PUBG : இனிமேல் பப்ஜி விளையாட்டினை எந்த போலியான இடையூறும் இன்றி விளையாடலாம். வந்துடுச்சி புது டெக்னாலஜி

- Advertisement -

பப்ஜி விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று அனைவரையும் கவர்ந்து இழுத்து உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்களுடன் வெற்றிகரமாக விளையாட்டு வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக இந்த விளையாட்டில் போலிகுழுக்கள் உருவாகி விளையாட்டின் இடையே இடையூறுகளையும் தேவையற்ற குழப்பத்தினையும் தருகிறது. இதனை தடுக்க இப்போது பப்ஜி குழு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

Pubg

பப்ஜி குழுமம் போலிக்குழுக்களை கண்டறிய இரண்டு மென்பொருட்களை அதாவது சாப்ட்வேர்களை பயன்படுத்துகிறது. அந்த சாப்ட்வேர் பாட்லீ மற்றும் அனக்கெட்டார் இவைகள் மூலம் பயன் இருந்தாலும் தற்போது டெவலப்பர்களையும் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். பப்ஜி கிராப் என்கிற குழு சாதாரண விளையாட்டில் அசாதாரணமான செயல்களை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன்மூலம் அவர்கள் கணக்கை நிறுத்த முடிவு.

- Advertisement -

இவ்வாறு தொடர்ந்து விளையாட்டினை மேம்படுத்தும் திட்டத்தினை கையாண்டுவரும் பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை கேட்டு வருகின்றனர். ஏனெனில் உலக அளவில் வெற்றிகரமான இந்த விளையாட்டால் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவது விடுத்து விளையாட்டிற்கு அதிக நேரத்தினை செலவழிப்பதால் பரிச்சையில் பாஸ் ஆக மாட்டார்கள் என்று ஒரு அமைப்பு இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

pubg 1-compressed

எவ்வளவு பிரச்சனைகள் இந்த விளையாட்டிற்கு வந்தாலும் அதனை கவலையின்றி தொடர்ந்து இந்த விளையாட்டினை ஆடி பயனாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது பப்ஜி நிர்வாகம். மேலும், கூடிய விரைவில் பிரச்சனைகள் கலையப்பட்டு நிம்மதியாக விளையாட எங்களது அணி தொடர்ந்து வேலை செய்து வருகிறது என்று பப்ஜி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -