பிள்ளையாரை இப்படி வழிபட்டால் நம் வீட்டு குழந்தைகளின் மந்த புத்தியை அவர் நீக்கி, தெளிவான ஞானத்தை அருள்வார்.

ganapathy child praying
- Advertisement -

பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும், படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அதற்காக அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து சிறப்பான விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து செய்வார்கள். அப்படி இருந்தும் சில குழந்தைகளுக்கு மந்த புத்தி ஏற்பட்டு, எந்த காரியத்திலும் விருப்பமின்றி, சோம்பேறித்தனத்துடன் இருப்பார்கள். அப்படி இருக்கும் குழந்தைகள் நன்றாக படிப்பதற்கும், அனைத்து விஷயங்களிலும் சிறந்து விளங்குவதற்கும் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குழந்தைத்தனம் மாறாத தெய்வம் என்றால் அது விநாயகப் பெருமான் தான். மேலும் பல குழந்தைகளின் விருப்பக் கடவுளாகவும் அவர் திகழ்கிறார். வடமாநிலங்களில் அவருக்கு சித்தி புத்தி என்ற இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அவர்களை மக்கள் வழிபாடும் செய்கிறார்கள். சித்தியை வணங்கினால் காரிய சித்தி ஏற்படும் என்றும், புத்தியை வழங்கினால் நம்முடைய புத்தி கூர்மை அடையும் என்றும் கூறப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் நாம் சித்தி புத்தி விநாயகர் என்று விநாயகரை வழிபடுவது உண்டு. இப்படி சித்திக்கும் புத்திக்கும் அதிபதியாக விளங்கக்கூடிய விநாயகரை வழிபட்டு குழந்தைகள் அவர்களுடைய புத்தியை மேம்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் தாராளமாக குழந்தைகளை வைத்து இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ளலாம். காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது 27 ஒத்தை செம்பருத்தி பூவை பறித்து மாலையாக தொடுத்து எடுத்துச் செல்ல வேண்டும். இந்த மாலையை குழந்தைகள் தங்கள் கைகளால் விநாயகருக்கு வழங்க வேண்டும்.

பிறகு அவரை ஒன்பது முறை வலம் வந்து தோப்புக்கரணம் போட்டு வணங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒன்பதாவது வாரம் இயன்றவர்கள் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்யலாம். பிறகு குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும். அவருக்கு பிடித்த நெய்வேத்திய பொருட்களான சர்க்கரைப் பொங்கல், லட்டு, சுண்டல், பாயாசம் அல்லது கொழுக்கட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை செய்து நம் குழந்தைகளின் கையினாலேயே பிறருக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அன்றைய தினம் அசைவம் உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவ்வாறு நாம் வழிபாட்டை மேற்கொள்வதால் விநாயகப் பெருமான் தன் மனம் மகிழ்ந்து குழந்தைகளுக்கு சிறப்பான அறிவாற்றலையும் தீர்க்க ஆயுளையும் வழங்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக வந்து வீட்டில் நிம்மதியே இல்லையா? அப்படியானால் குலதெய்வ கோவிலுக்கு இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கிக் கொடுத்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும்.

குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி பணங்களை மட்டும் சேர்த்து வைக்காமல், நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து ஆலய வழிபாட்டையும் செய்ய வைப்பதன் மூலம், அவர்களுடைய மனதில் நல்ல மாற்றத்தை கடவுள் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறோம்.

- Advertisement -