அதி தீவிரமான பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் இந்த 3 விளக்கை ஏற்றினால் போதும். முடிவில்லாமல் தொடரும் பிரச்சனைக்கு கூட, அந்த அம்பாள் முற்றுப்புள்ளி வைத்து விடுவாள்.

durgai
- Advertisement -

சில பேருக்கு விழி பிதுங்கும் அளவிற்கு பிரச்சனைகள் முன்னால் வந்து நிற்கும். பிரச்சனைகளை சரி செய்யவே முடியாது. அதி தீவிரமாக உங்களை வாட்டி வதைக்கும் அந்தப் பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால், குழப்பங்களுக்கு உடனடியாக தெளிவு கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆன்மீகத்தில் ஏதாவது ஒரு வழி உண்டா என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு.

உங்களுக்கு ரொம்பவும் தீர்க்க முடியாத கஷ்டம் இருக்கிறது என்ன செய்தும் பிரச்சனையிலிருந்து வெளிவர முடியவில்லை என்றால், கண்ணை மூடிக்கொண்டு இந்த விளக்கை ஏற்றினால், அந்த அம்பாள் உடனடியாக ஒரு தீர்வினை கொடுத்து விடுவாள். அந்த விளக்கு என்ன எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த நேரத்தில் எப்படி விளக்கு ஏற்ற வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

அதி தீவிரமான பிரச்சனைக்கு தீர்வு தரும் 3 விளக்கு:
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை 3 கிழமையில் வரக்கூடிய ராகு கால நேரத்தில் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியிலிருந்து 4.30 ராகு காலம். வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12 மணி வரை ராகு கால நேரம். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6.00 மணி வரை ராகு கால நேரம்.

செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில், கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மன், நவகிரகத்தில் இருக்கும் ராகு பகவான், பைரவர், இந்த மூன்று பேருக்குமே ஒவ்வொரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதேபோல வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்திலும் கோவிலுக்கு சென்று, மூன்று தெய்வங்களுக்குமே, ஒவ்வொரு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்றும் ராகுகால நேரத்தில் கோவிலுக்கு சென்று மூன்று தெய்வங்களுக்கும் ராகு கால நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். இப்படி ஒரு வாரம் விடாமல் இந்த மூன்று கிழமையிலும், ராகு கால நேரத்தில் இந்த மூன்று தெய்வங்களுக்கும் விளக்கு போட்டு உங்களுக்கு இருக்கும் அந்த தீர்க்க முடியாத, அதி தீவிரமான பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்து பாருங்களேன். ஒரு சில வாரங்களில் உங்கள் கஷ்டத்திற்கு தீர்வினை அந்த ஆண்டவன் கொடுத்துவிடுவான்.

ஆமாங்க கண்கலங்கக்கூடிய கஷ்டமாக இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த ராகுகால நேரத்திற்கு உண்டு. இந்த மூன்று கடவுளுக்கும் உண்டு. தொடர்ந்து ஒரு 11 வாரம் இந்த விளக்கை ஏற்றி வாருங்கள். நம்ப முடியாத அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். விளக்கை ஏற்றி முடித்து விட்டீர்கள். பிரச்சனையும் ஓரளவுக்கு ஓய்ந்து விட்டது. என்ன செய்வது. (இந்த விளக்கை ஏற்றியவர்களுக்கு கஷ்டம் நிச்சயம் தீர்ந்துவிடும்.)

இதையும் படிக்கலாமே: ஆண்கள் இந்த விளக்கை ஏற்றினால் கழுத்தை நெறக்கும் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் தப்பித்துக் கொள்ளலாம்.

உங்கள் பெயரைச் சொல்லி இந்த மூன்று தெய்வங்களுக்கும் தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். உங்களால் முடிந்த விஷயத்தை அந்த கோவிலுக்கு உங்கள் கையால் வாங்கி கொடுங்கள். புடவை, பூ மாலை, பிரசாதம், என்று அது உங்களுடைய சவுகரியும். உங்களுடைய வசதிக்கு ஏற்ப நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள். ஆக மொத்தம் விளக்கு ஏற்றுவதில் மட்டும் எந்த குறையும் வைக்காதீங்க. நம்பிக்கை உள்ளவர்கள் கஷ்டத்தில் உள்ளவர்கள் இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -