ராகு கேது பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூட்சம பரிகாரம்

sivan raghu kethu
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் 12 ராசிகளுக்கும் பலவிதமான பலன்களை கொடுக்கும். அந்த வகையில் இன்றைய தினம் 31.10.23 அன்று மாலை ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள்ளும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பிரவேசிக்கிறார்கள். ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள்.

கிரகங்களிலே ராகுவும் கேதுவும் இன்னல்கள் தரக் கூடிய கிரகங்களாக இருக்கிறார்கள். இந்த ராகு கேதுவின் பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்புகளின் தாக்கத்தை குறைக்க இந்த ஒரு எளிய சூட்சம பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது குறித்தான ஒரு தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ராகு கேது பெயர்ச்சியின் பாதிப்பிலிருந்து விலக

இந்த பாதிப்பில் இருந்து விலக சில தெய்வங்களை இறுகப்பற்றிக் கொண்டால் பல இன்னல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அந்த வகையில் சிவபெருமானை திங்கள் தோறும் வழிபடுவது உகந்தது. விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வரும் போதும் இவருடைய தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.

அது மட்டும் இன்றி அனுமனை தொடர்ந்து வணங்கி வரும் போதும் இவர்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவற்றுடன் சேர்த்து இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்வதன் மூலம் ராகு கேது பயிற்சியினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

- Advertisement -

இன்றைய நாள் முடிவதற்குள் இந்த ஒரு எளிய சூட்சம பரிகாரத்தை செய்து விடுங்கள். இந்த வழிபாடு செய்ய சுத்தமான மஞ்சளை வாங்கி அரைத்துக் கொள்ளுங்கள். அது கிடைக்காத பட்சத்தில் தரமான மஞ்சள் தூளாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இதை வீட்டின் அருகில் இருக்கும் ஆலயத்தில் உள்ள நவகிரகத்தில் ராகு கேதுவுக்கு இந்த மஞ்சளை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

வீட்டின் அருகில் நவகிரகங்கள் இல்லை, இந்த பரிகாரத்தை கோவிலில் செய்ய முடியாது என்பவர்கள் வீட்டில் பூஜை அறையில் இதை செய்யலாம். அதற்கு ஒரு சிறிய தட்டில் மஞ்சள் பரப்பி வைத்துக் கொண்டு தீபம் ஏற்றி அந்த மஞ்சளை கையில் வைத்து கொண்டு சிவபெருமானை மனதார நினைத்து இந்த ராகு கேதுவின் பெயர்ச்சியினால் ஏற்படும் தாக்கம் எங்களை ஒன்றும் செய்யதிருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஜாதக தோஷங்களை சுக்கு நூறாக உடைக்கும் சஷ்டி வழிபாடு.

இந்த இரண்டு கிரகங்களினால் ஏற்படும் இன்னல்கள் சொல்லி மாளாதவையாக இருக்கும். அவற்றிலிருந்து தப்பிக்க இந்த தெய்வங்களை பணிவதுடன், எளிமையான இந்தபரிகாரத்தையும் செய்து கொள்ளலாம். நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -