குளிக்கும் தண்ணீரில் இந்த 1 பொருளை போட்டு குளித்தால் போதும். வெளியில் சொல்ல முடியாத பெரிய பெரிய கஷ்டம் கூட உடனே சரியாகும்.

bathing
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே வெளியில் சொல்ல முடியாத கஷ்டம் ஒன்று மனதுக்குள் இருக்கும். அந்த கஷ்டத்தை நிச்சயமாக நம்முடன் இருக்கும் மனிதர்களிடம் சொல்ல முடியாது. அந்தக் கஷ்டத்தை தெய்வத்திடம் முறையிடு வதைத் தவிர வேறு வழியே கிடையாது. தெய்வத்திடம் முறையிட்டும், சில கஷ்டத்திற்கு தீர்வு கிடைக்காமல் இருக்கும். காரணம் நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், நமக்கு நடந்து கொண்டிருக்கும் கெட்ட நேரமும், நம்முடைய வேண்டுதலை இறைவனிடம் கொண்டு சென்று விடாமல் தடுக்கும். ஆக முதலில் கஷ்டம் தீர வேண்டுமென்றால் நமக்கு இருக்கும் தோஷங்கள் விலக வேண்டும். கெட்டகாலம் விலக வேண்டும். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன.

நம்முடைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புற்று பரிகாரத்தை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். புற்று கோவில் இருக்கும் இடத்தை நீங்கள் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். அந்த புற்று கோவிலில் இருந்து கொஞ்சம் மண்ணை முந்தைய நாளே உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுநாள் அதிகாலை எழுந்தது குளிக்கும் தண்ணீரில் இந்தப் புற்று மண்ணைக் கலந்து, நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து தலைக்கு குளித்து விட வேண்டும். இந்த புற்று மண்ணை தலைக்கு ஊற்றும் போது சோப்பு ஷாம்பூ சிகைக்காய் எதுவும் போட்டுக் குளிக்கக் கூடாது. வெறும் புற்று மண் கலந்த தண்ணீரில் தலை ஸ்னானம் செய்து விட்டு வந்து விட வேண்டும். (திங்கட்கிழமை புற்று மண்ணை எடுத்து வந்து செவ்வாய்க்கிழமை அன்று தலை ஸ்னானம் செய்வது மிக மிக சிறப்பு.)

இப்படி குளிக்கும் போது, உங்களை பிடித்த தோஷங்கள் அத்தனைத்தையும் தலை மூழ்கி விட்டதாக மனதார நினைத்து கொள்ளுங்கள். தலைக்கு குளித்தல் பின்பு பூஜை அறைக்கு சென்று குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, தீபம் ஏற்றி, தீராத கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும். உங்களுடைய பிரச்சனையை பொறுத்து எத்தனை நாட்களில் தீர்வு கிடைக்கும் என்பதை அந்த ஆண்டவன் தான் நிர்ணயிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி எத்தனை நாட்கள் புற்று மண்ணை போட்டு தலை ஸ்னானம் செய்வது. மூன்று வாரம் செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். வாழ்க்கையில் எங்களுக்கு மீள முடியாத துயரம். வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல முடியாத சூழ்நிலை எனும் பட்சத்தில் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த பரிகாரத்தை, 11 நாட்கள் செய்து வரும் பட்சத்தில் நிச்சயமாக நல்லதொரு தீர்வை அந்த ஆண்டவன் உங்களுக்கு காண்பித்து கொடுப்பான். வாழ்வில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இனி வரக்கூடிய காலங்களில் கண்ணுக்குத்தெரியாத தோஷத்தால் எதிர்மறை ஆற்றலினால் எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவர்களும் கூட இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

மிகவும் குறைவான அளவு ஒரு ஸ்பூன் அளவு புற்றுமண் கிடைத்தால் கூட போதுமானது தான். வேறு யாரையாவது அந்த மண்ணை எடுத்து வரச் சொல்லியும் நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றில் இருந்து மண்ணை எடுக்கும்போது எப்போதுமே அடி பக்கத்தில் இருந்து கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். மேல் பக்கத்தில் இருந்து மண்ணெடுத்து பூட்டை உடைக்கு கூடாது. நம்பிக்கையோடு இந்த சுலபமான பரிகாரத்தை செய்து அனைத்து தோஷங்களில் இருந்தும் வெளிவந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -