இந்த வருடத்தில் நீங்கள் பட்ட துன்பம் எல்லாம் நீங்கி, புது வருடத்தில் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ, இன்று இரவு 12 மணிக்கு இந்த தீபத்தை மட்டும் மறக்காமல் ஏற்றி விடுங்கள். புது வருடம் உங்களுக்கு நிச்சயம் யோகத்தை தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் புது வருடம் பிறக்கும் நாளன்று இரவு வீட்டில் தீபம் ஏற்றி கடவுளை வணங்குவோம். இந்த வருடத்தில் நாம் பட்ட துன்பங்கள் எல்லாம் நீங்கி, வரும் வருடத்தில் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என வேண்டி தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் நீங்கள் ஏற்றும் தீபத்தை இந்த முறையில் ஏற்றினால், கட்டாயம் இந்த வருடம் நீங்கள் அனுபவித்த துன்பம் நீங்கி,  புது வருடம் நல்லதாக அமையும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் அதை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

தீபம் என்பதே இருளை நீக்கி ஒளியை தருவது தான். இந்த தீபத்தை ஏற்றுவதே நம் மனதில் இருக்கும் இருள், மட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் கவலை என்னும் இருளையும் நீக்கி, இந்த தீபத்தின் ஒளியைப் போல நம் வாழ்வும் பிரகாசமாக சுடர் விட இறைவனிடம் வேண்டி வணங்க தான். இப்போது நம் துன்பம் நீங்க இந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று பார்ப்போம்.

- Advertisement -

துன்பம் நீங்க ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை ஏற்ற நமக்கு தேவையானது ஒரு அகல் விளக்கு, இதற்கு நாம் எப்போதும் பயன்படுத்தும் ஒரு திரி போட்டு ஏற்றும் சிறிய அகலை பயன்படுத்த முடியாது. இந்த விளக்கில் எட்டு திரி தனி தனியாக போட்டு ஏற்ற வேண்டும். அதற்கு ஏற்றார் போல் பெரிய அகல் விளக்கை வாங்கிக் கொள்ளுங்கள். இதற்கு புது அகல் தான் பயன்படுத்த வேண்டும். அத்துடன் எட்டு பஞ்சு திரி, சுத்தமான பசு நெய் (பசு நெய் கிடைக்காதவர்கள் நல்லெண்ணெயை பயன்படுத்தி கொள்ளலாம்) அத்துடன் வாசனை மிக்க மலர்கள். இவைகள் தான் இன்றைய தீபம் ஏற்ற நமக்கு தேவையான பொருட்கள். இதை எல்லாம் நீங்கள் முன்னமே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு 12 மணி முன்பாகவே இந்த விளக்கை சுத்தமாக துடைத்து மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து இதில் நெய் ஊற்றி 8 திரி போட்டு விளக்கின் மீது பூ வைத்து பூஜை அறையில் தயாராக வைத்து விடுங்கள்.

- Advertisement -

இரவு சரியாக 12 மணி ஆனவுடன் இந்த விளக்கை ஏற்றி விளக்கின் முன் சிறிது நேரம் அமர்ந்து இந்த வருடத்தில் நீங்கள் அனுபவித்த துன்பங்கள் எல்லாம் நீங்கி வரும் வருடத்தில் நல்லபடியாகவும், செல்வ செழிப்புடனும், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை வேண்டி கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வாருங்கள். இந்த வருட பிறப்பு சனிக்கிழமை இரவு வருகிறது என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பூஜை செய்யும் பொழுது கவனிக்க மறக்க கூடாத 5 விஷயங்கள் என்னென்ன தெரியுமா? தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்கள்!

இந்த புத்தாண்டில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து, செல்வ செழிப்புடன், மகிழ்ச்சி பொங்க வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கி கொள்வோம்.

- Advertisement -