நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. பொன்னும் பொருளும் சேர இந்த பொருட்களை பெருமாளின் பாதங்களில் வைத்து வழிபாடு செய்யுங்கள்.

perumal
- Advertisement -

பெருமாள் வழிபாடு போதும் போதும் என்ற அளவுக்கு பொன்னும் பொருளையும் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. இதுவரை பெருமாளுக்கு விரதம் இல்லாதவர்கள், வழிபாட்டை தவறவிட்டவர்கள், நாளைய தினம் வீட்டில் பெருமாளை நினைத்து ஒரு பூஜையை செய்து விடுங்கள். அது உங்களுக்கு நிறைவான வாழ்க்கையை மன நிம்மதியை கொடுத்து விடும். சரி, நாளைய தினம் எளிமையான பூஜையை வீட்டில் இருந்தபடி எப்படி செய்வது. பெருமாளின் பாதங்களில் நாம் வைத்து வழிபட வேண்டிய சிறப்பான அந்த பொருட்கள் என்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

விசேஷ பூஜை என்றால் உங்கள் பூஜை அறையையும், வீட்டையும் எப்படி சுத்தம் செய்ய வேண்டுமோ அதை பின்பற்றிக் கொள்ளுங்கள். அதன் பின்பு நாளை காலையில் எழுந்து பெருமாளுக்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு பெருமாளை வணங்கி விரதத்தை தொடங்கலாம். பெருமாளுக்கு மாவிளக்கு போடுவது, 3 வகை பிரசாதம், 5 வகை பிரசாதம் செய்வது என்பது அது உங்களுடைய விருப்பம். பெரும்பாலும் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், எலுமிச்ச பழ சாதம், வெண்பொங்கல் இப்படிப்பட்ட கலவை சாதத்தை பிரசாதமாக பச்சரிசியில் செய்து வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாளைய தினம் பொன்னும் பொருளும் சேர வேண்டும் என்று தானே பெருமாளுக்கு நாம் வழிபாடு செய்யப் போகின்றோம். உங்களுடைய வீட்டில் இருக்கும் பொன்னையும் பொருளையும் எடுத்து பெருமாளின் பாதங்களில் கட்டாயம் வைக்க வேண்டும். தங்க நகை உங்கள் வீட்டில் இருக்கும் எந்த தங்க நகையாக இருந்தாலும் சரி, ஒரு சின்ன குண்டுமணி தங்கமாக இருந்தாலும் சரி, அதை மஞ்சள் தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு துடைத்துவிட்டு பெருமாள் மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் அந்த நகையை வைத்து விடுங்கள். பிறகு உங்களால் முடிந்த காணிக்கை 101, 51, 11 எவ்வளவு ரூபாய் வைக்க முடிந்தாலும் அதையே அந்த தங்க நகையோடு சேர்த்து பெருமானின் பாதங்களில் வைத்து விடுங்கள்.

வாழ்நாள் முழுவதும் எங்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்று அந்த நோட்டிற்கும் நகையுக்கும் மேலேயே மூன்று ஏலக்காய்களையும் வைத்து விடுங்கள். வீட்டில் பச்சை கற்பூரம் இருந்தால் அதையும் அந்த நகையின் மேல் வைத்து இந்த எல்லா பொருட்களையும் பெருமாளின் பாதங்களில் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சிறிய தட்டில் கூட எல்லா பொருட்களையும் வைத்து பெருமாளுக்கு முன்பாக அலங்கரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

சிறப்பு ஆரத்தி ஆக நாளை பெருமாளுக்கு பச்சை கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பிப்பது மிக மிக விசேஷமான பலனை கொடுக்கும். பெருமாளுக்கு மிகவும் பிடித்த பச்சை கற்பூரத்தின் வாசகம் உங்கள் வீட்டில் நிரம்பி இருக்கும் போது அந்த பெருமாளும் மகாலட்சுமியும் மன நிறைவோடு வந்து உங்கள் வீட்டில் நிரந்தரமாக வந்து கொள்வார்கள்.

இதையும் படிக்கலாமே: இனி புத்திர பாக்கியமே கிடைக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் கூட, இந்த விளக்கை ஏற்றினால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி.

கடந்த சனிக்கிழமைகளிலேயே பெருமாள் வழிபாட்டை நாங்கள் தளிகையிட்டு முடித்து விட்டோம் என்பவர்கள் கூட, நாளைய தினம் பெருமாளின் பாதங்களில் சிறிய தட்டில் மேல் குறிப்பிட்ட பொன் பொருட்களை எல்லாம் வைத்து பிரசாதமாக வெறும் பழத்தை வைத்து வழிபாடு செய்தால் கூட உங்களுக்கு முழு பலன் கிடைக்கும். நாளை எந்த வழிபாடுமே செய்ய முடியவில்லை என்பவர்கள் கூட சுத்தபத்தமாக குளித்துவிட்டு, மனம் உருகி உண்மையாக ஒரு முறை கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு கூட பொன்னும் பொருளும் குவியும். அதே சமயம் மோட்சமும் கிட்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -