ஜாதக தோஷங்களை சுக்கு நூறாக உடைக்கும் சஷ்டி வழிபாடு.

murugan5
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஜாதக ரீதியாக ஏகப்பட்ட பிரச்சனைகள். ராகு கேது தோஷம், ஏழரை சனி, செவ்வாய் தோஷம், ராகு திசை, கேது திசை, குரு திசை இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் நம்மை தொடரத்தான் செய்யும். இது உலகத்தில் எல்லோருக்கும் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான்.

ஆனால், இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்க நமக்கு ஒரு வழிபாடு ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இனிமேல் ஜாதகத்தையே பார்க்க வேண்டாம். இந்த வழிபாட்டை ஆறு சஷ்டி திதியில் செய்து விட்டால் உங்களுக்கு நல்ல காலம் மட்டும்தான். கெட்டதே நடக்காது என்று அடித்து சொல்லலாம். அப்பேற்பட்ட முருக வழிபாட்டை தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து பயனடையுங்கள்.

- Advertisement -

ஜாதக தோஷம் நீங்க முருகர் வழிபாடு

இதற்கு நீங்கள் ஆறு சஷ்டி திதியில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சஷ்டி திதி சமயத்தில், கோவிலில் இருக்கும் வேலுக்கு அபிஷேகம் நடக்கும். அந்த அபிஷேகத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். அபிஷேக சமயத்தில் வேலுக்கு முன்பாக அமர்ந்து வேல்மாறல் பதிகம் படிக்க வேண்டும்.

வேல்மாறல் பதிகத்தை அவ்வளவு எளிதாக எல்லோராலும் படித்து விட முடியாது. அந்த முருகனின் அருள் இருந்தால் மட்டும்தான் இதைப் பற்றிய தகவல்கள் உங்கள் செவிகளில் கிட்டும் என்று சொல்லுவார்கள். அந்த முருகனே வந்து இந்த வழிபாட்டை உங்களுக்கு சொல்வதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வேல் மாறல் பதிகத்தை திருப்பரங்குன்றத்திற்கு சென்று ஆறு சஷ்டி திதியில் நீங்கள் படித்துவிட்டால் போதும். உங்களை பிடித்த பீடையெல்லாம் ஒழியும். எந்த கிரகங்களும் உங்களை எதுவும் செய்யாது. அந்த முருகப்பெருமானின் ஆசிர்வாதம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். பிறகு வாழ்க்கையில் நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி அடைய தொடங்கி விடுவீர்கள்.

எங்களால் ஆறு வாரம் திருப்பரங்குன்றம் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாது என்பவர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து 48 நாட்கள் இந்த பாடலை படிக்கலாம். பூஜை அறையில் முருகப்பெருமானின் முன்பு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வழிபாடு செய்தால் சிறப்பு. சிறிய அளவில் வேல் வாங்கி வந்து வைத்து அந்த வேலின் முன்பு வீட்டிலேயே இந்த பதிகத்தை படித்தால் இன்னும் சிறப்பான பலனை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: தங்க நகைகளை அதிகமாக சேர்க்க ஆசைப்படும் பெண்கள் இதை செய்தால் போதும்.

மனிதர்களை கண்டு அஞ்ச வேண்டிய அவசியமும் இருக்காது. எதிரிகளைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமும் இருக்காது. கிரகங்களை கண்டு அஞ்ச வேண்டிய பயமும் இருக்கிறது. எளிமையான ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -