ராஜயோகம் தரும் மகா சிவராத்திரி

sivan dheepam
- Advertisement -

இந்துக்களின் வழிபாடுகளில் மிக முக்கியமான விரத நாளாகவும் வழிபாடு நாளாகவும் கொண்டாடப்படுவது தான் இந்த மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வணங்கும் போது நம்முடைய பாவங்கள் அனைத்தும் தொலைந்து புண்ணியம் சேரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

அத்தகைய அற்புதமான தினத்தில் நாம்ராஜ யோகத்தை பெறக்கூடிய இன்னொரு வழிமுறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம் அற்புதமான நாளில் இந்த ஒரு விஷயத்தை கடைப்பிடித்து அனைவரும் ராஜயோக வாழ்க்கை வாழ்வதற்கான அதிர்ஷ்டத்தை பெறலாம்.

- Advertisement -

ராஜயோகம் தரும் மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதத்தில் தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியை சிவராத்திரி ஆக நாம் வழிபாடு செய்கிறோம் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மகா சிவராத்திரி ஆக நாம் கொண்டாடப்படுகிறோம் இந்த நாளில் சிவபெருமானை வணங்கும்போது நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.

இந்த மகா சிவராத்திரி நாளைய தினம்வெள்ளிக்கிழமை வந்திருக்கிறது அன்றைய தினம் பிரதோஷமும் இருக்கிறது. சுக்கிர வார பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இணைந்து வந்திருக்கக் கூடிய இந்த அற்புதமான நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு காரியம் நம்முடைய பண கஷ்டங்கள் அனைத்தையும் நீங்கி ராஜபோக வாழ்க்கை வாழ வழிவகுக்கும்.

- Advertisement -

மகா சிவராத்திரி அன்று காலை முதலில் விரதம் இருக்க துவங்கி விட வேண்டும் மாலை பிரதோஷ காலம் முடிந்த பிறகு சிவராத்திரி பூஜைகள் ஆரம்பிக்கும். இதில் நான்கு கால பூஜைகள் செய்வார்கள், எந்த பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் இரவு 11.45 முதல் 12.15 வரையிலான லிங்கோத்பவர் காலத்தில் கட்டாயமாக கண் விழித்து சிவபெருமானை வழிபடுவது நல்லது.

இந்த நேரத்தில் நீங்கள் வேண்டும் எதுவும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு காரியம் ஆலயத்தில் நாளை நெய் தீபம் ஏற்ற வேண்டும். அதாவது நாளை மாலை தான் சதுர்த்திசி தொடங்குகிறது. அந்த நேரத்தில் ஆலயத்திற்கு சென்று சுத்தமான பசு நெய்யில் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த பசு நெய் தீபத்தை ஆலயத்தின் சார்பாக எரியும் விளக்கில் நெய் ஊற்றியும் ஏற்றலாம். ஆனால் இன்னொருவர் ஏற்றிய தீபத்தில் நெய் ஊற்றி ஏற்றக் கூடாது. அதே போல் அந்த விளக்கை சுத்தம் செய்யாமல் நெய் ஊற்றி ஏற்றாதீர்கள் இது பலனை தராது. பசுவில் இருந்து கிடைக்கும் அனைத்திலும் மகாலட்சுமி தாயாரின் வாசம் இருப்பதாக ஐதீகம்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய வருமானம் அதிகரிக்க தீப வழிபாடு

நாளைய தினத்தில் நீங்கள் ஏற்றக்கூடிய இந்த ஒரு தீபம் உங்களுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய யோகத்தை அமைத்துக் கொடுக்கும். அற்புதமான இந்த நாளை பயன்படுத்தி நம்முடைய கஷ்டங்கள் தீர்ந்து ராஜபோக வாழ்க்கை வாழ வழி தேடிக் கொள்வோம். இந்த வழிகாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறுங்கள்.

- Advertisement -