பிரத்தியங்கரா தேவி கோவிலுக்கு உங்கள் கையால் இந்த ஒரு பொருளை வாங்கி கொடுத்தால், கண் திருஷ்டியால் எதிரி பிரச்சினையால் உங்கள் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராது.

prathiyagara
- Advertisement -

நமக்கு எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி, எவ்வளவு நெருங்கிய சொந்த பந்தங்களாக இருந்தாலும் சரி, நம்மால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை, இனி இவர்களால் நமக்கு ஒரு லாபமும் கிடையாது, என்ற நிலைமை வந்துவிட்டால் போதும். அடுத்தவர்களுக்கு நாம், நிச்சயம் எதிரி தான். இவர் ரொம்ப நல்லவர், இவர் பொய்யே பேசமாட்டார், இவர் சுயநலம் அற்றவர், என்ற தகுதியை வைத்து இன்று யாரும் யாரிடமும் பழகுவது கிடையாது. இவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, இவரால் நமக்கு என்ன லாபம் கிடைக்கும், என்று தான் இன்று நாம் மற்றவர்களிடம் பழகி வருகின்றோம். இதை சொல்லுவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் கூட இதுதான் நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட சுயநலம் நிறைந்த உலகத்தில் எதிரி தொல்லை இல்லாமல், கண் திருஷ்டி இல்லாமல், நம்மால் வாழவே முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

இப்படி சுயநலம் நிறைந்த, அடுத்தவர்களுடைய நலனை பற்றி ஒரு சிறு துளி அளவும் கவலைப்படாத இந்த உலகத்தில் நாம் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் என்ன செய்வது. அடுத்தவர்களுடைய பொறாமை குணம் எதிரியின் வயிற்றெரிச்சல் இதிலிருந்து தப்பிப்பதற்கு எளிமையான ஆன்மீகம் சொல்லும் பிரத்யங்கிரா தேவி வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த வழிபாட்டை செய்து வந்தால் உங்கள் குடும்பம் பிரத்தியங்கிரா தேவி பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும்.

- Advertisement -

கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க பிரித்திங்கரா தேவி வழிபாடு:
வாரம் ஒரு நாள் உங்களால் எந்த கிழமையில் பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்ய முடியுமோ, அந்த ஒரு நாள் பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டும். பிரத்யங்கிரா தேவி கோவிலின் வாசலை நம் பாதங்கள் மிதித்தாலே போதும். நம் உடம்பில் இருக்கும் கண் திருஷ்டி விலகிவிடும். அம்மனுக்கு இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு உங்களால் முடிந்த பூக்களை வாங்கி கொடுத்து அம்மன் கோவிலில் பத்து நிமிடம் அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி குடும்ப நன்மைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் ஹோமம் வளர்பது மிகவும் பிரசித்தியாக நடைபெறக்கூடிய ஒரு வழிபாட்டு முறை. உங்களுடைய கையால், உங்களால் முடிந்த வரமிளகாயை வாங்கி அந்த கோவில் குருக்களிடம் கொடுத்து விட்டால், நீங்கள் கொடுத்த மிளகாயை அவர் ஹோமத்தில் போடுவார். அப்படி போடும்போது உங்களுடைய எதிரிகள் பிரச்சனை எரிந்து பொசுங்கி போகும். கண் திருஷ்டியால் குடும்பத்திற்கு வரும் கஷ்டங்கள் அனைத்தும் தடுக்கப்படும்.

- Advertisement -

சில கோவில்களில் அந்த ஹோமத்தில் நாம் கலந்து கொண்டு, ஹோம் குண்ட நெருப்பில் நம் கையாலேயே மிளகாய் போடுவதற்கு உண்டான வாய்ப்புகள் கூட கிடைக்கும். அப்படி கிடைத்தால் அந்த வாய்ப்பை நீங்கள் தவற விடாதீர்கள். மாதத்திற்கு ஒரு கிலோ வரமிளகாயை வாங்கி கொடுத்து, அந்த ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். பிரத்தியங்கிரா தேவி கோவிலில் உங்கள் கையால் ஹோம குண்டத்தில் மிளகாய் போட்டு விட்டால் உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் பொசுங்கி போகும். உங்கள் குடும்பம் பெரிய பெரிய கஷ்டத்திலிருந்து கூட பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: தானம் செய்யும் அளவிற்கு உங்களிடம் செல்வம் இல்லையா? வசதி படைத்தவர்கள் செய்யும் தானத்திற்கு சமமாக அதே பலனை தரக்கூடிய மிக எளிமையான தானத்தை இப்படி செய்து வாழ்வில் வளர்ச்சி பெறலாம்.

உதாரணத்திற்கு இந்த ஏவல் பில்லி சூனியம் செய்வினை பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பதற்கு நாம் ஏதேதோ வழியைத் தேடி செல்வோம். நிறைய பணம் காசு செலவு செய்வோம். வாரம் ஒரு முறை பிரத்யங்கிரா தேவியை பார்த்து வழிபாடு செய்துவிட்டு, மாதம் ஒருமுறை இந்த மிளகாயை கோவிலுக்கு வாங்கி கொடுத்து விட்டால் போதும். உங்கள் குடும்பத்திற்கு கெட்ட சக்தியால் கண் திருஷ்டியால், எதிரியால் எந்த பிரச்சனையும் வராது. அந்த பிரத்யங்கிராதேவி உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக் கொள்வாள். வாய்ப்பு உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -