ராகு பரிகாரம் | Rahu pariharam in Tamil

Rahu pariharam in Tamil
- Advertisement -

பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில் வேறு எந்த கிரகங்கள் பாதகமான நிலையில் இருந்தாலும், ராகு மட்டும் நல்ல நிலையில் இருந்தாலோ அல்லது சுப கிரகங்களின் பார்வை பட்டாலோ, அந்த ஜாதகர் பல மடங்கு நற்பலன்களை பெறுவார். அதே நேரம் இந்த ராகு பாதகமான அமைப்பில் இருந்தால், பல மடங்கு கெடு பலன்கள் அவருக்கு ஏற்படும். இதற்காக அந்த நபர் செய்ய வேண்டிய ராகு பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

ராகு பரிகாரம்

ஒருவருக்கு ஜாதகத்தில் பாதகமாக நிலையில் இருக்கின்ற ராகு பகவானால் கெடு பலன்கள் ஏற்படாமல் நன்மைகள் ஏற்படவும், ராகு கிரக தோஷங்கள் நீங்கவும் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ராகு கால நேரத்தில் உங்கள் வீட்டு பூஜை அறையிலையோ அல்லது துர்க்கை அம்மன் கோயிலிலேயோ அம்மனுக்கு நெய் விளக்கேற்றி, ‘ஓம் துர்காய நம” என்கிற மந்திரத்தை 108 முறைகள் துதித்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு ராகு பகவானின் அருள் கிடைத்து, வாழ்வில் நன்மைகள் ஏற்படும். இந்த பரிகாரம் செய்கின்ற தினத்தன்று புலால் உணவுகள், போதைப் பொருட்கள் பயன்படுத்ததல் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

ராகு பகவானின் அருளைப் பெறவும், ஜாதகத்தில் பலவீனப்பட்டிருக்கின்ற ராகு கிரகத்தை பலப்படுத்தவும், அடர் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் போர்வைகள் போன்றவற்றை முதியவர்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள், பணியாளர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு ஏதேனும் செவ்வாய்க்கிழமை தினத்தன்று தானம் அளிப்பது நல்ல பலனை தரும்.

- Advertisement -

ராகு பகவானின் அருட்கடாட்சத்தை பெறுவதற்கு, கருப்பு நிறத்தில் இருக்கின்ற தானியங்களை பறவைகளுக்கு உணவாக கொடுத்து வருவது நல்லது. செவ்வாய்க்கிழமைகளில் எறும்புகளுக்கு வெல்லத்தை உணவாக கொடுப்பதும், ராகு பகவானால் வாழ்வில் பாதகப் பலன்கள் ஏற்படாமல் காக்கும்.

ராகு பகவானின் நல்லருளை பெறுவதற்கு உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய செம்பு பாத்திரம் நிறைய தண்ணீர் வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரம் வீட்டில் ராகு கிரகத்தின் ஆதிக்கத்தை குறைத்து, அங்கு வசிப்பவர்களுக்கு நன்மைகளை உண்டாகச் செய்யும் ஒரு எளிய பரிகாரமாகும்.

- Advertisement -

கோயில்களுக்கோ அல்லது ஏதேனும் ஒரு அன்னதான கூடத்திற்கோ பூண்டு, கடுகு எண்ணெய், வெங்காயம் போன்றவற்றை சனிக்கிழமைகளில் தானம் அளிப்பதால் ஜாதகத்தில் ராகு திசை, ராகு புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் கெடுபலன்கள் ஏற்படாமல் நன்மைகள் உண்டாகச் செய்யும்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைக்க பரிகாரம்

உங்களின் பை, பணப்பை, கல்லாப்பெட்டி போன்றவற்றில் ஒரு மயிலிறகு வைத்துக் கொள்ள வேண்டும், இது ராகு கிரகத்தின் எதிர்மறையான அதிர்வலைகள் உங்கள் தாக்காமல் தடுக்கும் ஒரு கவசமாக செயல்படும் என தாந்திரீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

- Advertisement -