ராகுவின் தாக்கம் குறைந்து நற்பலன் பெற ராகு தோஷம் பரிகாரம்

rahu dosham pariharam in tamil
- Advertisement -

ஜாதகத்தில் இருக்கின்ற தோஷங்களில் மிகவும் துன்பங்களை தரக்கூடிய தோஷமாக இருப்பது ராகு தோஷம். ராகு தோஷம் என்பது ஒரு மனிதரின் வாழ்க்கையில் வேலைவாய்ப்பு, திருமணம், பிள்ளை பேறு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் நமது ஜாதகத்தில் இருக்கின்ற ராகு தோஷம் நீங்கி வேண்டிய பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய ராகு தோஷம் பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு தோஷம் பரிகாரம்

ஜாதகத்தில் ராகு தோஷம் ஏற்பட்டு, அதனால் வாழ்வில் பல இன்னல்களை அனுபவிப்பவர்கள், தினமும் இரவு தூங்கும் பொழுது ஒரு கைப்பிடி அளவிற்கு அருகம்புல்லை எடுத்தும், உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். தெய்வீக ஆற்றலை தன்னகத்துள்ளே கொண்டுள்ள அருகம்புல் ராகு தோஷம் கொண்டவர்களின் தோஷங்களை ஈர்த்துக் கொள்ளக் கூடியதாக திகழ்கிறது. 9 வாரங்களுக்கு இந்த அருகம்புல் பரிகாரத்தை செய்த பிறகு ஒட்டுமொத்த அருகம்புல் கட்டையும் கொண்டு போய் கடலில் வீசி விட வேண்டும்.

- Advertisement -

நவகிரகங்களில் முழு சுப கிரகம் எனப்படும் குரு பகவான் மட்டுமே ராகு கிரகத்தின் கெடுதியான பலன்களை குறைக்க வல்லவராக கூறப்படுகிறார். வியாழன் தோறும் நவகிரக சந்நிதி தினத்தன்று குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவதாலும் ஜாதகத்தில் ராகு தோஷம் காரணமாக வாழ்வில் கெடு பலன்கள் அதிகம் ஏற்படாமல் தடுக்கும்.

ராகு பகவான் நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின் அம்சம் கொண்டவராவார். எனவே செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபங்கள் ஏற்றி, துர்க்கை அஷ்டகம் துதித்து வழிபாடு செய்ய வேண்டும். பாம்பு புற்றுள்ள கோயில்களுக்கு இந்த நாளில் சென்று, புற்றில் குங்குமம், மலர்கள் தூவி, தூபங்கள் காட்டி மூன்று முறை வலம் வந்து வழிபாடு செய்வதாலும் ராகு கிரக தோஷத்தின் பாதிப்புகள் குறையும்.

- Advertisement -

மஞ்சள் மற்றும் நீல நிறம் ராகு பகவானுக்கு மிகவும் பிரியமான நிறங்கள் ஆகும். ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ராகு தோஷ காலம் முடிகின்ற வரையிலும் அல்லது வாழ்நாள் முழுவதும் கருப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்த்து மஞ்சள் மற்றும் வெள்ளை நிறை ஆடைகளை அதிகம் அணிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் தினமும் காலையில் குளிக்கின்ற பொழுது, பக்கெட் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத தூய பசும்பாலை விட்டு, நன்கு கலந்து அந்த நீரைக் கொண்டு குளிக்க வேண்டும். இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து குளித்து வருவதால் ஜாதகத்தில் இருக்கின்ற ராகு தோஷம் காரணமாக வாழ்வில் அசுப பலன்கள் அதிகம் ஏற்படாமல் காக்கும்.

- Advertisement -

ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கின்ற ராகு தோஷம் காரணமாக வாழ்வில் நற்பலன்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அந்த தோஷம் நீங்கி, மேன்மையான பலன்கள் பெற அனாதை சிறுவர்களுக்கு தங்களின் பிறந்த நாள் நட்சத்திர திதி தினத்தில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதால் ராகு தோஷம் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: சர்ப்பதோஷம் பரிகாரம்

உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் ஒரு கண்ணாடி குடுவையில் எப்பொழுதும் சுத்தமான நீரை நிரப்பி வைக்க வேண்டும். இந்த எளிய பரிகாரம் உங்கள் வீட்டிலும், ஜாதகத்திலும் ராகு பகவானின் தோஷத்தின் தாக்கத்தை குறைக்க கூடியதாக இருக்கிறது.

- Advertisement -