ஒருவர் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு பணம் இன்றியமையாததாக விளங்குகிறது. பணம் இல்லை என்றால் இவ்வுலகில் எதையும் செய்ய முடியாது. அப்படிப்பட்ட பணம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு கிடைக்காத பட்சத்தில் நாம் பிறரிடம் இருந்து கடன் வாங்குவோம் அல்லது நம்மிடம் இருக்கும் பணத்தை யாராவது கஷ்டம் என்று கேட்கும் பொழுது கடனாக கொடுப்போம்.
கடன் பெற்றாலும், கொடுத்தாலும் அதனால் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும். அந்த பாதிப்பில் இருந்து வெளி வருவதற்கும் கொடுத்த கடனை திரும்பப் பெறவும், பெற்ற கடனை திரும்ப அடைக்கவும் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த ஆன்மீக பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் பத்தும் செய்யும். பணம் அதிகமாக இருந்தாலும் பிரச்சனை. இல்லாமல் இருந்தாலும் பிரச்சினை. நாமே வைத்திருந்தாலும் பிரச்சினை. பிறரிடம் கொடுத்தாலும் பிரச்சினை. பிறரிடம் இருந்து வாங்கினாலும் பிரச்சினை. இப்படி பணத்தால் நமக்கு பல நன்மைகள் இருந்தாலும் அதே சமயத்தில் அதனால் நமக்கு மனக்கவலையும் ஏற்படும்.
அதிலும் குறிப்பாக நம்மிடம் இருக்கும் பணத்தை நமக்கு தெரிந்தவர்கள் கஷ்டம் என்று கேட்டதும் கடனாக கொடுப்பதே. அவ்வாறு கொடுத்துவிட்டு அந்த பணத்தை திரும்ப பெறுவதற்குள் நாம் ஒரு வழி ஆகி விடுவோம். அதேபோல் நம்மிடம் பணம் இல்லாத சமயத்தில் பிறரிடம் இருந்து வாங்கும் கடனை திருப்பி அடைப்பதற்கும் நாம் போராடுவோம்.
கடனை அடைப்பதற்கும், கொடுத்த கடனை பெறுவதற்கும் வழி தெரியாமல் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த வழியை நமக்கு கூறும் வகையில் தான் இந்த பதிவு திகழப்போகிறது. முதலில் நாம் கொடுத்த கடனை திரும்பப் பெறுவதற்கு அருகில் இருக்கும் உக்கிரமான தெய்வங்களின் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
அதாவது துர்க்கை அம்மன், காளியம்மன், வன துர்கா தேவி, விஷ்ணு துர்கா தேவி போன்ற ஆலயங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் திரிசூலத்திற்கு முன்பாக ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் குங்குமத்தை தடவி வைத்துவிட்டு கற்பூரம் அல்லது அகல் விளக்கில் தீபம் ஏற்றி நாம் யாரிடம் பணத்தை கொடுத்தோமோ அவர்களின் உருவத்தையும் அவர்களின் பெயரையும் மனதார நினைத்து, அவர்கள் என் கடனை திருப்பித் தர வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டு முறையை நாம் வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளலாம். வாரவாரம் இவ்வாறு செய்வதால் நாம் யாரிடம் பணம் கொடுத்தோமோ அவர்கள் விரைவில் நம் பணத்தை திரும்பத் தந்து விடுவார்கள்.
நாம் பெற்ற கடனை திரும்ப அடைப்பதற்கும், நாம் கொடுத்த இடத்தில் இருந்து நமக்கு பணம் திரும்ப பெறவும், இந்த ஒரு மந்திரத்தை நாம் உச்சரித்தாலே போதும். அந்த மந்திரம் “ஓம் அபர்ணாய நமஹ”. இது பார்வதி தேவிக்குரிய மந்திரமாக கருதப்படுகிறது. சிவபெருமானை மணப்பதற்காக பார்வதி தேவி விரதம் இருக்கும் பொழுது எதையும் உண்ணாமல் சதா சர்வ காலம் சிவனையே நினைத்து தவம் புரிந்ததால் அவருக்கு அபர்ணா என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த தேவியை நாம் மனதார நினைத்து நம்மால் எந்த நேரத்தில் கூற முடியுமோ, அந்த நேரத்தில் எல்லாம் இந்த மந்திரத்தை கூறி வர நாம் பெற்ற கடனை திரும்ப அடைப்பதற்குரிய நல்ல வழிகள் நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் கொடுத்த இடத்தில் இருந்தும் பணம் நம்மை வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: கடன் வறுமை பிரச்சனை எதுவும் எங்களுக்கு இல்லை என்ற வார்த்தை நீங்கள் சொல்ல வேண்டுமானால் இதையெல்லாம் மட்டும் எப்போதும் இல்லை என்று தவறியும் கூட சொல்ல கூடாது.
இந்த ஒரு வரி மந்திரத்தை நாம் நம்பிக்கையுடன் நம்மால் இயன்ற அளவு தினமும் கூறி வர கடனை திருப்பி கொடுப்பதற்குரிய வழி நமக்கு பிரகாசமாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.