பர்சில் நிறைய பணம் சேர பரிகாரம்

bayleafe
- Advertisement -

பணம் தான் பணத்தை ஈர்க்கும் என்று சொல்லுவார்கள். உங்களுடைய பர்சில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்று பணத்தை கொடுக்கும் பொருட்கள் இருந்தாலும் சரி, ஒரு நூறு ரூபாய் நோட்டை எப்போதுமே பர்சில் வைக்க வேண்டும். பர்சில் கொஞ்சமாவது பணம் இருந்தால் தான், மேலும் பணத்தை ஈர்க்க முடியுமே தவிர டெபிட் கார்டு கிரெடிட் கார்ட் வைத்திருக்கும் பர்ஸ், பணத்தை ஈர்த்துக் கொடுக்காது.

அது உங்களுக்கு எதிர்மறை விளைவுகளை உண்டு பண்ணும். ஆகவே பர்ஸில் சில ரூபாய் நோட்டுகள் சில நாணயங்களை எப்போதும் போட்டு வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் பணம் சேரும்.

- Advertisement -

பர்ஸில் பணம் சேர பரிகாரம்

மாதத்தில் ஒரு நாள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பச்சை நிற பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பிரியாணி இலையில் 414 888 என்ற நம்பரை எழுதி உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, நிறைய பணம் வருமானமாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

இந்த பரிகாரத்தை எந்த நாளில் எந்த கிழமையில் செய்தாலும் தவறு கிடையாது. மாதத்தில் ஒரு நாள் இந்த நம்பரை எழுதிய பிரியாணி இலையை பர்ஸில் வைக்க வேண்டும். நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பிரபஞ்சத்திடம் வேண்டி இந்த பரிகாரத்தை செய்யும் பட்சத்தில் இந்த பரிகாரத்திற்கு உண்டான பலன் விரைவில் எளிதில் கிடைக்கும்.

- Advertisement -

மாதத்தில் ஒரு நாள் புது பிரியாணி இலையில் இந்த நம்பரை எழுதும்போது, பழைய பிரியாணி இலையை எடுத்து நெருப்பில் பொசிக்கி விடுங்கள். அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து சிங்கில் கொட்டி விடுங்கள். பரிகாரம் இவ்வளவு தான். பிரியாணி இலைக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை இருக்கிறது. இந்த ஏஞ்சல் நம்பர், அந்த பிரியாணி இலையில் சேரும்போது பெரிய அளவில் நல்ல மாற்றம் நிகழும். மனம் விரும்பி பணத்தை கேளுங்கள். நிச்சயம் பிரபஞ்சம் உங்களுக்கு பணத்தை கொட்டி கொட்டி கொடுக்கும்.

சரி மேலே சொன்னது ஒரு பரிகாரம் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். இது அல்லாமல் 21 நாட்களில் நீங்கள் மனதில் நினைத்த விஷயங்களை சாதித்து காட்ட ஒரு எளிமையான பரிகாரத்தையும் இப்போது பார்க்கலாம். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.

- Advertisement -

நல்ல கணவன் கிடைக்க வேண்டும், நல்ல மனைவி கிடைக்க வேண்டும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் இந்த கடனை மட்டும் சீக்கிரம் திருப்பி தர வேண்டும், இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் அல்லவா. அதில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, அந்த ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்து உங்களுடைய இடது கை மோதிர விரலுக்கு கீழ் பக்கம் 23 என்ற எண்ணை எழுதி, அந்த எண்ணெய் வட்டம் போட்டு விடுங்கள் அவ்வளவுதான். இது கொஞ்ச நேரத்தில் அழிந்து போகும், காணாமல் போகும் பரவாயில்லை.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகள் தீர சப்பாத்தி கள்ளி பரிகாரம்

காலையில் எழுந்து இதுபோல மோதிர விரலுக்கு கீழே இந்த நம்பரை எழுதிவிட்டு உங்கள் குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் போதும். நீங்கள் நினைத்தது 21 நாட்களில் நிச்சயம் நடக்கும் முயற்சி செய்து பாருங்கள். இந்த பரிகாரத்திற்கும் நிறைய காசு பணம் நிறைய பொருள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை மட்டும் தான் மூலதனம். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -