சனி பகவானை சரிகட்ட சனிக்கிழமை பரிகாரம்

sanibagvan1
- Advertisement -

சனிபகவான் ஒன்றும் அவ்வளவு கொடூரமானவர் அல்ல. நீங்கள் செய்த நல்லது கெட்டத்திற்கு தான் நீதிமானாக நின்று, அவர் உங்களுக்கு தீர்ப்பை கொடுக்கப் போகின்றார், அடுத்து வரக்கூடிய ஏழரை ஆண்டுகளுக்கு. ஆகவே நீங்கள் எந்த ராசிக்காரர்கள் ஆக இருந்தாலும் சரி, எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் சரி, நேர்மையாக நடந்து கொண்டால், சனி பகவானை மனதார உங்கள் ராசிக்கு வரவேற்கலாம்.

இதனால் எந்த பாதிப்பும் வராது. முதல் விஷயம். சனிபகவானால் வாழ்க்கையில் உங்களுக்கு கஷ்டம் இருந்தால், சனி பகவானை திட்டாதீங்க. உங்கள் கஷ்டத்திற்கு பின்னால் பெரிய ரகசியம் மறைந்திருக்கும். அது என்ன என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும். சரி, இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு சரியில்லையா. நீங்க வாரம் தோறும் சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யுங்கள் போதும். சனிபகவான் உங்களை பெருசா சோதிக்க மாட்டார்.

- Advertisement -

சனிக்கிழமை செய்ய வேண்டிய சனி பகவான் பரிகாரம்

நீங்கள் எந்த ராசி, எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சனிக்கிழமையும் இதை செய்யுங்க. இந்த பரிகாரத்திற்கு கருப்பு எள்ளு நமக்குத் தேவை. வீட்டில் நீங்க கிழக்கு பார்த்தவாறு நின்று கொள்ளவும். வலது கையில், 1 கைப்பிடி கருப்பு எள்ளை எடுத்து, அப்படியே உச்சந்தலை மேல் வைக்கவும்.

கையை மூடியபடி, உச்சந்தலையில் வைத்து ‘சனி பகவானே என்னை ரொம்பவும் சோதிக்க வேண்டாம். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்’. ரொம்பவும் எனக்கு தாங்க முடியாத கஷ்டத்தை கொடுத்திடாதீங்க, என்றவாறு வேண்டிக்கொண்டு கையில் இருக்கும் கருப்பு எள்ளை ஒரு பேப்பரில் வைத்து மடித்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை கொண்டு போய் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் போட்டு வரவும். மனிதர்கள் தாண்டாத இடம் செடி கொடிகளுக்கு அடியில், இந்த கருப்பு எள்ளை தூவி விடுங்கள். அங்கு இருக்கும் பூச்சு பொட்டுகள், ஈ, எறும்புகள் இந்த கருப்பு எள்ளை சாப்பிட்டுக் கொள்ளும். பரிகாரம் அவ்வளவுதான். இதை ஏழரை சன்னியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக எளிய பரிகாரம்

யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட ராசிகள் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பான பலனைத் தரும். சனிக்கிழமை உங்களுக்கு உகந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். நல்லது நடக்கும் என்ற கருத்துடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -