புத்தி கூர்மை பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி, அதிக மதிப்பெண்கள் பெற சரஸ்வதி தேவியை இந்த முறையில் வழிபட்டாலே போதும். சகல கலைகளையும் கற்று தேர்ச்சி பெறும் அறிவை அருள்வாள் கலைவாணி.

saraswathi studying
- Advertisement -

அடுத்த தலைமுறையினராக விளங்கக்கூடிய குழந்தைகளுக்கு நாம் பணத்தையும், சொத்தையும் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவர்களுக்கு கல்வி என்னும் மிகப்பெரிய செல்வத்தை கொடுத்து விட்டோம் என்றால் அவர்களே அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெறுவதற்கு உரிய அறிவையும் ஆற்றலையும் பெறுவார்கள். கல்வியில் சிறந்து விளங்குபவரை தான் இந்த உலகம் மதிக்கிறது. அப்படிப்பட்ட கல்வியில் சிறந்து விளங்குவதற்கு புத்தி கூர்மை வேண்டும். அந்த புத்தி கூர்மையை பெற சரஸ்வதி தேவியை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”.
என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஒருவன் கற்கக்கூடிய கல்வியே அவனுக்கு அழிவில்லாத செல்வமாக கருதப்படுகிறது. மற்ற செல்வங்கள் எல்லாம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் அழிந்து விடக்கூடியது என்பதே இதன் பொருளாகும். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த கல்வியை கற்பதற்கு புத்தி கூர்மை என்பது வேண்டும். அந்த புத்தி கூர்மையை அருளக்கூடியவராக திகழ்பவர் தான் சரஸ்வதி தேவி.

- Advertisement -

சரஸ்வதிக்கு உரியக்கிழமையாக கருதப்படுவது புதன் கிழமை ஆகும். அந்த புதன்கிழமை அன்று புதன்கோரையில் சரஸ்வதி தேவியை நாம் முறையாக வழிபட்டோம் என்றால் சரஸ்வதி தேவி நமக்கு புத்தி கூர்மையை அருள்வார். வீட்டில் இருக்கும் சரஸ்வதி படத்திற்கு முன்பாக அகலில் சுத்தமான நெய்யை ஊற்றி தாமரை தண்டு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

முடிந்த அளவு சரஸ்வதி தேவிக்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பூக்களை அணிவிக்கலாம். வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்கலாம். அதிலும் குறிப்பாக பால் சாதம் மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது. தீபம் ஏற்றி வைத்த பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு சரஸ்வதி தேவியின் மூல மந்திரங்களை கூற வேண்டும். மூல மந்திரம் தெரியாதவர்கள் “ஓம் சரஸ்வதி தேவியே போற்றி” என்றும் கூறலாம்.

- Advertisement -

எதை சொன்னாலும் அதை முழு மனதோடும் நம்பிக்கையுடனும் மூன்று முறை தீபத்தை பார்த்து கூறுவதன் மூலம் சரஸ்வதி தேவியின் அருள் நமக்கு கிடைக்கும். நவக்கிரகங்களில் புத்திகாரங்களாக திகழக் கூடியவர் புதன் பகவான். புதன்கிழமை அன்று சரஸ்வதி தேவியை வழிபடுவதால் புதன் பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழிபாட்டை நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்கு சிறந்த அறிவு கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, அனைத்து கலைகளையும் கற்கக்கூடிய ஞானத்தை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: இன்று மாலை பெருமாளுக்கு இந்த ஒரு நிவேதனம் வைத்து வழிபாடு செய்தால், கடுமையான பண கஷ்டத்திற்கு இன்னைக்கே குட்பை சொல்லிவிடலாம்.

இவ்வாறு வழிபடுவதால் நமக்கு நல்ல அறிவு கிடைக்கும். அறிவு கிடைத்தால் இந்த உலகில் எதை வேண்டுமானாலும் நம்மால் வெல்ல முடியும் என்பதை மனதில் கொண்டு சரஸ்வதி தேவியை முறையாக வழிபட்டு தெளிவான ஞானத்தை பெறுவோம்.

- Advertisement -