12 ராசிகளுக்கும் பெருமாளின் 1 வரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் வறுமை, தரித்திரம், கடன், நீங்கி வற்றாத செல்வ வளத்தோடு வாழ்வாங்கு வாழ்வீங்க.

perumal-astro
- Advertisement -

எவ்வளவு தான் ஓடிஓடி உழைத்தாலும் கடைசியில் கையில் பணம் மிஞ்சுவது கிடையாது. கடனும் வறுமையும் மட்டும்தான் நிற்கிறது. என்னை பிடித்த தரித்திரம் எப்போதுதான், என்னை விட்டு விலகும். இதற்கு என்னதான் தீர்வு, என்று புலம்பிக்கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு சின்ன ஆன்மீக ரீதியான பரிகாரம். அதுவும் அவரவருடைய ராசிக்கு ஏற்ப இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய ராசிப்படி நீங்கள் தினமும் பெருமாளின் எந்த நாமத்தை உச்சரித்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் தீரும் என்பதை பற்றியும், பெருமாள் கோவில் வழிபாட்டில் நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய ஒரு சந்தேகத்திற்கான பதிலையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெரும்பாலான பெருமாள் பக்தர்களுக்கு இந்த ஒரு சந்தேகம் இருக்கிறது. பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு கோவிலில் அமர கூடாது என்று சொல்கிறார்களே? அது உண்மையா? இப்படி சொல்வதற்கு என்ன காரணம். பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து, பின்பு தாயாரையும் தரிசனம் செய்துவிட்டு, மகாலட்சுமி தேவியிடம் வரங்களைக் கேட்டு விட்டு வீடு திரும்பும் போது, அந்த மகாலட்சுமி தாயார் நம்முடனே வந்து விடுவார்களாம்.

- Advertisement -

நம்முடன் நம் வீட்டிற்கு வரக்கூடிய மகா லட்சுமி தாயாரை நாம் எந்த விதத்திலும் தாமதப்படுத்தக் கூடாது என்பதற்காக பெருமாள் கோவிலில் அமரக்கூடாது என்று சில பேர் சொல்வது வழக்கம். ஆனால் கோவிலுக்கு நாம் செல்வதே மன அமைதியை தேடித்தான். அப்படி இருக்கும்போது இறைவனை சேவித்து விட்டு அவசர அவசரமாக சன்னிதானத்தில் ஒரு நிமிடம் கூட அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக் கொள்ளாமல் வீடு திரும்புவது என்றால் அது சரியாக இருக்காது.

ஸ்ரீதேவி நினைத்தால் நமக்கு எந்த வழியில் வேண்டுமென்றாலும் செல்வ வளத்தை கொடுக்க முடியும். நீங்கள் பெருமாள் கோவிலில் அமர்ந்து, உங்களுடைய மனதை அமைதிப்படுத்தி கொள்வதால் நிச்சயமாக உங்களுடன் மகாலட்சுமி தாயார் வரமாட்டேன் என்று சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது. ஆக இனி எந்த சஞ்சலமும் இல்லாமல் பெருமாள் கோவிலுக்கு நீங்கள் சென்றால், பெருமாள் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து பொறுமையோடு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இனி மனசஞ்சலம் இல்லாமல், பெருமாள் தாயாரின் வழிபாட்டை மனநிறைவோடு செய்யுங்கள்.

- Advertisement -

சரி, உங்களுடைய ராசிப்படி உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறைய நீங்கள் உச்சரிக்க வேண்டிய பெருமாளின் நாமம் எது?

மேஷம்: ஓம் கேசவாய நம
ரிஷபம்: ஓம் நாராயணாய நம
மிதுனம்: ஓம் மாதவாய நம
கடகம்: ஓம் கோவிந்தாய நம

- Advertisement -

சிம்மம்: ஓம் விஷ்ணுவே நம
கன்னி: ஓம் மதுசூதனா நம
துலாம்: ஓம் த்ரிவிக்ரமாய நம
விருச்சிகம்: ஓம் வாமனாய நம

தனுசு: ஓம் ஸ்ரீதராய நம
மகரம்: ஓம் ஹ்ருஷிகேசாய நம
கும்பம்: ஓம் பத்மநாபா நம
மீனம்: ஓம் தாமோதராய நம

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பெருமாளை மனதார நினைத்து பூஜை அறையில் உங்களுடைய ராசிக்கு உண்டான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எண்ணிக்கை கணக்கு கிடையாது. அது அவரவர் விருப்பம் தான். நிச்சயமாக உங்களுடைய பணப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை அந்த எம்பெருமான் கூடிய விரைவில் காட்டிக் கொடுப்பான் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -