ராகு-கேது உங்களுக்கு எந்த மாதிரியான கெடுதலை செய்யும் தெரியுமா? ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

rahu-ketu
- Advertisement -

கிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்கும் ராகு மற்றும் கேது ஒருவருடைய ஜாதகத்தில் சரியான இடத்தில் அமையாவிட்டால் தோஷங்களை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக அந்த ஜாதகர் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது அவசியமாகி விடுகிறது. இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள சுய ஜாதகத்தை ஆராயும் பொழுது பரிகாரம் செய்யச் சொல்வார்கள். ராகு கேது அப்படி என்ன மாதிரியான வேலை செய்கிறது? அதற்கான பரிகாரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

rahu-ketu

ராகு கேது தோஷம் என்பது சர்ப்ப தோஷத்தை குறிக்கிறது. ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 18 மாதங்கள் கழித்து ராகு மற்றும் கேது பெயர்ச்சி ஆகிறது. அப்படி பெயர்ச்சியாகும் பொழுது அது எந்த இடத்தில் நிற்கிறதோ! அந்த வீட்டில் அதிபதி தரக்கூடிய பலன்களை தான் இந்த கிரகங்களும் கொடுக்கும். அதாவது மேஷ ராசியில் இந்த கிரகங்கள் பொழுது மேஷ ராசியின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் பகவான் செய்யக்கூடிய விஷயங்களை இந்த கிரகங்களும் செய்யும்.

- Advertisement -

உங்கள் ராசிக்கு மேஷ ராசியில் ராகு கேது பெயர்ச்சியாகும் பொழுது அதிகமான சீற்றத்தை கொடுக்கும். ரிஷப ராசியில் ஆசைகளை தூண்டிவிடும். மிதுன ராசியில் காதல் உணர்வை அதிகப்படுத்தும், கடக ராசியில் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும், சிம்ம ராசியில் அகங்காரம், ஆணவத்தை பெருக்கும். கன்னி ராசியில் சுயநலமாக செயல்படும் எண்ணத்தை உருவாக்கும். துலாம் ராசியில் தொழில் மற்றும் வியாபாரத்தில் மேன்மையை கொடுக்கும்.

ragu-ketu

விருச்சிக ராசியில் இருக்கும் பொழுது உங்களுக்கு அதிக சுறுசுறுப்பையும், வேகத்தையும் கொடுக்கும். தனுசு ராசியில் இறை நெறியில் ஆர்வத்தையும், மகரம் மற்றும் கும்ப ராசியில் விஷ வாக்கையும், மீன ராசியில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மீது ஆசையையும் உருவாக்கும். ராகு கேது பெயர்ச்சியின் பொழுது எந்த பாவத்தில் இருக்கிறது? என்பதைப் பொறுத்து ராகு-கேது பரிகாரத்தை நாம் மேற்கொள்ளலாம்.

- Advertisement -

ராகு கேது கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ! அந்த நட்சத்திரத்தின் அதி தேவதைகளுக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். பாம்பு படுக்கையை கொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலமும் ராகு-கேது தோஷ நிவர்த்தி செய்யலாம். பிரதோஷ காலங்களில் சிவபெருமான் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்து வர ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக ஸ்வாதி, சதயம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களில் வரும் பிரதோஷ காலம் விசேஷமானதாக கருதப்படுகிறது.

Rahu Ketu

தை, ஆடி போன்ற மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் காப்பு அணிவித்து, விளக்கு ஏற்றி வர காலசர்ப்ப தோஷங்கள் விலகும். ராகு கேது பரிகார ஸ்தலங்களில் பரிகாரம் செய்வதும் சிறந்த பலனை கொடுக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் 5, 6, 7, 8 ஆகிய இடங்களில் ராகு பகவான் அமைந்திருந்தால் உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும். இவர்கள் அதிகம் விஷத் தன்மை உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தை பாக்கியம் தடைபடும். நீங்கள் கண்டிப்பாக ராகு கேது பரிகாரம் செய்தால் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த குபேர பொம்மையை வீட்டில் வைத்திருந்தால் பண கஷ்டம் வரத்தான் செய்யும். வீட்டில் வைக்கக்கூடாத குபேர பொம்மை எது, என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -