சிறிய துண்டு இஞ்சி இருந்தால் போதும். திக்கு தெரியாமல் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை கூட காப்பாற்றி கை தூக்கி விடலாம்.

inji
- Advertisement -

வாழ்க்கையில் ஒருவர் மீள முடியாத துயரத்தில் சிக்கியிருக்கிறார். அந்தக் குடும்பமே ஏதோ ஒரு கஷ்டத்தால் நிலைகுலைந்து நிற்கின்றது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எப்படி அந்த பிரச்சனையில் இருந்து மீள வேண்டும் என்பது அந்த சமயத்தில் புரியாது. அப்போது யார் ஒருவர், கஷ்டப்படும் அந்த குடும்பத்திற்கு கை கொடுத்து அந்த குடும்பத்தை மேலே தூக்கி விடுகிறார்களோ அவர்கள்தான் அந்த குடும்பத்திற்கு கடவுளாக இருக்க முடியும். இப்படிப்பட்ட உதவியை நாம் அடுத்தவர்களுக்கு செய்யும்போது நம்முடைய குடும்பம் நன்றாக இருக்கும் என்பதை நாம் எல்லோருமே இன்று மறந்துவிட்டோம். கஷ்டப்படுபவர்களை கண்டு இன்று நாம் ஒதுங்கி தான் நிற்கின்றோம். யாரும் யாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பதே கிடையாது.

யாரையும் குறை சொல்ல வேண்டுமென்று இந்த கருத்தை பதிவிடவில்லை. ஆனால் காலம் போகிற போக்கு இப்போது அப்படித்தான் இருக்கின்றது. நாம் யாருக்கும் உதவிக்கு செல்லவில்லை என்றால், பிற்காலத்தில் நமக்கு உதவிக்காக யாரும் வந்து நிற்க மாட்டார்கள். கூடுமானவரை உங்களால் முடிந்த வரை, உங்களால் இயன்ற உதவியை அடுத்தவர்களுக்கு செய்து வாருங்கள் என்ற இந்த ஒரு நல்ல தகவல்களுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

- Advertisement -

உங்களுடைய குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கின்றது. அந்த பிரச்சினைக்கு தீர்வை தேடி தேடி அலைந்து விட்டோம். ஆனால் விமோசனம் கிடைக்க வில்லை. எதனால் தான் இந்த பிரச்சனை வந்தது. எப்படி இவ்வளவு கஷ்டமான நிலைக்கு தள்ளப்படோம், என்றும் தெரியவில்லை. ஏதோ கெட்ட நேரம் எங்களை ஆட்டிப்படைக்கிறது. எங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஒருத்தர் கூட சந்தோஷமாக இல்லை என்பவர்களுக்கு சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம் தான் இது.

நம்மை சுற்றி இருக்கக் கூடிய எதிர்வினைகளை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட ஒரு பொருள்தான் இஞ்சி. கொஞ்சமாக இஞ்சியை இடித்து சுத்தமான தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். அப்போது அந்த இஞ்சியின் சாறு தண்ணீரில் இறங்கி விடும். இந்த தண்ணீரை உங்கள் வீட்டின் மூலை முடுக்கு முழுவதும் தெளித்து விடுங்கள். குறிப்பாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இந்த 3 கிழமையிலும் வரும் ராகு கால நேரத்தில் இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்து வர வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் கஷ்டங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். பணக்கஷ்டம், மனக்கஷ்டம் தீரும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சண்டை சச்சரவுடன் பிக்கல் பிடுங்கல் உள்ள குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். ஆக மொத்தத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை வினை வெளியே அடித்துத் துரத்தப்பட்டு வீட்டிற்குள் சந்தோஷம் குடியேறும்.

இஞ்சியின் வேர் நல்ல சக்தியை ஈர்க்கக் கூடிய ஆற்றலைக் கொண்டது. குறிப்பாக பணக்கஷ்டத்தில் உள்ளவர்கள் சிறிய துண்டு இஞ்சி வேரை தன்னோடு வைத்துக் கொண்டால் ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. வறுமையில் உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இஞ்சி வாங்குவதற்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கப் போவது கிடையாது. ஐந்து ரூபாய் பத்து ரூபாய் இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து விடலாம். முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு இந்த பரிகாரத்தின் மூலம் பலன் கிடைத்தால் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -