எள் தானியம் பலன்கள் | Sesame seeds Benefits in Tamil

Sesame seeds Benefits Tamil
Sesame seeds Benefits Tamil
- Advertisement -

இந்த உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான வகையிலான உணவு தானியங்கள் இருக்கின்றன. இந்த உணவு தானியங்கள் ஒவ்வொன்றையும் மனிதர்களில் தங்களின் உடல்நலம், தட்பவெட்பம், காலநிலைக்கேற்ற வகையில் உணவாக பயன்படுத்துகின்றனர். அத்தகைய தானியங்களில் ஒன்றுதான் எள் ஆகும். எள் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் இருக்கின்றன. இந்த இரண்டு வகை எள் தானியங்களையும் (Sesame seeds Benefits in Tamil) சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

புரதச்சத்து

- Advertisement -

எள் தானியத்தில் மனிதர்களுக்கு தேவையான புரதச்சத்து அதிகம் இருக்கின்றது. ஒவ்வொரு எள் தானியத்திலும் 20% அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் எள் தானிய விதைகளில் 4.7 சதவீதம் அளவிற்கு புரதச்சத்து நமக்கு கிடைக்கிறது. நம் முன்னோர்கள் “இளைத்தவனுக்கு எள் கொடு” என்கிற ஒரு பழமொழியை கூறிச் சென்றனர். எள் தானியங்களை இளைத்த உடல்வாகு கொண்டவர்கள் தினமும் சாப்பிட்டு வர, அவர்களின் உடலில் சீரான தசைகளின் வளர்ச்சி ஏற்பட்டு, உடல் வலிமையை கூடும். குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் மற்றும் பெண்கள் எள் தானியங்களை சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடல் தசை வலிமை பெற்று, சீரான உடல் இயக்கத்திற்கு வழிவகை செய்யும்.

நீரிழிவு நோய்

- Advertisement -

எள் தானியங்களை சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படாமல் காக்கிறது. எள் தானியத்தில் அதிகளவு மக்னிசிய தாது சத்து மற்றும் இதர தாது சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மேலும் எள் தானியத்திலிருந்து பெறப்படுகின்ற எண்ணெயில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அதிகம் இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எள் தானியத்திலிருந்து உருவாகின்ற எண்ணையை சாப்பிடுகின்றவர்களின் உடலில் பிளாஸ்மா எனப்படும் குருதி அணுக்களை ஏந்தி செல்லம் திரவத்தில் குளுக்கோஸ் சர்க்கரை சத்தின் அளவை சமச்சீரான நிலையில் வைத்து அதிதீவிர நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கின்றது.

ரத்த அழுத்தம் குணமாக

- Advertisement -

இன்று இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கை முறை, பரம்பரை போன்ற காரணங்களால் பலருக்கும் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுகின்றது. எள் தானியங்களை சாப்பிடுபவர்களுக்கு இந்த ரத்த அழுத்தம் மிகவும் கட்டுப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக கருப்பு எள் தானியங்களை சாப்பிடுபவர்களுக்கு அந்த தானியத்தில் இருந்து உருவாகின்ற எண்ணெயில் இருக்கின்ற மக்னீசியம் மற்றும் இதர தாதுக்கள் ரத்த அழுத்தத்தை சரியான அளவில் காப்பதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

கொலஸ்ட்ரால் அளவு குறைய

கொலஸ்ட்ரால் என்பது நாம் உண்ணும் உணவில் இருந்து பிரிந்து நமது உடலில் சேருகின்ற கெட்ட கொழுப்புச் சத்தாகும். இந்த கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பு, நமது உடலில் அதிகளவு சேரும் பொழுது, நமக்கு இருதய பாதிப்பு, நரம்பு மண்டல கோளாறுகள் போன்ற பல உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

எள் தானியங்களை சாப்பிடுபவர்களின் உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு அதிகம் சேர்வதில்லை என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் எள்ளில் இருக்கின்ற பைடோஸ்டீரால் எனப்படும் வேதிப்பொருளாகும். இந்த பைட்டோஸ்டீரால் வேதிப்பொருள் நமது உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுப்பதாகவும், அதிலும் வெள்ளை எள் தானியத்தை காட்டிலும் கருப்பு எள் தானியங்களில் இந்த பைட்டோஸ்டீரால் வேதிப்பொருள் அதிகம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செரிமான சக்தி அதிகரிக்க

ஒரு சிலருக்கு சாப்பிட்ட உணவை சரியாக செரிமானம் செய்கின்ற தன்மை இல்லாமல் போகின்றது. இந்த செரிமானமின்மை பிரச்சனைக்கு பிரதான காரணமாக இருப்பது நார்சத்து மிகுந்த உணவுப் பொருளை அதிகம் சாப்பிடாதது தான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எள் தானியத்தில் நமது செரிமான சக்தியை பலப்படுத்த கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே எள் தானியங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கப்பெற்று, அவர்களுக்கு செரிமான சக்தி அதிகரிப்பதோடு, செரிமான உறுப்புகளையும் எள் பலப்படுத்துவதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சருமம் அழகு பெற

நமது தோல் அழகாகவும் இளமையாகவும் காட்சியளிப்பதற்கு தோலில் கொலாஜன் எனப்படும் புரதப் பொருள் சீரான அளவில் இருப்பது அவசியம். எள் தானியங்களை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் சரும திசுக்களில் இந்த கொலாஜன் புரதப் பொருள் குறையாமல் சருமத்தில் மிருதுவான தன்மை காக்கப்பட்டு இளமையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் எல்தானியத்தில் லிங்க் எனப்படும் துத்தநாகசத்து அதிகம் இருப்பதால், அது தோலில் இருக்கின்ற திசுக்களின் வளர்ச்சிக்கும், பெருமளவு உதவுகிறது. தொடர்ந்து எள் சாப்பிடுபவர்களுக்கு சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவதாகவும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க

தற்காலத்தில் பலரையும் அதிகளவு பாதிக்க கூடிய ஒரு நோயாக இருதய நோய்த் திகழ்கிறது. இந்த இருதய நோய் வயது, பாலின பேதங்களில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்குகிறது. முறையான உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்களை ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எள் தானியத்தில் ஆண்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் மற்றும் ரத்தத்தில் உறைவுத்தன்மை ஏற்படாமல் தடுக்கக்கூடிய ஆற்றலும் அதிகம் இருப்பதால், அடிக்கடி உணவில் எல் தானியங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.

கண் பார்வை தெளிவடைய

ஒரு மனிதனுக்கு கண் பார்வை என்பது மிகவும் அவசியமானது. சிறப்பான கண்பார்வை பெற ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எள் தானியங்களில் இருக்கின்ற எண்ணெயில் கண் பார்வையை தெளிவடைய செய்கின்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வெள்ளை அல்லது கருப்பு எள் போன்ற எந்த வகை எள்தானியங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கண் சார்ந்த நரம்புகள் வலிமை பற்றி கண் பார்வை தெளிவடையும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

தலைமுடி வளர்ச்சி

தற்காலங்களில் இளம் தலைமுறையினர் பலருக்கும் தங்களின் தலைமுடி கொட்டுதல் என்பதை ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக கருதுகின்றனர். நம் தலைமுடியை முறையாக சுத்தம் செய்து பராமரிப்பதுடன் தலைமுடிக்கு ஊட்டம் அளிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவதாலும் தலை முடி கொட்டுதல், இளநரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். எள் தானியங்களை சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கின்ற எண்ணெய் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், தலைமுடிக்கு பளபளப்பு தன்மையையும் கொடுப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரத்த சோகை குணமாக

உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் ரத்தசோகை ஏற்படுகிறது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் ஏற்படும் பொழுது, அவர்களின் உடல் பலவீனம் ஆகிவிடும். எள் தானியங்களில் அதிலும் குறிப்பாக கருப்பு எள் தானியங்களில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த கருப்பு எள் தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை வளரும் குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதன் மூலம், அவர்களுக்கு இரும்புச் சத்து கிடைக்கப்பெற்று அதன் மூலம் அவர்களுக்கு ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கப்பட்டு உடல் பலம் பெருகவும் வழிவகை செய்கிறது.

எலும்புகள் உறுதி பெற

ஒவ்வொரு மனிதனுக்கும் வயது ஏற ஏற அவர்களின் எலும்பின் வலிமை குறைந்து கொண்டே வரும் என்பது மருத்துவ ஆய்வுகளின் முடிவாகும். எலும்புகள் எப்போதும் வலிமையாக இருக்க கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். ஒரு கைப்பிடி அளவு எள் தானியங்களில் நமது உடலில் இருக்கின்ற எலும்புகள் வலிமை பெறும் அளவிற்கு கால்சியம் சத்துக்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட அளவில் எள் தானியங்களை (Sesame seeds Benefits in Tamil) சாப்பிடுபவர்களுக்கு உடலில் கால்சியம் சத்து சேர்ந்து அவர்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

- Advertisement -