குழந்தை பேரு மற்றும் திருமணம் விரைவில் நடைபெற வாழைப்பழ தீபம்.

banana lamp
- Advertisement -

நம் ஒவ்வொருவரின் வேண்டுதலுக்கு ஏற்றவாறு அந்த வேண்டுதலை பூர்த்தி செய்வதற்காக பல வழிபாடுகளையும், பரிகாரங்களையும் செய்கிறோம். சில வழிப்பாடும், பரிகாரமும் ஒரே நேரத்தில் இரண்டு விதமான பலன்களை தரக்கூடியதாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த தீபம் திருமண தடையை நீக்கும் அதே சமயம் குழந்தை பாக்கியத்தையும் அருள் புரியும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரை நாம் முழுமனதோடு தஞ்சம் அடைந்து வழிப்பட்டால் அவர் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வார் என்பது நம்மில் பல பேருக்கு அனுபவபூர்வமான உண்மையாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் ஆஞ்சிநேயருக்கு வாழைப்பழத்தை வைத்து தீபம் எப்படி ஏற்றுவது என்றும் அவ்வாறு ஏற்றும் பொழுது கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமை செய்யலாம். இவ்விரண்டு கிழமையும் இயலாதவர்கள் தான் சனிக்கிழமை செய்ய வேண்டும். நல்ல வாழைப்பழமாக இரண்டு வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் சன்னதிக்கு செல்ல வேண்டும். காலையில் அல்லது மாலையில் என்று இரண்டு வேளைகளில் ஒரு நேரத்தில் செய்யலாம். குளிகை நேரம் வரும் சமயமாக இருந்தால் இந்த பரிகாரம் மிகவும் உத்தமமாக இருக்கும்.

வாழைப்பழத்தை படுக்க வசமாக வைத்து அதற்கு மேல் கத்தியை வைத்து பள்ளம் போல் எடுத்து அந்த பள்ளத்தில் நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபமானது ஆஞ்சநேயரை நோக்கி எறிவது போல் ஏற்ற வேண்டும். இதில் மற்றும் ஒரு முறை இருக்கிறது. நேராக இருக்கும் வாழைப்பழத்தை எடுத்து அதன் காம்பு மற்றும் நுனியை நறுக்கிவிட்டு மீதம் இருக்கும் பழத்தை இரண்டாக நறுக்கி அதற்கு நடுவில் இருக்கும் வாழைப்பழத்தை மட்டும் நீக்கிவிட்டு அதில் நெய்யை ஊற்றி பஞ்சுத்திரியை போட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். நெல்லிக்காய் தீபம் ஏற்றுவது போல் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு ஏற்றிவிட்டு ஆஞ்சநேயரிடம் நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை கூறிவிட்டு ஆஞ்சநேயரை 11 முறை சுற்றிவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் ஆண் குழந்தை பிறப்பதற்கு உரிய வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எப்பேர்பட்ட திருமண தடையாக இருந்தாலும் அந்த தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விரைவிலேயே மனதிற்குப் பிடித்த வரன் வந்து அமைய ஆஞ்சநேயர் அருள்புரிவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கெட்ட சக்தியை விரட்ட தூபம் போடும் முறை

வேண்டுதல் நிறைவேறிய பிறகு ஆஞ்சநேயருக்கு தங்களால் இயன்றவர் அளவு அபிஷேகத்திற்காக பொருட்கள், வஸ்திரம் வாங்கி கொடுக்க வேண்டும். பிறகு வடைமாலை, துளசி மாலை என்று ஏதாவது ஒரு மாலை அவருக்கு அணிவித்து தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து வணங்க வேண்டும்.

- Advertisement -