50 Proverbs in Tamil : தமிழ் பழமொழிகள் என்பது தமிழ் சமூதாயத்தில் வாழ்ந்த முன்னோர்கள் தங்களது அனுபவங்களை எளிய சொற்றொடர்களாக அமைத்து அதை தங்களது சந்ததியினருக்கு கூறியதே ஆகும். இந்த பழமொழிகள் என்பது காலம் காலமாக பல சந்ததியினரை கடந்து இன்றும் தமிழகத்தில் ஏதோ ஒரு விடயத்திற்க்காக எல்லா இல்லங்களிலும் ஏதோ ஒரு நேரத்தில் கூறப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் 50 தமிழ் பழமொழிகள் விளக்கத்துடன் (50 proverbs in Tamil with meaning) இதோ.
தமிழ் பழமொழிகள்
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் | "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதே சரி. நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாதவர்கள், முருகப்பெருமானை வேண்டி சஷ்டியில் விரதம் இருந்து வழிபாட்டால் குழந்தை உண்டாகும். |
வர வர மாமியார் கழுதை போல் ஆனார் | "வர வர மாமியார் கயிதை போல ஆனார்" என்பதே சரி. இதில் கயிதை என்னும் சொல்லுக்கு பொருள் ஊமத்தங்காய். இந்த ஊமத்தங்காயானது பூவாக இருக்கும்போது அதை பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால் நாட்கள் ஆக ஆக, இந்த ஊமத்தம்பூ காயாக மாறி அதை சுற்றி முட்கள் இருப்பது போல இருக்கும். இது விடமும் கூட. இது போல, மாமியார் ஆரம்பத்தில் மருமகளிடம் அன்பாக பேசினாலும், போக போக கொடிய சொற்களை (கயிதை போல) பயன்படுத்துவாள். |
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ஆவான் | "ஆயிரம் வேறை கொண்டவன் அரைவைத்தியன் ஆவான்" என்பதே சரி. ஒரு நோய்க்கு ஆயிரம் மூலிகை வேர்களை கொண்டு மருந்து தயாரித்து கொடுப்பவனே அரைவைத்தியன் ஆவான். |
களவும் கற்று மற | "களவும், கத்தும் மற" என்பதே சரி. களவு என்றால் திருடுதல் என்று பொருள். கத்து என்பதற்கு பொய் சொல்லுதல் என்றொரு பொருள் உண்டு. பிறருக்கு உரி பொருட்களை திருடுதல், பொய் சொல்லுதல் ஆகிய தீய பழக்கங்களை மறந்து வாழ வேண்டும். |
கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு. பாத்திரம் அறிந்து பிச்சை இடு | "கோத்திறம் அறிந்து பெண் கொடு. பாத்திறம் அறிந்து பிச்சை இடு" என்பதே சரி. 'கோ'த்திறம் - கோ என்றால் அரசன் என்று பொருள். கோத்திறம் என்றால் அரசனின் திறமை. 'பா'த்திறம் - பா என்றால் பாடல் என்று பொருள். ஒரு மன்னனின் திறமையை அறிந்து அவனுக்கு பெண் கொடுக்க வேண்டும். அதே போல ஒரு மன்னம் தன்னுடைய அவையில் கவிபாடும் புலவர்களின் திறமைக்கு ஏற்ப அவன் பரிசு வழங்க வேண்டும். |
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு | "நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு" என்பதே சரி. அந்த காலத்தில் சந்தையில் மாட்டை வாங்கும்போது மாட்டின் காலடி சுவடை வைத்து அதன் பலத்தை அறிவதுண்டு. நடக்கும்போது அதன் காலடி சுவடு எந்த அளவிற்கு ஆழமாக உள்ளதே அந்த அளவிற்கு அந்த மாடு பலம் பொருந்தியதாக அறியப்படும். |
ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம். | "ஆயிரம் பேருக்கு போய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்" என்பதே சரி. |
ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் | "ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்" என்பதே சரி. முற்காலத்தில் ஆடி மாதத்தில் மழையுடன் சேர்ந்து சாரலும் வீசும். இதன் காரணமாக மனிதர்களின் உடலில் உள்ள சூடு தணிந்து அம்மை நோய் விலகும். |
கண்டதை கற்க பண்டிதன் ஆவான். | "கண்டு அதை கற்க பண்டிதன் பண்டிதன் ஆவான்" என்பதே சரி. அறிவு சார்ந்த நூல்களை கண்டு அதை ஆராய்ந்து கற்பவன் பண்டிதன் ஆவான். |
சோழியன் குடுமி சும்மா ஆடுமா. | "சோழியன் குடுமி சும்மாடு ஆகுமா?" என்பதே சரி சும்மாடு - சுமை தூங்குபவர்கள் சுமையின் பாரம் தலையில் தெரியாமல் இருக்க சுமைக்கு கீழ் சும்மாடு வைப்பதுண்டு. சோழியன் - சோழியை உருட்டி பலன் சொல்லுபவர். இவருடைய தலையில் குடுமி இருக்கும். சோழியனுடைய தலையில் இருக்கும் குடுமி சும்மா ஆகிவிட முடியாது என்பதே இந்த பழமொயின் பொருள். |
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
Proverbs in Tamil
ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால். | "அயத்தில் ஒரு கால்; செயத்தில் ஒரு கால்" என்பதே சரி. அயம் என்றால் குதிரை என்று பொருள். செயம் என்ற சொல்லுக்கு பூமி வெற்றி என்றொரு பொருள் இருந்தாலும் இதற்க்கு பூமி என்று மற்றொரு பொருள் உண்டு. குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள நினைக்கும் ஒருவன் குதிரையின் மீது ஒரு காலையும் நிலத்தின் மீது ஒரு காலையும் வைத்து குதிரை ஏற்றம் கற்றுக்கொள்ள முடியாது. |
பழம் நழுவி பாலில் விழுந்தது போல | "பழம் நழுவி பாகில் விழுந்தது போல" என்பதே சரி. பாகு என்பது வெல்லப்பாகை குறிக்கிறது. பொதுவாக பழமே இனிபாக இருக்கும். அந்த பழம் வெல்லப்பாகில் விழுந்தால் அதன் சுவை இன்னும் அதிகரிக்கும். |
கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லைக் காணோம் | "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்" என்பதே சரி. நாயகன் என்பது இங்கு கடவுளை குறிக்கிறது. ஒரு கற்சிலையை கற்சிலையாக பார்த்தால் அதில் கடவுள் தெரியமாட்டார். அதே கற்சிலையை கடவுளாக பார்த்தால் அங்கு கல் தெரியாது. |
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும். | "அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்" என்பதே சரி. அகம் என்றால் மனம் என்று பொருள். எந்த ஒரு விடயத்தையும் மனதில் பதியவைக்கும் முன்பு அதை தெளிவாக ஆராய்ந்து அறிந்து பதியவைக்க வேண்டும். |
குரைக்கிற நாய் கடிக்காது. | "குழைகிற நாய் கடிக்காது" என்பதே சரி. நம்மிடம் பாசமாய் குழையும் நாய் எப்போதும் நம்மை கடிக்காது. |
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான் | "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்" என்பதே சரி. ஏழை ஒருவன் பணக்காரன் ஆகும்போது அவரிடம் யாரேனும் பண உதவிகேட்டு நள்ளிரவில் வந்தாலும் அவர்களுக்கு அவன் உதவி செய்வான். |
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே. | "கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே" என்பதே சரி. கன்னக்கோல் என்பது ஒருவகை கருவி. அதை கொண்டு அக்காலத்தில் திருடர்கள் வீட்டில் துளையிட்டு திருடுவார்கள். அது போல கப்பல் கவிழ்ந்த அளவிற்கு நஷ்டம் வந்தாலும் திருட்டு செயலில் ஈடுபட கூடாது. |
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் | "அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்" என்பதே சரி. தகரும் என்றால் உடையும், உடைந்து சிதறும் என்று பொருள். |
ஆமை புகுந்த வீடு விளங்காது. | கல்லாமை, இயலாமை, முயலாமை ஆகிய இந்த 3 ஆமைகளை தான் இங்கு குறிப்பிடுகின்றனர். இந்த 3 ஆமைகளும் ஒரு இல்லத்தில் புகுந்துவிட்டால் அந்த இல்லம் விளங்காது. |
ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ | ஆவாரைப் பூவில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பூவின் இதழ்களை வெயிலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி உண்டுவந்தால் தேக ஆரோக்கியம் கூடும் என்பதை கூறும் பழமொழி இது. |
எறும்பு ஊற கல்லும் தேயும்
Proverbs in Tamil with meaning
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை | "போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை" என்பதே சரி. தப்பு செய்பவர்களை திருத்தி எப்படி நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதை கற்று தருபவர்களுக்கு போலீஸ் வேலையும், தனது வாக்கின் மூலம் மற்றவர்களின் அறிவை பெருக்கும் செயல்களை செய்பவர்களுக்கு வாத்தியார் வேலையும் சிறப்பாக இருக்கும். |
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. | மகாபாரதத்தில் கர்ணன், பஞ்சபாண்டவர்களான தனது சகோதரர்கள் ஐவரோடு தன்னை இணைத்துக்கொண்டு அருவராக இருந்து போரிட்டாலும் சரி, அல்லது கௌரவர்கள் 100 பேருடன் சேர்த்து போரிட்டாலும் சரி, சாவு என்பது நிச்சயம் வரும். |
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யலாமா? | நமக்கு ஒரு வேளையாவது பசிக்கு உணவளித்த வீட்டிற்கு என்றும் கெடுதல் செய்யவோ நினைக்கவோ கூடாது. |
வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி | முருங்கைக் கீரையை நாம் எப்போதும் அதிகமாக வேகவைத்து உண்ணக்கூடாது. வேகவைக்கும் நேரம் அதிகம் ஆக ஆக அதன் சத்துக்கள் குறைந்துகொண்டே போகும். அதே போல அகத்தி கீரையை வேகவைக்காமல் உன்ன கூடாது. அகத்தி கீரை வெந்தால் தான் அது நம் உடலிற்கு உகந்த சத்துக்களை தரும். |
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி | ஓட்டை கப்பல் என்பது நமது உடல். ஒன்பது மாலுமி என்பது நமது உடலில் இருக்கும் நவதுவாரங்கள். |
மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி | ஒரே வீட்டில் வாழும் மாமியாரும் மருமகளும் ஒரே தவறை செய்தாலும், மாமியாரின் தவறு பெரிதாக பேசப்படாது. ஆனால் மருமகள் செய்த தவறை மாமியார் பெரிது படுத்துவார். |
உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா? | உடையார்பாளையம் என்பது சத்திரியர்கள் அதிகம் வசிக்கும் வீரம் நிறைந்த பகுதியாக இருந்தது. உள்ளூரில் வீரச்செயல் புரியாதவன் உடையார்பாளையம் சென்று அங்கு உள்ளவர்களிடம் தனது வீரத்தை நிரூபிப்பானா என்பதே இந்த பழமொழியின் விளக்கம். |
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும் | ஊரான் பிள்ளை என்பது இங்கு மனைவியை குறிக்கிறது. கர்ப்பகாலத்தில் ஒரு கணவன் தன் மனைவியை சிறப்பாக கவனித்து உணவளித்து வந்தால், அவள் வயிற்றில் வளரும் அவனுடைய குழந்தை தானாக சிறப்பாக வளரும். |
இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொழுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு | எவர் ஒருவர் எள்ளை உண்கிறாரோ அவருடைய உடம்பில் எடை கூடும். அதே போல எவர் ஒருவர் கொள்ளை உண்கிறாரோ அவருடைய எடை குறையும். இதனாலேயே இளைத்தவனுக்கு (ஒல்லியான தேகம் உடையவனுக்கு) எள்ளைக்கொடு என்றும் நன்கு கொழு கொழுவென்று இருப்பவனுக்கு கொள்ளைக் கொடு என்றும் சொல்வதுண்டு. |
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் | மிளகு என்பது அதிகப்படியான மருத்துவ குணம் கொண்ட ஒன்று. பகைவர்கள் வீட்டில் உண்ணும்போது அந்த உணவில் விடம் கலக்கப்பட்டிருந்தாலும் 10 மிளகை கொண்டு அந்த விடத்தை முறிக்கலாம். அவ்வளவு வலிமை மிளகுக்கு உண்டு என்பதை உணர்த்தவே இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. |
தமிழ் பழமொழிகள் அதன் விளக்கம் - Proverbs in Tamil
பழமொழிகள் | விளக்கம் |
ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம். | ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும் என்பதே சரி. ஆ என்றால் பசு என்று பொருள். பசுவின் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய்யை ஒரு மனிதன் 40 வயது வரை சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிட்டால் அது உடலில் கொழுப்பை அதிகரிக்கும். 40 வயதிற்கு மேல் பூவில் இருந்து எடுக்கப்படும் நெய்யான தேனை பயன்படுத்துவதே நல்லது. |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் | மனதில் இருக்கும் எண்ணங்களை முகத்தை பார்த்தே அறிந்துவிடலாம் என்பதை உணர்த்தும் பழமொழி இது. |
ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. | என்ன தான் ஊரார் வீட்டில் நெய் விட்டு ருசியாக சமைத்திருந்தாலும் அது தன் மனைவியின் கை பக்குவத்திற்கு ஈடாகாது என்று கணவன் மார்கள் கூறும் பழமொழி இது. |
ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது | நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்காது. |
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது. | உலை பொங்கி வராமல் இருக்க அடுப்பின் தீயை குறைத்து ஒரு தட்டை கொண்டு மூடி சமைத்துவிடலாம். ஆனால் எந்த ஒரு ரகசியமும் யாரிடமும் பாதுகாப்பாக இருக்கிறது. எப்படியாவது அது கசிந்துவிடும். |
போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து | எதிலும் போதும் என்ற திருப்தி அடைவதே மனதிற்கு இனிமை தரும். |
ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான். | தந்தையின் தொழிலை மகனுக்கு யாரும் கற்றுத்தரவேண்டிய அவசியம் இல்லை. அவன் தன் தந்தையுடன் இருக்கும்போது அவனை அறியாமலே அதை அவன் கற்றுக்கொண்டு அதில் அவன் சிறந்தவனாகவும் விளங்குவான். |
பழகப் பழக பாலும் புளிக்கும் | ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதன் மூலம் ஒருகட்டத்தில் அலுப்பு தட்டும். |
தம்பியுடையான் படைக்கஞ்சான் | தம்பியை உடைய ஒரு அண்ணன் எதற்கும் அஞ்சாமல் அனைத்தையும் தைரியமாக செய்யலாம். ஒருவேளை தனக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தாலும் தன் குடும்பத்தை காத்து நிற்க தன் தம்பி இருக்கிறான். |
பசித்தபின் புசி | நன்றாக பசி எடுத்த பிறகு உண்டோமானால் உணவு ருசியாக இருக்கும். அதே சமயம் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம். |
சிறப்பான 50 பழமொழிகள் விளக்கத்துடன் (50 proverbs in Tamil with meaning) மேல கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பழமொழிகள் தற்போதும் பெரிய அளவில் கூறப்படும் ஒன்றாக உள்ளது. சில பழமொழிகளை நாம் இதுவரை தவறாக பயன்படுத்தி இருப்போம். அத்தகைய பழமொழிகள் திருத்தப்பட்டு அதற்கான சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.