உங்களை வாட்டி வதைக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவற்றிற்கு உடனே தீர்வு கிடைக்க இந்த மந்திரத்தை மட்டும் தினமும் உச்சரித்து வாருங்கள்

sriram
- Advertisement -

ஒவ்வொருவரும் கோவிலுக்கு செல்வதும், வீட்டில் பூஜை செய்வதும் தங்கள் மனதிற்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். இறைவனை வணங்கும் பொழுது மனதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. நமது மனதில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து, ஒரு நிலையான சுவாசம் கிடைக்கிறது. எனவே அனைவரும் இறைவனை வேண்டி பல பூஜைகளும், பரிகாரங்களும் செய்து வருகின்றனர். அவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டும் என்பதற்காக ஸ்ரீராமஜெயம் என்ற ராமரின் மந்திரத்தை எழுதுவதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த ஸ்ரீராமஜெயம் மந்திரத்திற்கு மிகுந்த பலன் இருக்கிறது. இது சக்திவாய்ந்த மந்திரமாகும். இந்த மந்திரத்தை முறையாக உச்சரிக்க வேண்டும், முறையாக எழுத வேண்டும், அதனை முறையாக பயன்படுத்த வேண்டும். இல்லலையென்றால் நாம் நினைத்த காரியம் நடைபெறாது. அதுமட்டுமல்லாமல் தீராத துன்பம் உண்டாகும். வாருங்கள் இந்த ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை எவ்வாறு முறையாக எழுத வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றாலும் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்றாலும் அங்கு ஸ்ரீராமஜெயம் எழுதி வைத்து, அதனை மாலையாக கட்டி இறைவனைக்கு சாற்றி இருப்பார்கள். ஒரு சில இடங்களில் ஒரு பேப்பர் முழுவதும் ஸ்ரீராமஜெயம் எனும் மந்திரம் எழுதி கோவிலில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்படி ஒற்றை தாளில் ஸ்ரீராமஜெயம் எழுதுவது மிகவும் தவறான செயலாகும்.

- Advertisement -

இவ்வாறு ஒரு பேப்பரில் ஸ்ரீராமஜெயம் எழுதி அதனை தவற விட்டு விட்டால் நமது வேண்டுதலுக்கு பலன் இல்லாமல் போய்விடும். அதேபோல் கோவிலுக்கு சென்று அதனை வைக்கும் பொழுது, அது இறைவனின் பாதத்தில் இருந்து பறந்து செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இவ்வாறு ஒற்றைத்தாளில் எழுதாமல், இதற்கென ஒரு நோட்டுப் புத்தகம் வாங்கி, அதில் ஸ்ரீராமஜெயம் என்று 108 முறை எழுத வேண்டும்.

சிலர் ஆயிரம், லட்சம் என்ற கணக்கில் எழுதுகின்றனர். ஆனால் தினமும் 108 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது என்பது சரியான முறையாகும். இவ்வாறு எழுதி வர அந்த நோட்டுப் புத்தகம் முடிந்ததும், இந்த நோட்டை பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாம். அல்லது இதுபோன்ற நோட்டு புத்தகங்களை ஒரு சில கோவில்களில் வாங்கிக் கொள்கின்றனர். அங்கு சென்று இவற்றைக் கொடுத்து விடலாம்.

- Advertisement -

அல்லது பேப்பரில் ஸ்ரீராமஜெயம் எழுதி, அதனை ஒவ்வொரு வார்த்தையாக வெட்டி எடுத்து, மடித்து கண்டு, பச்சை நிற நூலில் மாலையாக தொடுத்து, ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீர்ந்து விடும். உங்கள் எதிரிகள் உங்களை நெருங்க மாட்டார்கள்.

பணப் பிரச்சனை தீர வேண்டும் என்றால் பச்சை நிறத்தில் ஸ்ரீராமஜெயம் எழுத வேண்டும். உங்கள் எதிரிகளின் தொல்லை விலக வேண்டும் என்றால் சிவப்பு நிற பேனாவில் ஸ்ரீராமஜெயம் எழுத வேண்டும். உடல்நலப் பிரச்சனைகள் சரியாக வேண்டுமென்றால் நீலநிறப் பேனாவில் எழுத வேண்டும். வியாபாரம் தொழில் போன்ற பிரச்சனைகளுக்காக கருப்பு நிற பேனாவில் ஸ்ரீ ராமஜெயம் எழுதி வர நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -