உங்கள் தீராத பிரச்சனைகளும் எளிதில் தீர உப்பில் மிளகை இப்படி செய்தால் போதுமே!

salt-with-pepper-lakshmi
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினைகள் வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கும். அந்த பிரச்சனைகளுக்கான தீர்வை எதிர்நோக்கி இறை வழிபாடுகளில் ஈடுபடுவது உண்டு. எந்த பிரச்சனைகளுக்கு எந்த பரிகாரத்தை செய்தால் உடனே நிவர்த்தி அடையும் எனும் சூட்சமத்தை அறிந்து கொண்டிருந்தால் நிச்சயம் அந்த பிரச்சினைகளிலிருந்து விரைவாக விடுபட முடியும். இப்படி நம் வாழ்க்கையில் இருக்கும் எந்த விதமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம் தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி முறையாக செய்ய வேண்டும்? அதனால் கிடைக்கும் பயன்கள் என்ன? எனும் சூட்சமத்தை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vishnu-lakshmi1

கல் உப்பு என்பது பாற்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் மகாலட்சுமிக்கு இணையாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. பாற்கடலில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் பாதம்பட்ட இந்த கல் உப்பு வீட்டில் இருந்தாலே அந்த வீடு சுபிட்சம் பெறும் என்பது ஐதீகம். அதனால் தான் நம் முன்னோர்கள் எல்லாம் சாதாரண உப்பை விட கல் உப்புக்கு அதிக மகத்துவம் கொடுத்து பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்று நாமோ தூள் உப்பை பயன்படுத்தி ஆரோக்கியத்தையும், இறை சக்தியையும் குறைத்துக் கொள்கிறோம்.

- Advertisement -

ஆன்மிகம் மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் தூள் உப்பை தவிர்த்து விட்டு கல் உப்பை இன்றே பயன்படுத்த துவங்குங்கள். கல் உப்பை வெள்ளிக் கிழமைகளில் வாங்குவது சகல, சவுபாக்கியங்களையும் பெருக செய்யும் என்பது நம்பிக்கை. இந்த கல் உப்பை எப்போதும் பீங்கான் ஜாடியில் போட்டு வைத்து அதில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்து வைத்தால் மென்மேலும் நம்மிடம் இருக்கும் பணம் பெருகுவதாக நம்பிக்கை உண்டு.

epsam-salt

அதே போல உங்களுடைய பூஜை அறையில் கொஞ்சமாக ஒரு பித்தளை அல்லது செம்பு கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் நான்கைந்து மிளகுகளைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பு, மிளகுடன் சேரும் பொழுது நம் பிரச்சனைகளும் விரைவாக தீரும் என்பது நம்பிக்கை. இதனால் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும். வெள்ளிக்கிழமையில் இதை செய்து வைத்தால் அடுத்த வெள்ளிக்கிழமையில் கொண்டு போய் தண்ணீரில் கரைத்து ஊற்றி விட வேண்டும். அதுவரை உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் மந்திரங்களின் ஒலியில் வைத்திருப்பது அவசியம்.

- Advertisement -

எப்போதும் பூஜை அறையில் உங்களுக்கு மந்திரம் உச்சரிக்க தெரிந்தால் உச்சரியுங்கள் அல்லது ஒலி வடிவமாக மந்திரங்களை கேட்குமாறு பூஜை அறையை அமைத்துக் கொள்ளுங்கள். பூஜை செய்யும் பொழுது மட்டுமாவது மந்திரங்களை ஒலிக்க விடுங்கள். கோவிலில் ஒலிக்கும் மந்திரங்களின் அதிர்வலை நம் எண்ணங்கள் நேர்மறையாக பிரதிபலிக்கின்றன. அதனால் தான் கோவிலுக்கு செல்லும் பொழுது மனதில் அமைதி பிறக்கிறது. அதே போல நம் வீட்டிலும் மந்திரங்கள் ஒலிக்க நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களும், வீட்டில் இருக்கும் தீய சக்திகளும் நம்மை விட்டு விலகி நேர்மறையான சிந்தனைகள் பெருக்கும்.

salt-with-pepper

இதனால் தன்னம்பிக்கை அதிகரித்து, எதையும் நம்மால் சாதிக்கும் வல்லமை பிறக்கும். இறை சக்தி என்பது மந்திரங்களின் மூலம் நமக்கு எளிதாக கிடைக்கும். இந்த கல் உப்பு பரிகாரத்தை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர நம்மிடம் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும். வெள்ளிக்கிழமையில் ஆரம்பித்து மறு வெள்ளிக்கிழமையில் அதனை முடித்து வைக்க வேண்டும். இதே போல தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர வேண்டும். மிக மிக எளிமையாக இருக்கும் இந்த பரிகாரத்தை அனைவரும் முயற்சி செய்து பார்த்து பயனடையலாமே.

- Advertisement -