நாளை புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை. பலவிதமான பண பிரச்சனைகளுக்கும் உடனடியாக ஒரு தீர்வு கிடைக்க பெருமாளுக்கு இந்த 1 பொருளை வைத்து வழிபாடு செய்தாலே போதும்.

perumal3
- Advertisement -

புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு மிகவும் விசேஷமான மாதம் தான். இந்த நாள், அந்த நாள் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் தினம் தோறும் புரட்டாசி மாதம் முழுவதுமே நம்முடைய வீட்டில் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வது நம்முடைய குடும்பத்திற்கும் மிக மிக நல்லது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வாரம்தோறும் வரக்கூடிய சனிக்கிழமை அன்று பெருமாளை நினைத்து வழிபாடு செய்தால் நம் கஷ்டங்கள் அனைத்திற்கும் கூடிய சீக்கிரத்திலேயே விடிவுகாலம் பிறக்கும்.

sani-baghavan

குறிப்பாக சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, பாதச் சனி போன்ற பிரச்சனைகளை கொண்டவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை பெருமாளை மனதார வழிபாடு செய்தால் போதும். சனிபகவானால் வரும் இன்னல்களுக்கு ஒரு விடிவு காலம் சீக்கிரமே பிறந்துவிடும். இதனடிப்படையில் கஷ்டத்தில் உள்ளவர்கள், நாளைய தினம் பெருமாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி மேற்கொள்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நாளைய தினம் அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட வேண்டும். உங்களுடைய பூஜை அறையை இன்று மாலையில் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். நாளை உங்களுடைய பூஜை அறை கமகமன்னு வாசத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக துளசி இலைகளில் நறுமணமும் பச்சை கற்பூரத்தின் நறுமணமும் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. துளசி இலைகளால் பெருமாளுக்கு அலங்காரம் செய்து விடுங்கள். பச்சை கற்பூரத்தை பஞ்ச பாத்திரத்தில் நுனுக்கி போட்டுக் கொள்ள வேண்டும்.

thulasi-theertham

அடுத்தபடியாக பெருமாளுக்கு ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். தீபம் ஏற்றும்போது ‘ஓம் நமோ நாராயணா’ என்று சொல்லி ஏற்றுங்கள். உங்கள் விருப்பம் போல உங்கள் சக்திக்கு ஏற்ற ஏலக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒற்றைப்படையில் இருக்க வேண்டும். 3 ஏலக்காய், 5 ஏலக்காய், 21 ஏலக்காய், 51 ஏலக்காய், 101 ஏலக்காய்கள் என்று உங்கள் சவுகரியத்தை பொருத்து, ஏலக்காய்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஏலக்காய்களை நூலில் கோர்த்து பெருமாளுக்கு மாலை அணிவிக்க வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளின் படத்திற்கு மாலை அணிவித்து விடுங்கள். (மஞ்சள் நிற நூல் அல்லது பச்சை நிற நூலில் கட்டி மாலையாக போடலாம்.)

- Advertisement -

அதன்பின்பு பெருமாளின் முன்பு அமர்ந்து உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை முறையிட்டு மனதார அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, தீபாராதனை காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான். இந்த ஏலக்காய் மாலை பெருமாளின் படத்திலேயே மூன்று நாட்கள் இருக்கட்டும்.

elakkai-maalai

அதன் பின்பு அந்த ஏலக்காய் மாலைகளை எடுத்து, தினமும் அந்த ஏலக்காய்களை நன்றாக பொடி செய்து பாலில் போட்டு வீட்டில் இருப்பவர்கள் குடித்து விடலாம். இப்படி பெருமாளுக்கு நிவேதனமாக வைத்த அந்த ஏலக்காய்களை பாலில் போட்டு குடிக்கும் போது ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை உச்சரித்து உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.

Elakkai

பணப்பிரச்சனை, கடன் சுமை, சுபகாரியத் தடை, குழந்தை இல்லாதவர்கள், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், குடும்பம் செல்வ செழிப்போடு இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், நோய் நொடி இல்லாமல் வாழ மேல் சொன்ன வழிபாட்டு முறையை பின்பற்றலாம்.

money

இந்த வழிபாட்டு முறையை இந்த வாரம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாளை வரக்கூடிய சனிக்கிழமை தினத்தில் செய்யலாம். முடியாதவர்கள் இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் எந்த சனிக்கிழமையில் வேண்டுமென்றாலும், ஏலக்காய்களை பெருமாளுக்கு நிவேதனமாக வைத்தோ, அல்லது மாலையாகப் போட்டு உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். நிச்சயமாக அந்த வேண்டுதல் கூடிய விரைவிலேயே அந்த பெருமாளின் அருளால் நிறைவேறும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -