ராகு கேது தோஷத்தை சரி செய்ய எளிமையான பரிகாரம்

rahu kethu black urad dal
- Advertisement -

ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு பாதகமான சூழ்நிலையும், சாதகமான சூழ்நிலையும் ஏற்படும். அந்த வகையில் இப்போது நடைபெற்ற இந்த ராகு கேது பெயர்ச்சியால் பாதகமான சூழ்நிலையை அடைந்த ராசிக்காரர்கள் காளஸ்திரி சென்று பரிகார பூஜைகளை செய்து கொள்வார்கள். பொதுவாக இந்த ராகு கேது பெயர்ச்சியால் ஏற்படும் தோஷத்தை சரி செய்ய ராகு கேது பெயர்ச்சி ஏற்படும் அந்த நேரத்தில் பரிகார பூஜைகள் செய்து கொள்வது உத்தமம்.

அப்படி செய்து கொள்ள முடியாத பட்சத்தில் ராகு கேது பெயர்ச்சி எந்த நட்சத்திரத்தில் நடந்ததோ அந்த நட்சத்திரம் மறுபடியும் வருவதற்குள்ளாக அதாவது 27 நாட்களுக்குள்ளாக பரிகாரம் செய்து விடுவது மிகவும் நல்லது. இந்த ராகு கேது பெயர்ச்சி அன்று பரிகாரம் செய்து கொள்ள முடியாதவர்களும், காளாஸ்திரி சென்று இந்த பரிகாரத்தை செய்து கொள்ள முடியாதவர்களும் எளிமையாக எப்படி செய்வது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ராகு கேது தோஷத்தை சரி செய்ய பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் நவகிரகங்களுக்கு செய்ய வேண்டும். அதற்கு முதலில் இரண்டு ரவிக்கை துணிகளை வாங்க வேண்டும். ஒன்று வான நிறத்தில் உள்ள நீல நிற துண்டு. அடுத்தது பல வண்ணங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு துண்டு. இத்துடன் கருப்பு உளுந்து, கொள்ளும் வாங்கி கொள்ளுங்கள்.

இதை நவகிரக ஆலயத்திற்கு கொண்டு சென்று அர்ச்சகர் இடம் கொடுத்து இந்த கொள்ளு கருப்பு உளுந்து ரவிக்கை துணிகளை வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். இப்படி செய்யும் போது உங்களுக்கு இந்த தோஷத்தின் தாக்கமானது பெருமளவு குறைய வாய்ப்புகள் ஏற்படும். இந்த அர்ச்சனை முடிந்த பிறகு நவகிரகத்தை ஒன்பது முறை முடிந்தால் 108 முறை சுற்றலாம்.

- Advertisement -

இதை செய்ய முடியாதவர்களுக்கும் இன்னொரு எளிமையான பரிகார முறை உள்ளது. அதற்கு அரச மரத்தடி கோவில்களில் இரண்டு நாக சிலைகள் வைத்திருப்பார்கள். இவற்றிற்கு யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம். அங்கு சென்று முதலில் பால் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். அதன் பிறகு மஞ்சளை நன்றாக குழைத்து இந்த நாகங்களின் வால் பகுதியில் தலை பகுதிக்கு பொட்டு வைத்துக் கொண்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு.

இந்த பொட்டு வைக்கும் போது உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த ஒரு பரிகாரத்தையும், வேண்டுதலையும் நம்பிக்கையுன் மனதார வழிபடும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ராகு கேது பெயர்ச்சியின் பாதகத்தை சரி செய்து கொள்ள எளிமையான இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

- Advertisement -