பணக்கஷ்டத்தை தீர்க்கும் 3 பொருள்

mahalshmi10
- Advertisement -

வசதி வாய்ப்பு இருப்பவர்களை பார்க்கும்போது, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, நாமும் இதுபோல வசதியாக வாழ முடியவில்லையே என்ற எண்ணம் நிச்சயம் வரும். இந்த எண்ணம் ரொம்ப ரொம்ப தவறு என்று சொல்லி விட முடியாது. இவர்களை பொறாமை குணம் கொண்டவர்கள் என்றும் சொல்ல முடியாது.

உங்களுக்கும் வசதியாக வாழ ஆசை இருக்குதா, நாமும் வசதி படைத்தவர்களாக மாற வேண்டும் என்று சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். கடினமாக உழைக்கணும். என்னவெல்லாம் செய்தால் நிறைய பணம் நம் வீடு தேடி வரும் என்பதை பற்றி சிந்திக்கணும். பணம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் நேர்வழியில் முயற்சி செய்யுங்கள். தோல்வியை கண்டு பயப்படாதீங்க.

- Advertisement -

நிச்சயம் மகாலட்சுமி உங்களைத் தேடி வருவாள். இது தவிர நாம் பணக்காரராக வேண்டும் என்றால் அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. பர்ஸில் நிறைய பணம் சேர அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய ஒரு மூன்று பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பண வரவை தரும் மூன்று பொருட்கள்

அந்த மூன்று பொருட்கள் என்ன முதலில் பார்த்து விடுவோம். துளசி இலை, ஏலக்காய், சோம்பு. இது மூன்றுமே பணஈர்ப்பை அதிகப்படுத்தக் கூடிய பொருள். மகாலட்சுமி அம்சம் கொண்ட பொருள். இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் செய்தாலும் சரிதான். இருந்தாலும் புதன்கிழமை பெருமாளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்யும் போது இரட்டிப்பு பலன் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

பச்சை நிற சதுர வடிவில் இருக்கும் துணி எடுத்துக்கோங்க. அதன் உள்ளே இரண்டு துளசி இலைகள், இரண்டு ஏலக்காய், அரை ஸ்பூன் சோம்பு வைத்து முடிச்சாக கட்டி பெருமாளின் பாதங்களில் வைத்து விடுங்கள். தேவைக்கு ஏற்ப வருமானம் பெற வேண்டும். பணக்கஷ்டம் வரக்கூடாது. தொழிலில் வெற்றி பெற வேண்டும்.

வேலையில் பிரமோஷன் வேண்டும் என்று உங்களுடைய தேவைக்கு ஏற்ப பிரார்த்தனை வைத்து, பர்ஸில் எப்போதும் பணம் நிரம்பி வழிய வேண்டும் என்ற பிரார்த்தனையையும் வைத்து இந்த முடிச்சை புதன்கிழமை உங்களுடைய பர்ஸில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த புதன்கிழமை வரைக்கும் இந்த முடிச்சு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்த புதன்கிழமை துணிக்கு உள்ளே இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் இதே போல பூஜையறையில் வேண்டுதல் வைத்து இந்த மூன்று பொருட்களை பரிசில் வைத்துக் கொண்டால் நிச்சயம் உங்களுக்கு பணக்கஷ்டம் வராது. பணம் வசியமாகும். மேலும் மேலும் வாழ்க்கையில் செல்வந்தராக மாற இந்த எளிய பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த மார்கழி மாதத்தில் புதன்கிழமை பெருமாளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: சனி பகவானை சரிகட்ட சனிக்கிழமை பரிகாரம்

இதோடு இன்னொரு விஷயத்தையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பர்ஸில் இந்த முடிச்சை வைத்துவிட்டு பத்து ரூபாயாவது எப்போதும் பர்ஸில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். பர்ஸில் இருக்கும் கடைசி ஒற்றை ரூபாய் வரை எடுத்து செலவு செய்யக் கூடாது. பணம் தான் பணத்தை ஈர்த்து கொடுக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -