புரட்டாசி மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

puratasi palan
- Advertisement -

புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசியில் இருப்பார். இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக திகழப்படுகிறது. மேலும் முப்பெரும் தேவிகளுக்கு உகந்த நவராத்திரியும் இந்த புரட்டாசி மாதத்தில் தான் வரும். முன்னோர்களின் ஆசியை பெறுவதற்கு புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த புரட்டாசி மாதத்தில் 12 ராசிகளுக்குரிய பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் போராட்டம் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. சமுதாயத்தில் இருக்கக்கூடிய எதிரிகளை தோற்கடித்து அதன் மூலம் செல்வாக்கு உயரும். சிக்கலான பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகளில் இருந்து புத்திசாலித்தனமாக செயலாற்றி விடுபடுவீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செயல்களிலும் போராடி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் வெற்றியடையும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி அடையும். இதுவரை வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வேலையைப் பொறுத்தவரை முன்னேற்றம் மிகுந்த மாதமாக தான் இந்த மாதம் திகழப்போகிறது. வண்டி வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த மாதத்தில் விரும்பிய காரியம் நிறைவேற திருச்செந்தூர் முருகனை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் கடினமான சூழ்நிலையையும் சமாளித்து வெற்றியடையும் மாதமாக திகழப் போகிறது. பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். தம்பதிகளுக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வரன் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சேமிப்பு உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாய்ப்புகள் கூடிவரும். பணவரவிற்கு எந்த குறையும் இருக்காது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

- Advertisement -

வேலைக்கு செல்பவர்களுக்கு இறுக்கமான சூழ்நிலையை தென்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். பணி சுமை அதிகரிப்பதால் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்ப்பது நன்மை பயக்கும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கவனம் தேவை. இந்த மாதம் திருவண்ணாமலை சென்று வழிபட்டால் புகழ் அதிகரிக்கும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் முயற்சிகள் சாதகமாக அமையக்கூடிய மாதமாக திகழப்போகிறது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வதால் பல நல்ல பலன்களை அடைவீர்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன் பிறரின் ஆலோசனையை கேட்டு முடிவு எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்கலாம். பணத்தை முறையாக செலவு செய்தால் வீண் விரயத்தை தவிர்க்க முடியும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் லாபம் கிடைக்க பெறும். நீண்ட காலமாக இருந்து வந்த வழக்குகள் முடிவுக்கு வரும். தெய்வ பணியில் அதிக ஈடுபாடு இருக்கும் என்பதால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள். மூத்தவர்களின் சொல்லை கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தம்பதிகளுக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். காரிய அனுகூலம் உண்டாகும். அதிகாரிகள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அதனால் சக ஊழியர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். வியாபார வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் எதிர்பார்த்த லாபத்தை விட அதிகமான லாபம் கிடைத்து மகிழ்வீர்கள். இந்த மாதத்தில் வரக்கூடிய துன்பங்களை அகற்றுவதற்கு திருமோகூர் காலமேகப் பெருமாளை வழிபட வேண்டும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மாதமாக திகழப்போகிறது. முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை பயக்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி உங்களைத் தேடி வரும்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். அவசரமாக எந்த வேலையும் செய்வதை தவிர்க்க வேண்டும். உடன் பணிபுரிபவர்களிடம் கனிவாக பேசினால் பல காரியங்களில் வெற்றிகள் பெறலாம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. துரோகிகளை கண்டறிந்து விலகுவீர்கள்.

வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் பணி சுமை குறையும். உடன் பணிபுரிபவர்களிடம் எந்த வேலையும் ஒப்படைக்க வேண்டாம். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து அஷ்டமி அன்று பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. உடன் இருப்பவர்களின் மனதை புரிந்து கொண்டு கனிவாக பேசுவது நன்மை பயக்கும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்களாக வர இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய முயற்சிகள் வெற்றி அடைய தாமதமாகும். மன உறுதியுடன் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ஆராய்ந்து துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்னோனியம் அதிகரிக்கும். இதுவரை பிரிந்திருந்த கணவன் மனைவிகள் ஒன்று சேருவர். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்க கூடிய மாதமாக திகழும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் லாபம் கூடுதலாக கிடைக்கும் என்றாலும் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வந்தால் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியடையும் மாதமாக திகழப்போகிறது. பண வரவு அதிகரிக்கும் என்றாலும் வீண் செலவுகள் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எந்த செயலை செய்வதாக இருந்தாலும் நிதானமாக செயல்பட்டால் இந்த மாதம் இனிமையான மாதமாக திகழும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது அவசியம். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். தடைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு அதை முறியடித்து விடுவீர்கள். மூன்றாம் நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பொறுமையாக இருப்பதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே இருக்கக்கூடிய குழப்பங்கள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதனால் வியாபாரத்தை விரிவாக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் அடைவீர்கள். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் செலவுகள் அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. பிறரை அதிகமாக நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். நெருங்கிய உறவாக இருந்தாலும் பண விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலையில் ஆர்வத்தை அதிகரிப்பதன் மூலம் வெற்றிகள் உண்டாகும்.

இக்கட்டான சூழ்நிலையில் மூத்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்கிடையே அன்யோனியம் அதிகரிக்கும். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்க முற்படுவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலுவலகத்தில் திறமையாக செயல்பட்டு பணி சுமையை குறைக்க முற்படுவதால், இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி செல்வாக்கு உயரும். தொழிலில் கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதன் மூலம் இந்த மாதத்தில் வரக்கூடிய சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

விருச்சகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் பண வரவு அதிகரிக்கும் மாதமாக திகழப்போகிறது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாக்கும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடன் இருப்பவர்களுடன் சிறு சிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை பயக்கும்.

நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். பணி சுமை அதிகமாக இருந்தாலும் உங்கள் திறமையால் நல்ல பெயர்களை பெற்றிட முடியும். அதனால் அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பதவி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படும். நினைத்தபடி வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் நடத்தி செல்வீர்கள்.

எதிர்பார்த்தபடி லாபம் படிப்படியாக உயரும். இருப்பினும் முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாம். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்வதன் மூலம் எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் மாதமாக திகழப் போகிறது. பொறுமையாக செயல்பட்டு பொருளாதாரத்தை உயர்த்துவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி பெறுவீர்கள். உறவுகளால் மனநிம்மதி இழக்க வாய்ப்புள்ளது. கவனம் தேவை.

வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். வெளியூர், வெளிநாடு செல்வதற்குரிய வாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் அலைச்சலும், உடல் சோர்வும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் நல்ல முன்னேற்றம் தென்படும். உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும்.

பொறுமையாக செயல்பட்டால் உடன் இருப்பவர்களின் தீய சொற்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். வேலையில் சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். புதிய வியாபாரத்தை முயற்சிப்பது அல்லது பழைய வியாபாரத்தை விரிவு படுத்துவது போன்ற முயற்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் தொட்டதெல்லாம் வெற்றியடைய பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்படக்கூடிய மாதமாக திகழப் போகிறது. எதிலும் பொறுமையுடன் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பணவரவு கணிசமாக உயரும். பல சிரமங்களைக் கடந்து மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்பினால் வெற்றி நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொண்டால் காரியத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். சிலர் அசையா சொத்துக்களை வாங்க முயற்சி செய்தீர்கள். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சனைகள் வந்தாலும் வந்த இடம் தெரியாமல் சென்று விடும்.

சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வியாபாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காக தேவையற்ற செலவுகளையும் செய்யக்கூடாது. லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய தொழிலில் முதலீடு செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும். இந்த மாதம் யோகம் மிகுந்த மாதமாக திகழ திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபாடு செய்ய வேண்டும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் பணத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதமாக திகழப் போகிறது. பண வரவு திருப்திகரமாக இருந்தாலும், பணத்தை கையாளும் பொழுது கவனத்துடன் கையாள வேண்டும். பணவிரயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கூடுமான அளவு சுபவிரையமாக மாற்றிக் கொள்வது நன்மை பயக்கும். தம்பதிகளுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறைய வாய்ப்பு இருக்கிறது.

உறவினர்களால் நன்மைகள் ஏற்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். சொத்து பிரச்சனையில் பொறுமையை கடைப்பிடித்தால் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தடைப்பட்ட திருமணம் கூடிவரும். அதனால் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வெளியூர் பயணங்களின் போது உடைமைகளில் கவனம் செலுத்த வேண்டும். வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும். கொடுக்கல் வாங்கலில் பல மடங்கு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

எதையும் தெளிவாக பேசினால் பிரச்சினைகள் ஏற்படாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணி சுமை குறைவதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றிற்கு உகந்த காலமாக இந்த காலம் திகழப்போகிறது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

மறைமுக எதிரிகளை கண்டறிந்து அவர்களை வெற்றியும் அடைவீர்கள். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். எதிர்ப்புகள் வந்தாலும் அதையும் தாண்டி சிறப்பாக வியாபாரத்தை நடத்திக் காட்டுவீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு திங்கட்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் உற்சாகம் நிறைந்த மாதமாக திகழப்போகிறது. பிறருக்கு உதவி செய்து செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். பழைய வீட்டை புதுப்பிக்க வாய்ப்புகள் இருக்கிறது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முற்படுவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும்.

எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பொது நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். சகோதர வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வேலையில் பணி சுமையும், அலைச்சலும் அதிகரிக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வுக்கும் வாய்ப்புகள் உண்டு.

தொழிலில் ஏற்பட்ட போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தை பெருக்கி அதனால் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவதால் வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மை தரும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் சனீஸ்வரருக்கு சனிக்கிழமையில் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

- Advertisement -