து இந்த வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

திங்கட்கிழமை தோறும் இந்த வழிபாட்டை செய்தால், உங்கள் வேண்டுதலை விநாயகரிடம் சொன்னால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். பிரச்சனை முடியும் வரை அந்த மஞ்சள் நிற முடிச்சுக்கு அடியில் பேப்பர் அப்படியே பூஜை அறையிலேயே இருக்கட்டும்.

நிச்சயமாக இந்த பரிகாரத்தை செய்த பின்பு உங்கள் பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்த பிறகு அந்த பேப்பரை எடுத்து கிழித்துப் போட்டு விடுங்கள். கொட்டைப்பாக்கு எடுத்து செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள். அவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே: உங்கள் பணம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வைத் தரும் மூன்றெழுத்து மந்திரம்.

எளிமையான இந்த பரிகாரம் ஐந்து வார திங்கட்கிழமையில் பலன் தரலாம். அல்லது சில பேருக்கு ஏழு வார திங்கட்கிழமையிலும் பலன் தரலாம். அது உங்களுடைய பிரச்சனையை பொறுத்தது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை செய்து பலன் பெரலாம்.

- Advertisement -