அரச இலையுடன் இந்த 2 பொருளை சேர்த்து உங்கள் கையோடு வைத்துக் கொண்டால் போதும். ராஜ வாழ்க்கை உங்களுடனே இருக்கும்.

arasailai
- Advertisement -

சுகபோகமான ராஜ வாழ்க்கையை வாழ யாருக்குத்தான் பிடிக்காது. ராஜ வாழ்க்கை என்றால், எந்த வேலையையும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயே அமர்ந்து சொகுசாக சாப்பிடுவது அல்ல. நாம் செல்லக்கூடிய இடத்தில் சீரும் சிறப்புமாக மரியாதை நமக்கு கிடைக்கவேண்டும். நாம் செய்யக்கூடிய வேலையில் நம்முடனே வெற்றி தொடரவேண்டும். வாழ்க்கையில் நீங்கள் ஒருமுறை ஜெயித்து விட்டால், நீங்கள் என்ன சொன்னாலும் அதை இந்த உலகமே கேட்டு தலையாட்டி கொள்ளும். அதுவே தோற்றவன் என்னதான் நல்ல விஷயங்களை சொன்னாலும் அதைக் கேட்க இந்த உலகத்தில் ஒரு ஈ எறும்பு கூட இருக்காது என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இந்த பதிவினை தொடர்வோம்.

அரசனைப் போல புகழும் பாராட்டுகளும் நமக்கு குவிய வேண்டும். ஒரு அரசருக்கு உண்டான மரியாதையை, நாமும் பெற வேண்டும் என்றால் நாம் இந்த ஒரு பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். வெறும் ஒரே ஒரு அரச இலையை நம் கையில் வைத்துக் கொண்டாலே நமக்கு நடப்பது எல்லாமே நல்லதாக தான் நடக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால், அந்த அரச இலையோடு ஒரே ஒரு கிராம்பு, ஒரு ஏலக்காயை வைத்து மடித்து உங்களுடன் வைத்துக் கொள்ளும் போது, அரச இலையில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் இரட்டிப்பாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

அரசியலில் ஏலக்காய் 1, கிராம்பு 1, வைத்து அப்படியே மடித்து ஒரு நூல் போட்டு கட்டிக் கொள்ளலாம் பிரியாமல் இருப்பதற்கு. இந்த அரச இலை முடிச்சை அப்படியே தொழில் செய்யும் இடத்தில் வைத்தால் தொழிலில் வரக்கூடிய எதிர்ப்புகள் குறையும். தொழிலில் லாபம் அதிகரிக்க தொடங்கும்.

இந்த முடிச்சை உங்கள் கையோடு வைத்துக் கொண்டால், உங்களை சுற்றி எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜி உண்டாகி கொண்டே இருக்கும். உடல் சோர்வு அடையாமல் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். நீங்கள் செய்யக்கூடிய, நீங்கள் தொடக்கூடிய எந்த ஒரு காரியமும் வெற்றியடையும். தானாகவே உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை புகழ தொடங்கிவிடுவார்கள்.

- Advertisement -

பிறகு என்ன? வாழ்க்கையில் வெற்றி நம் பக்கம் வந்து விட்டால் மதிப்பும் மரியாதையும் ராஜா உபச்சாரமும் தானாக தேடி வரப்போகிறது. இந்த முடிச்சை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் வைத்திருக்கும் இலை ஒரு சில நாட்களில் காய்ந்து போனாலும் பரவாயில்லை. அதில் இருக்கும் சக்தி அப்படியேதான் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை அரச இலை ஏலக்காய் கிராம்பு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதியதாக இதேபோல ஒரு முடிச்சு தயார் செய்து கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த முடிச்சை தயார் செய்து உங்களுடன் வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்களிலேயே நல்ல வித்தியாசம் தெரியும். அப்படி வித்தியாசம் உங்கள் வாழ்க்கையில் தெரிய தொடங்கி விட்டால், இந்த பரிகாரத்தை அப்படியே பற்றிக் கொள்ளுங்கள். விட்டுவிடாதீர்கள், வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறுவதற்கு இது ஒரு சுலபமான வழி என்று கூட சொல்லலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -